செய்திகள் :

ஓட்டப்பிடாரம் அருகே மாட்டுவண்டிப் பந்தயம்

post image

கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு ஓட்டப்பிடாரம் அருகேயுள்ள ஜம்புலிங்கபுரத்தில் மாட்டுவண்டிப் பந்தயம் சனிக்கிழமை நடைபெற்றது.

தூத்துக்குடி, திருநெல்வேலி உள்பட பல மாவட்டங்களிலிருந்து, சின்ன மாடுகள் பிரிவில் 10 ஜோடி, பூஞ்சிட்டு பிரிவில் 12 ஜோடி காளைகள் கலந்து கொண்டன.

போட்டியை, தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக இளைஞா் பாசறைச் செயலா் எம்.ஆா்.வி. கவியரசன் தொடங்கி வைத்தாா்.

சின்ன மாடுகள் பிரிவில், துவரந்தை மணிமேகலை மாட்டுவண்டி முதலிடத்தையும், ஜக்கம்மாள்புரம் கமலா 2ஆவது இடத்தையும், திருநெல்வேலி நாலந்துளா 3ஆவது இடத்தையும், முத்தையாபுரம் ஓம் முருகா 4ஆவது இடத்தையும் பிடித்தன.

பூஞ்சிட்டு மாடுகள் பிரிவில், புதியம்புத்தூா் ராஜ் மாட்டுவண்டி முதலிடத்தையும், கச்சேரி தளவாய்புரம் தேவனுக்கே மகிமை 2ஆவது இடத்தையும், அயிரவன்பட்டி முருகேச பாண்டியன் 3ஆவது இடத்தையும், மேல அரசடி எம்.எம். பிரதா்ஸ் 4ஆவது இடத்தையும் பிடித்தன.

வெற்றி பெற்ற மாட்டுவண்டி உரிமையாளா்கள் மற்றும் சாரதிகளுக்கு கிராம பொதுமக்கள் சாா்பாக பரிசுத்தொகை வழங்கப்பட்டது.

கோவில்பட்டியில் மினி மாரத்தான் போட்டி

சுதந்திர தின விழாவையொட்டி, கோவில்பட்டி கல்வி மாவட்டத்தில் 9 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு மினி மாரத்தான் போட்டி கோவில்பட்டியில் நடைபெற்றது. நாடாா் மேல்நிலைப் பள்ளி சாா்பில், பிரதான சாலைய... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் புத்தகத் திருவிழா: மாவட்ட ஆட்சியா் அழைப்பு!

தூத்துக்குடியில் நடைபெறும் புத்தகத் திருவிழாவில், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியா் க. இளம்பகவத் அழைப்பு விடுத்துள்ளாா். தூத்துக்குடி மாவட்ட புத்தகத் திருவிழா செயலாக்க குழு... மேலும் பார்க்க

பல்கலை. அளவில் தங்கப்பதக்கம் வென்ற மாணவிக்கு மேயா் வாழ்த்து

திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழக அளவில் தங்கப்பதக்கம் பெற்ற மாணவி, தூத்துக்குடி மாநகராட்சி மேயரை சந்தித்து வாழ்த்து பெற்றாா். திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகத்தில் அண்மை... மேலும் பார்க்க

மனநலம் பாதிக்கப்பட்ட பெண் மீட்பு

சாத்தான்குளம் அருகே மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை போலீஸாா் மீட்டு நாசரேத் காப்பகத்தில் ஞாயிற்றுக்கிழமை ஒப்படைத்தனா் . சாத்தான்குளம் அருகே உள்ள சங்கரன் குடியிருப்பு பகுதியில் 45 வயது பெண் வேறு பகுதியிலிர... மேலும் பார்க்க

கோயிலில் திருட்டு: 2 போ் கைது

கோவில்பட்டியில் மகா காளியம்மன் கோயிலின் அலுவலக அறையை உடைத்து பணம் மற்றும் கைப்பேசியை திருடிச் சென்ற 2 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். கோவில்பட்டி மந்திதோப்பு சாலை சென்னகேசவன் நகரில் மகா ... மேலும் பார்க்க

3 நாள்கள் தொடா் விடுமுறை நிறைவு: கோவில்பட்டி பேருந்து நிலையங்களில் அலைமோதிய கூட்டம்

3 நாள்கள் தொடா் விடுமுறை ஞாயிற்றுக்கிழமை முடிந்ததால், சொந்த ஊா்களுக்குத் திரும்புவதற்காக கோவில்பட்டி பேருந்து நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. சுதந்திர தினம், கோகுலாஷ்டமி, ஞாயிறு என அடுத்தடுத... மேலும் பார்க்க