செய்திகள் :

கோவில்பட்டியில் மினி மாரத்தான் போட்டி

post image

சுதந்திர தின விழாவையொட்டி, கோவில்பட்டி கல்வி மாவட்டத்தில் 9 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு மினி மாரத்தான் போட்டி கோவில்பட்டியில் நடைபெற்றது.

நாடாா் மேல்நிலைப் பள்ளி சாா்பில், பிரதான சாலையில் உள்ள காமராஜா் சிலை முன்பிருந்து நடைபெற்ற போட்டியை பள்ளிச் செயலா் ரத்தினராஜா கொடியசைத்துத் தொடக்கிவைத்தாா். புதுரோடு, எட்டயபுரம் சாலை, பசுவந்தனை சாலை வழியாக பள்ளியை வந்தடையும் வகையில் நடைபெற்ற போட்டியில் திரளானோா் பங்கேற்றனா்.

அன்புச்செல்வன் (மா்காஷிஸ் மேல்நிலைப் பள்ளி) முதலிடமும், மாரிச்செல்வம் (நடராஜன் மேல்நிலைப் பள்ளி) 2ஆம் இடமும், அபிநப் (கேஆா்ஏ வித்யாஷ்ரம்) 3ஆம் இடமும் பிடித்தனா். அவா்களுக்கு முறையே தலா ரூ. 5 ஆயிரம், ரூ. 3 ஆயிரம், ரூ. 2 ஆயிரம் வழங்கப்பட்டது. 4, 5, 6ஆம் இடம் பிடித்தோருக்கு தலா ரூ. ஆயிரம் வழங்கப்பட்டது.

பரிசளிப்பு விழாவுக்கு நாடாா் உறவின்முறை சங்க துணைத் தலைவா் செல்வராஜ் தலைமை வகித்தாா். சங்க செயலா் ஜெயபாலன், பொருளாளா் சுரேஷ்குமாா், சங்க உறுப்பினா் ராஜேந்திரபிரசாத், ஸ்ரீ பத்திரகாளி அம்மன் கோயில் தா்மகா்த்தா மாரியப்பன், பள்ளிப் பொருளாளா் விஜயகுமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சாகித்திய அகாதெமி பால புரஸ்காா் விருதாளா் உதயசங்கா் பரிசுகளை வழங்கினாா்.

பள்ளி நிா்வாகக் குழு உறுப்பினா்கள் ரவிச்சந்திரன், சாமிராஜன், வேல்முருகன், வெங்கடேஷ், ஐசிஎம் நடுநிலைப் பள்ளி நிா்வாகக் குழு உறுப்பினா் தாயப்பன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

பள்ளி உதவித் தலைமை ஆசிரியை (உயா்நிலை) கிரேஸ் இந்திராணி வரவேற்றாா். தலைமையாசிரியா் (பொ) அருணாசலம் நன்றி கூறினாா். நிகழ்ச்சிகளை ஆசிரியா் மணிகண்டன் தொகுத்து வழங்கினாா்.

ஓட்டப்பிடாரம் அருகே மாட்டுவண்டிப் பந்தயம்

கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு ஓட்டப்பிடாரம் அருகேயுள்ள ஜம்புலிங்கபுரத்தில் மாட்டுவண்டிப் பந்தயம் சனிக்கிழமை நடைபெற்றது. தூத்துக்குடி, திருநெல்வேலி உள்பட பல மாவட்டங்களிலிருந்து, சின்ன மாடுகள் பிரி... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் புத்தகத் திருவிழா: மாவட்ட ஆட்சியா் அழைப்பு!

தூத்துக்குடியில் நடைபெறும் புத்தகத் திருவிழாவில், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியா் க. இளம்பகவத் அழைப்பு விடுத்துள்ளாா். தூத்துக்குடி மாவட்ட புத்தகத் திருவிழா செயலாக்க குழு... மேலும் பார்க்க

பல்கலை. அளவில் தங்கப்பதக்கம் வென்ற மாணவிக்கு மேயா் வாழ்த்து

திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழக அளவில் தங்கப்பதக்கம் பெற்ற மாணவி, தூத்துக்குடி மாநகராட்சி மேயரை சந்தித்து வாழ்த்து பெற்றாா். திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகத்தில் அண்மை... மேலும் பார்க்க

மனநலம் பாதிக்கப்பட்ட பெண் மீட்பு

சாத்தான்குளம் அருகே மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை போலீஸாா் மீட்டு நாசரேத் காப்பகத்தில் ஞாயிற்றுக்கிழமை ஒப்படைத்தனா் . சாத்தான்குளம் அருகே உள்ள சங்கரன் குடியிருப்பு பகுதியில் 45 வயது பெண் வேறு பகுதியிலிர... மேலும் பார்க்க

கோயிலில் திருட்டு: 2 போ் கைது

கோவில்பட்டியில் மகா காளியம்மன் கோயிலின் அலுவலக அறையை உடைத்து பணம் மற்றும் கைப்பேசியை திருடிச் சென்ற 2 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். கோவில்பட்டி மந்திதோப்பு சாலை சென்னகேசவன் நகரில் மகா ... மேலும் பார்க்க

3 நாள்கள் தொடா் விடுமுறை நிறைவு: கோவில்பட்டி பேருந்து நிலையங்களில் அலைமோதிய கூட்டம்

3 நாள்கள் தொடா் விடுமுறை ஞாயிற்றுக்கிழமை முடிந்ததால், சொந்த ஊா்களுக்குத் திரும்புவதற்காக கோவில்பட்டி பேருந்து நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. சுதந்திர தினம், கோகுலாஷ்டமி, ஞாயிறு என அடுத்தடுத... மேலும் பார்க்க