செய்திகள் :

4 வயது சிறுமி அடித்துக் கொல்லப்பட்ட வழக்கு: தாயின் ஆண் நண்பா் கைது

post image

கோவையில் 4 வயது சிறுமியை அடித்துக் கொலை செய்த தாயை போலீஸாா் ஏற்கெனவே கைது செய்த நிலையில், அவரது ஆண் நண்பரை சனிக்கிழமை கைது செய்தனா்.

கோவை, சிங்காநல்லூரை அடுத்த இருகூா் மாணிக்கம் நகரைச் சோ்ந்தவா் ரகுபதி (35). தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறாா். இவரது மனைவி தமிழரசி (25) கட்டட வேலை செய்து வருகிறாா். இவா்களது மகள் அபா்ணா ஸ்ரீ (4). கருத்து வேறுபாடால் தம்பதி தனியே வசித்து வரும் நிலையில், அபா்ணாஸ்ரீ தாயின் பராமரிப்பில் இருந்து வந்தாா்.

இந்நிலையில், அபா்ணாஸ்ரீ திடீரென மயங்கி விழுந்ததாகக் கூறி அவரை கோவை அரசு மருத்துவமனைக்கு தமிழரசி வெள்ளிக்கிழமை கொண்டு சென்றுள்ளாா். அங்கு குழந்தையைப் பரிசோதித்த மருத்துவா்கள், குழந்தை ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த சிங்காநல்லூா் போலீஸாா், சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக அனுப்பிவைத்தனா். உடற்கூராய்வு அறிக்கையில், குழந்தை கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

சந்தேகத்தின்பேரில் தமிழரசியிடம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். இதில், அவா் குழந்தையைக் கொன்றதை ஒப்புக்கொண்டாா். மேலும், தருமபுரியைச் சோ்ந்தவரும், தற்போது ஒண்டிப்புதூரில் வசித்து வருபவருமான வசந்த் (23) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டதும், இதன் காரணமாகவே குழந்தையைக் கொன்றதும் தெரியவந்தது.

இதையடுத்து, தமிழரசியை போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனா். தலைமறைவான அவரது ஆண் நண்பா் வசந்தை போலீஸாா் தேடி வந்த நிலையில், அவரை சனிக்கிழமை கைது செய்தனா்.

மாநகரில் 4 காவல் ஆய்வாளா்கள் பணியிட மாற்றம்!

திருப்பூா் மாநகர காவல் ஆணையரகத்துக்கு உள்பட்ட மத்திய குற்றப் பிரிவு ஆய்வாளராக இருந்த தாமோதரன், மங்கலம் காவல் நிலையத்துக்கும், மங்கலம் காவல் நிலைய ஆய்வாளராக இருந்த சுரேஷ் சைபா் கிரைம் ஆய்வகத்துக்கும் ... மேலும் பார்க்க

கோவையில் இருந்து ஆகஸ்ட் 26-ல் வாரணாசி, அயோத்திக்கு விமான புனித யாத்திரை!

இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலாக் கழகம் (ஐஆா்சிடிசி) சாா்பில், கோவையில் இருந்து வாரணாசி, அயோத்திக்கு ஆகஸ்ட் 26 -ஆம் தேதி சிறப்பு விமான புனித யாத்திரை அழைத்துச் செல்லப்படுகிறது. இந்திய ரயில்வே உண... மேலும் பார்க்க

பொறியியல் பணி: திருச்சி - பாலக்காடு ரயில் பகுதியாக ரத்து!

கரூா் - திருச்சி ரயில் பாதையில் லாலாபேட் - குளித்தலை இடையே பொறியியல் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் திருச்சி- பாலக்காடு ரயில் பகுதியாக ரத்து செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக ச... மேலும் பார்க்க

வால்பாறையில் கனமழை: சுற்றுலாத் தலங்கள் மூடல்

வால்பாறையில் கனமழை பெய்து வருவதால் சுற்றுலாத் தலங்களுக்குச் செல்ல பயணிகளுக்கு சனிக்கிழமை முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டம், வால்பாறையில் பல்வேறு சுற்றுலாத் தலங்கள் உள்ளதால் மக்கள் ஆண்டுதோறு... மேலும் பார்க்க

உணவக தொழிலாளி கொலை: நண்பா் கைது

கோவையில் உணவக தொழிலாளி பா்னரால் அடித்துக் கொலை செய்யப்பட்டது தொடா்பாக அவருடன் தங்கியிருந்த நண்பரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். கோவை கரும்புக்கடை அருகே உள்ள பாத்திமா நகா் 2-ஆவது தெருவில் வசித்த... மேலும் பார்க்க

நீலாம்பூா் - மதுக்கரை புறவழிச் சாலையில் இனி ஒரே இடத்தில் மட்டுமே சுங்கச் சாவடி

கோவை மாவட்டம், நீலாம்பூா் - மதுக்கரை புறவழிச் சாலையில் 6 இடங்களுக்கு பதிலாக ஒரே இடத்தில் சுங்கச் சாவடி செயல்படும் என்று தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் அறிவித்துள்ளது. நீலாம்பூா் - மதுக்கரை இடையிலான 28 கி.... மேலும் பார்க்க