செய்திகள் :

43 ஆண்டுகள் கழித்து 104 வயதில் விடுதலையான ஆயுள் தண்டனைக் கைதி!

post image

உத்தரப் பிரதேசத்தில் ஆயுள் தண்டனைப் பெற்ற கைதி ஒருவர் 43 ஆண்டுகள் கழித்து, தனது 104 வயதில் சிறையிலிருந்து விடுதலைச் செய்யப்பட்டுள்ளார்.

கௌஷம்பி மாவட்டத்தின் கௌராயி கிராமத்தைச் சேர்ந்தவர் லங்கன் (வயது 104), இவர் கடந்த 1921 ஆம் ஆண்டு ஜனவரி 4 ஆம் தேதியன்று பிறந்ததாக அவரது ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 1977-ம் ஆண்டு ஆகஸ்ட் 16 ஆம் தேதியன்று, இரண்டு தரப்புக்கு இடையில் உண்டான மோதலில் பிரபு சரோஜ் என்பவர் கொல்லப்பட்டார். அந்தக் கொலை வழக்கில் தொடர்புடையவர்கள் என்று லங்கன் மற்றும் அவருடைய கூட்டாளிகள் 3 பேர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

அதையடுத்து, இந்த வழக்கில் கடந்த 1982-ம் ஆண்டு அவர்கள் நால்வருக்கும் பிரக்யராஜ் மாவட்ட நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து, சிறையில் அடைத்தது.

இந்நிலையில், அந்தத் தீர்ப்பை எதிர்த்து அவர்கள் நால்வரும் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கு நடைபெற்ற வந்த காலத்திலேயே அவர்களில் மூன்று பேர் காலமாகியுள்ளனர்.

இதையடுத்து, இந்த வழக்கிலிருந்து கடந்த மே 2 ஆம் தேதியன்று, லங்கனை அலகாபாத் நீதிமன்றம் விடுவித்து தீர்ப்பளித்துள்ளது. இதனால், கடந்த மே 20 ஆம் தேதியன்று லங்கன் கௌஷம்பி மாவட்ட சிறையிலிருந்து சுமார் 43 ஆண்டுகளுக்குப் பின்னர் விடுதலைச் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் இன்று (மே 23) தெரிவித்துள்ளனர்.

104 வயதில் முதியவராக விடுதலைச் செய்யப்பட்டுள்ள அவர் அம்மாவட்டத்தின் ஷரைரா பகுதியில் வசிக்கும் அவரது மகளிடம் பத்திரமாக ஒப்படைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதையும் படிக்க: பாகிஸ்தானுக்கு இனி அதிக நாள்கள் இல்லை: யோகி ஆதித்யநாத் பேச்சு!

பஞ்சாபில் கைதான ஆம் ஆத்மி எம்எல்ஏவுக்கு 5 நாள் காவல்

பஞ்சாபில் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஆம் ஆத்மி எம்.எல்.ஏ ராமன் அரோராவுக்கு 5 நாள்கள் போலீஸ் காவல் விதிக்கப்பட்டுள்ளது. ஜலந்தர் மத்திய சட்டப்பேரவைத் தொகுதியைச் சேர்ந்த ஆளும் ஆம்ஆத்மி எம்எல்ஏ ராமன் ... மேலும் பார்க்க

ரூ.25 லட்சம் பண மோசடி: சக வீராங்கனை மீது தீப்தி சர்மா புகார்!

யுபி வாரியர்ஸ் அணி வீராங்கனை ஆருஷி கோயல் ரூ.25 லட்சம் பண மோசடியில் ஈடுபட்டதாக, அணியின் கேப்டனும் இந்திய கிரிக்கெட் வீராங்கனையுமான தீப்தி சர்மா பரபரப்பு புகாரளித்துள்ளார்.சமீபத்தில் முடிவடைந்த மகளிர் ப... மேலும் பார்க்க

அசாமில் 9 வங்கதேசத்தினர் கைது

அசாமில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 9 வங்கதேசத்தவர்கள் சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர். மோரிகான், மிகிர்பேட்டா மற்றும் தரம்துல் காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் இருந்து தலா இரண்டு பேரும், ஜாகி... மேலும் பார்க்க

கேரளம்: கடலில் மூழ்கிய சரக்குக் கப்பல்! பொதுமக்களுக்கு பேரிடர் மேலாண்மை எச்சரிக்கை!

கொச்சி செல்லவிருந்த சரக்குக் கப்பல் மூழ்கி விபத்துக்குள்ளானது.கேரள மாநிலத்தின் திருவனந்தபுரத்தின் விழிஞ்ஞம் துறைமுகத்தில் இருந்து கொச்சி சென்று கொண்டிருந்த சரக்குக் கப்பல், அரபிக் கடலில் மூழ்கியதாகத் ... மேலும் பார்க்க

பிரதமர் மோடியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!

நீதி ஆயோக் கூட்டம் நிறைவு பெற்றதையடுத்து பிரதமர் மோடியைச் சந்தித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசியுள்ளார். ஆண்டுதோறும் நடைபெறும் நீதி ஆயோக் கூட்டம், தில்லி பாரத் மண்டபத்தில் பிரதமர் மோடி தலைமையில் இன்ற... மேலும் பார்க்க

இந்தியாவின் ஒற்றுமையைக் கேள்விக்குள்ளாக்குவதே ராகுலின் பழக்கம்: ஜோதிராதித்ய சிந்தியா

இந்தியர்கள் ஒன்றுபட்டிருந்தாலும், நாட்டின் ஒற்றுமையைக் கேள்விக்குள்ளாக்கும் பழக்கம் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியிடம் இருப்பதாக மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா கூறியுள்ளார். வெளியு... மேலும் பார்க்க