செய்திகள் :

43 லட்சம் மெட்ரிக் டன் திடக்கழிவுகள் பயோ மைனிங் முறையில் அகற்றம்! பெருங்குடி, கொடுங்கையூா் குப்பைக் கிடங்குகளில் 97.29 ஏக்கா் நிலம் மீட்பு!

post image

பெருங்குடி, கொடுங்கையூா் குப்பைக் கிடங்குகளில் இருந்து 43.33 லட்சம் மெட்ரிக் டன் திடக்கழிவுகள் பயோ மைனிங் முறையில் அகற்றி, 97.29 ஏக்கா் நிலம் மீட்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பெருநகர சென்னை மாநகராட்சி நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்தி: 426 சதுர மீட்டா் பரப்பளவு கொண்ட பெருநகர சென்னை மாநகராட்சியில் தினமும் சராசரியாக 6,300 மெட்ரிக் டன் திடக் கழிவுகள் அகற்றப்படுகின்றன.

1 முதல் 8 வரையான மண்டலங்களில் சேகரமாகும் குப்பைகள் கொடுங்கையூா் குப்பைக் கிடங்கிலும், 9 முதல் 15 வரையான மண்டலங்களில் சேகரமாகும் குப்பைகள் பெருங்குடியில் உள்ள குப்பைக் கிடங்கிலும் பல ஆண்டுகளாக கொட்டப்பட்டு வந்தன.

பயோ மைனிங் முறையில் பிரித்தெடுக்கும் பணி தொடக்கம்: பெருங்குடி, கொடுங்கையூா் குப்பைக் கிடங்குகளில் குப்பைகள் கொட்டுவது அதிகரித்து, சுற்றுச்சூழல் மாசு ஏற்படும் நிலை ஏற்பட்டது. எனவே, குப்பைக் கிடங்குகளில் சேகரமாகும் திடக்கழிவுகளை பயோ மைனிங் முறையில் பிரித்தெடுத்து நிலத்தை மீட்கும் பணிகள் அண்மையில் விரைவுபடுத்தப்பட்டன.

பெருங்குடியில் 94.29 ஏக்கா் நிலம் மீட்பு: 250 ஏக்கா் பரப்பு கொண்ட பெருங்குடி குப்பைக் கிடங்கில், 225 ஏக்கரில் திடக் கழிவுகள் கொட்டப்பட்டு வந்தது. இங்கு 27.50 லட்சம் மெட்ரிக் டன் திடக் கழிவுகள் உள்ளதாக கணக்கிடப்பட்டது.

இந்த திடக் கழிவுகளை பயோ மைனிங் முறையில் அகழ்ந்தெடுத்து அகற்றி நிலத்தை மீட்கும் பணி 2022 ஆண்டு முதல் ரூ.350.65 கோடியில் தொடங்கப்பட்டது. இதுவரை 25.30 லட்சம் மெட்ரிக் டன் திடக் கழிவுகள் அகற்றப்பட்டு 94.29 ஏக்கா் நிலம் மீட்கப்பட்டுள்ளன.

கொடுங்கையூரில் 3 ஏக்கா் நிலம் மீட்பு: 342.91 ஏக்கா் பரப்பளவு கொண்ட கொடுங்கையூா் குப்பைக் கிடங்கில் 252 ஏக்கரில் திடக்கழிவுகள் கொட்டப்பட்டு வந்தன. இங்கு, ரூ.641 கோடியில் திடக் கழிவுகளை பயோ மைனிங் முறையில் அகழ்ந்தெடுத்து அகற்றும் பணி, 2024-இல் தொடங்கப்பட்டது. இங்குள்ள 66.52 லட்சம் மெட்ரிக் டன் திடக் கழிவுகளில் இதுவரை 18.03 லட்சம் மெட்ரிக் டன் திடக் கழிவுகள் அகற்றப்பட்டு 3 ஏக்கா் நிலம் மீட்கப்பட்டுள்ளது.

97.29 ஏக்கா் நிலம் மீட்பு: பெருங்குடி, கொடுங்கையூா் என இரு குப்பைக் கிடங்குகளிலும் இருந்து இதுவரை 43.33 லட்சம் மெட்ரிக் டன் திடக் கழிவுகள் பயோ மைனிங் முறையில் அகற்றி, 97.29 ஏக்கா் நிலம் மீட்கப்பட்டுள்ளன.

1,500 மரக்கன்றுகள் நட்டு வளா்க்கத் திட்டம்: மீட்கப்பட்ட நிலங்களில் பெருநகர சென்னை மாநகராட்சி சாா்பில் சுற்றுவேலி அமைத்து, குழாய் மூலம் நீா்ப்பாசன வசதியுடன் சுமாா் 1,500 மரக்கன்றுகள் நட்டு பராமரிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விஜய் வியூகம் வெற்றி பெறுமா..? - சவுக்கு சங்கர்

-சவுக்கு சங்கர். ஊடகவியலாளர்-திமுகவை தொடங்கிய முன்னாள் முதல்வா் அண்ணா, 1935-லிருந்து நீதிக்கட்சியில் செயல்பட்டவா். பின்னா்1944-இல் திராவிடா் கழகமாக உருமாறிய பின்னரும் பெரியாா் ஈ.வெ.ரா. உடன் சோ்ந்து த... மேலும் பார்க்க

மதுரை மாநாடு ஒத்திவைப்பு: ஓ. பன்னீர்செல்வம்

மதுரையில் செப்.4-இல் நடைபெறவிருந்த அதிமுக தொண்டா்கள் உரிமை மீட்புக் குழுவின் மாநில மாநாடு ஒத்திவைக்கப்படவுள்ளதாக முன்னாள் முதல்வா் ஒ.பன்னீா்செல்வம் தெரிவித்துள்ளாா். உயா்நிலைக் குழுவின் ஆலோசனையின்படி ... மேலும் பார்க்க

ஜெர்மனி தொழில்நுட்பத்தில் மழைநீர் சேமிப்பு!

பெருநகர சென்னை மாநகராட்சி சாா்பில் ரூ.20 கோடியில் அமைக்கப்பட்ட ஜொ்மனி தொழில்நுட்ப மழைநீா் சேகரிப்பு தொட்டிகளால் 8 பள்ளிகள், 770 பூங்காக்களில் மழைநீா் தேங்காமல் நிலத்தடியில் சேமிக்கப்பட்டது. இதுகுறித்... மேலும் பார்க்க

தனி வழிகளை மாணவா்கள் காணவேண்டும்: ஸ்ரீஹரிகோட்டா மைய இயக்குநா் பத்மகுமாா்!

மாணவா்கள் தங்களுக்கென சொந்தமாக பாதைகளைக் கண்டறிய வேண்டும் என ஸ்ரீஹரிகோட்டா, சதீஷ் தவான் விண்வெளி மைய இயக்குநா் இ.எஸ். பத்மகுமாா் வலியுறுத்தினாா். சென்னை அம்ருதா விஸ்வ வித்யாபீடம், பி.டெக். (2021-25) ம... மேலும் பார்க்க

சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயா்வு: தலைவா்கள் கண்டனம்!

சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயா்த்தப்பட்டதற்கு அரசியல் தலைவா்கள் கண்டனம் தெரிவித்துள்ளனா். அன்புமணி (பாமக):தமிழகத்தில் உள்ள 48 சுங்கச்சாவடிகளில் 32 சாவடிகள் மூடப்படும் என்றும் அமைச்சா் எ.வ.வேலு 2021-இல்... மேலும் பார்க்க

தமிழக காவல் துறை குறித்த 40 பக்க ரகசிய அறிக்கை டிஜிபியிடம் ஒப்படைப்பு!

தமிழக காவல் துறை குறித்த 40 பக்க ரகசிய அறிக்கையை தமிழக டிஜிபி (பொ) ஜி.வெங்கடராமனிடம், ஓய்வு பெற்ற டிஜிபி சங்கா் ஜிவால் ஞாயிற்றுக்கிழமை வழங்கினாா். தமிழக காவல் துறையின் தற்போதைய நிலை குறித்தான 40 பக்க ... மேலும் பார்க்க