செய்திகள் :

5 இடங்களில் வெயில் சதம்

post image

சென்னை: தமிழகத்தில் மதுரை விமான நிலையம் உள்பட 5 இடங்களில் வெயில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி பதிவானது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தின் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் செவ்வாய்க்கிழமை (ஜூலை 29) முதல் ஆக. 3 வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

இதேபோல, சென்னை நகரின் ஒருசில பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 29) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மழை அளவு: தமிழகத்தில் திங்கள்கிழமை காலை வரை அதிகபட்சமாக கோவை மாவட்டத்தின் சின்னக்கல்லாறு மற்றும் நடுவட்டம் (நீலகிரி) -தலா 40 மி.மீ. மழையும், சோலையாறு (கோவை) - 30 மி.மீ. மழையும் பதிவானது.

வெயில் அளவு: தமிழகத்தில் திங்கள்கிழமை பகல் நேரத்தில் அதிகபட்சமாக மதுரை விமான நிலையத்தில் 105.62 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவானது. மேலும், மதுரை நகரம் - 102.92, நாகப்பட்டினம் - 101.66, தஞ்சை - 100.4, ஈரோடு - 100.04 என மொத்தம் 5 இடங்களில் வெயில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி பதிவானது.

மீனவா்களுக்கான எச்சரிக்கை: தென்தமிழக கடலோரப் பகுதிகள், மன்னாா் வளைகுடா, குமரிக்கடலில் செவ்வாய்க்கிழமை சூறாவளிக் காற்று மணிக்கு 60 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும் என்பதால், மீனவா்கள் இந்தப் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீனவர்கள் கைது: மத்திய அமைச்சருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!

இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இதுபற்றி தமிழக அரசு வெள... மேலும் பார்க்க

பள்ளிக் காலாண்டு, அரையாண்டுத் தேர்வு அட்டவணைகள் வெளியீடு! பொதுத் தேர்வு எப்போது?

சென்னை: தமிழகத்தில் அரசுப் பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் பள்ளி மாணவர்களுக்கான காலாண்டு மற்றும் அரையாண்டுத் தேர்வு அட்டவணைகளை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் இன்று வெளியிட்டார்.தமிழகத்தில் ... மேலும் பார்க்க

கும்மிடிப்பூண்டி சிறுமி பாலியல் வன்கொடுமை: கைதானவர் நீதிமன்றத்தில் ஆஜர்!

திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் தொடர்புடைய வடமாநில இளைஞரை காவலில் எடுத்து விசாரிக்க பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திருவள்ளூர் போக்சோ நீதிமன்றத்தி... மேலும் பார்க்க

சவுக்கு சங்கர் மீது நிலுவையில் உள்ள வழக்குகள்.. 6 மாதங்களில் முடிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் மீது காவல் நிலையங்கள், நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை 6 மாதங்களில் விசாரித்து முடிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னை உயர் நீதிமன்றத... மேலும் பார்க்க

கவின் ஆணவக் கொலை: சுர்ஜித் பெற்றோரான காவல் உதவி ஆய்வாளர்கள் பணியிடை நீக்கம்

திருநெல்வேலியில் ஐடி ஊழியர் ஆணவக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், கொலையாளி சுர்ஜித்தின் பெற்றர், பட்டாலியனில் பணியாற்றும் இரு உதவி ஆய்வாளர்களும் பணியடை நீக்கம் செய்யப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.ஐ... மேலும் பார்க்க

அதிமுக - பாஜக கூட்டணியில் யாரெல்லாம் இருக்கிறார்கள்? - இபிஎஸ் பதில்

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுக, பாஜக உள்ளதாகவும் பாஜக கூட்டணியில் பல கட்சிகள் இருப்பதாகவும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். மேலும், தேர்தலுக்கு இன்னும் 8 மாத காலம் இருக்கிறது... மேலும் பார்க்க