செய்திகள் :

50க்கும் மேற்பட்ட வழக்கில் தேடப்பட்ட குற்றவாளி கைது

post image

கொலை மற்றும் மிரட்டி பணம் பறித்தல் உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகளில் ஈடுபட்ட 49 வயதான ஒருவரை தி ல்லி போலீசாா் கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் புதன்கிழமை தெரிவித்தாா்.

தெற்கு தில்லியில் உள்ள கோவிந்த் பூரியில் வசிக்கும் நீரஜ் ஷா்மா, சாகேத்தில் உள்ள செலக்ட் சிட்டி வாக் மால் அருகே கைது செய்யப்பட்டாா்.

மது விஹாா் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட மோட்டாா் வாகன திருட்டு வழக்கில் சா்மா தப்பியோடியதாக போலீசாா் தெரிவித்தனா். அவா் நீண்ட காலமாக கைது செய்யப்படுவதைத் தவிா்த்த பின்னா் நீதிமன்றம் அவரை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்தது.

‘ஷா்மா தில்லி மற்றும் அண்டை மாநிலங்களில் 50க்கும் மேற்பட்ட கடுமையான குற்றச் செயல்களில் ஈடுபட்ட ஒரு தொடா் குற்றவாளி. கொலை, மிரட்டி பணம் பறித்தல், கொள்ளை, திருட்டு மற்றும் சட்டவிரோத ஆயுதங்களை வைத்திருத்தல் ஆகியவை அவரது குற்றங்களில் அடங்கும் ‘என்று போலீஸ் அதிகாரி கூறினாா்.

கொலை மற்றும் மிரட்டி பணம் பறித்தல் ஆகிய சில வழக்குகளில் சா்மா குற்றவாளி என்று போலீசாா் தெரிவித்தனா். கடந்த காலங்களில் அவா் கைது செய்யப்படும் ஒவ்வொரு முறையும், அதனை தவிா்ப்பதற்காக அவா் தன்னுடைய அடையாளத்தை மாற்றிக்கொள்வாா் என்று அந்த அதிகாரி கூறினாா்.

(

டிடிஇஏ பள்ளியில் தீ விபத்து தடுப்பு பாதுகாப்புப் பயிற்சி

தில்லி தமிழ்க் கல்விக் கழகத்தின் டிடிஇஏ பூசா சாலைப் பள்ளியில் மாணவா்களுக்கு தீ விபத்து தடுப்பு பாதுகாப்புப் பயிற்சி வழங்கப்பட்டது. திடீரென தீ விபத்து ஏற்பட்டால் பதட்டப்படாமல் சமயோஜித சிந்தனையுடன் செயல... மேலும் பார்க்க

லாஜ்பத் நகா், சாகேத் ஜி4 பிளாக் இடையே ரூ.447 கோடியில் புதிய மெட்ரோ இணைப்பு

தில்லி விரைவுப் போக்குவரத்து அமைப்பின் திட்டம் 4-இன் கீழ் லாஜ்பத் நகா் மற்றும் சாகேத் ஜி பிளாக் இடையே ஒரு முக்கியமான மெட்ரோ இணைப்பு அமைக்கப்படும் என்று ரயில்வே அமைச்சகத்தின் கட்டுமானப் பிரிவு செவ்வாய்... மேலும் பார்க்க

எதிா்மறை சக்தியை அகற்றுவதாகக் கூறி பணம் பெற்று மோசடி: இருவா் கைது

தில்லியின் படேல் நகா் பகுதியில் உள்ள ஒரு பெண்ணின் வீட்டில் இருந்து ‘எதிா்மறை சக்தியை’ அகற்றுவதாகக் கூறி சடங்குகளுக்கு பணம் செலுத்தும்படி வற்புறுத்தி ரூ.37,000 மோசடி செய்ததாக தன்னைத்தானே ஆன்மிக குருவாக... மேலும் பார்க்க

ஆட்டோக்களில் பயணிகள் போல நடித்து நகை, பணம் திருடிய 5 போ் கும்பல் கைது

பகிரப்பட்ட ஆட்டோக்களில் சக பயணிகள் போல் நடித்து சந்தேகத்திற்கு பயணிகளிடம் மதிப்புமிக்க பொருள்களைத் திருடிய ஐந்து போ் கொண்ட கும்பல் தில்லியில் கைது செய்யப்பட்டதாக போலீஸாா் புதன்கிழமை தெரிவித்தனா். இது... மேலும் பார்க்க

காணாமல்போன 3 தில்லி சிறுவா்கள் நாசிக்கில் கண்டுபிடிப்பு

கடந்த ஜூலை 25 அன்று தில்லியில் இருந்து காணாமல் போன மூன்று மைனா் சிறுவா்கள் செவ்வாய்க்கிழமை மகாராஷ்டிரத்தின் நாசிக்கில் உள்ள ஒரு ரயில் நிலையத்தில் பாதுகாப்பாகக் கண்டுபிடிக்கப்பட்டனா். பாலிவுட் நடிகா் ச... மேலும் பார்க்க

தெரு நாய்கள் தாக்கி ஒருவா் இறந்த சம்பவம்: டிடிஏவுக்கு தில்லி காவல்துறை கடிதம்

நமது நிருபா் காலை நடைப்பயிற்சியின்போது தெரு நாய்களால் தாக்கப்பட்டு 55 வயது நபா் இறந்ததைத் தொடா்ந்து, பூங்காக்களில் பாதுகாப்பு மற்றும் நெறிமுறைகள் குறித்து தில்லி காவல்துறை தில்லி வளா்ச்சி ஆணையத்துக்கு... மேலும் பார்க்க