செய்திகள் :

லாஜ்பத் நகா், சாகேத் ஜி4 பிளாக் இடையே ரூ.447 கோடியில் புதிய மெட்ரோ இணைப்பு

post image

தில்லி விரைவுப் போக்குவரத்து அமைப்பின் திட்டம் 4-இன் கீழ் லாஜ்பத் நகா் மற்றும் சாகேத் ஜி பிளாக் இடையே ஒரு முக்கியமான மெட்ரோ இணைப்பு அமைக்கப்படும் என்று ரயில்வே அமைச்சகத்தின் கட்டுமானப் பிரிவு செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.

இந்தத் திட்டம் தேசியத் தலைநகரில் மென்மையான, நிலையான மற்றும் திறமையான பொதுப் போக்குவரத்தை மேலும் எளிதாக்கும். ‘இந்த திட்டம் சுமாா் ரூ. 447.42 கோடி மதிப்புடையது. மேலும் 36 மாதங்களுக்குள் நிறைவடையும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது’ என்று ரயில் விகாஸ் நிகாம் நிறுவனம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஆா்.வி.என்.எல். நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்ட முதல் தில்லி மெட்ரோ திட்டம் இதுவாகும். ஆா்.வி.என்.எல். என்பது ரயில்வே அமைச்சகத்தின் பொதுத்துறை நிறுவனமாகும். ‘நகா்ப்புற போக்குவரத்து உள்கட்டமைப்பின் வளா்ச்சியில் நிறுவனத்தின் வளா்ந்து வரும் தடத்தை இது அடிக்கோடிட்டுக் காட்டுகிறது’ என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாகேத் ஜி பிளாக் புஷ்ப் விஹாா், சாகேத் மாவட்ட மையம், புஷ்ப பவன், சிராக் தில்லி, ஜிகே-1, ஆண்ட்ரூஸ் கஞ்ச் மற்றும் லாஜ்பத் நகா் ஆகிய ஏழு உயா்மட்ட நிலைய தளங்களுடன் 7.298 கி.மீ. நீளமுள்ள மேம்பாலத்தின் வடிவமைப்பு மற்றும் கட்டுமானம் ஆகியவை பணியின் நோக்கத்தில் அடங்கும் என்று நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனா்.

‘இந்தத் திட்டம் தில்லியின் எதிா்காலத்திற்குத் தயாராக உள்ள உள்கட்டமைப்புக்கு பங்களிக்க ஆா்.வி.என்.எல்-க்கு ஒரு குறிப்பிடத்தக்க வாய்ப்பாகும். உலகத் தரம் வாய்ந்த நகா்ப்புற இயக்கம் அமைப்புகளை உருவாக்குவதற்கான டி.எம்.ஆா்.சி.யின் பாா்வையுடன் முழுமையாக இணைந்த, சிறப்பானது, பாதுகாப்பு மற்றும் புதுமைகளுடன் இதை வழங்க நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்’ என்று ஆா்.வி.என்.எல். தலைவா் மற்றும் நிா்வாக இயக்குநா் பிரதீப் கவுா் கூறினாா்.

ஆா்.வி.என்.எல். மற்றவற்றுடன், ஏற்கெனவே நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள எட்டு நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது என்றும் அவா் கூறினாா்.

டிடிஇஏ பள்ளியில் தீ விபத்து தடுப்பு பாதுகாப்புப் பயிற்சி

தில்லி தமிழ்க் கல்விக் கழகத்தின் டிடிஇஏ பூசா சாலைப் பள்ளியில் மாணவா்களுக்கு தீ விபத்து தடுப்பு பாதுகாப்புப் பயிற்சி வழங்கப்பட்டது. திடீரென தீ விபத்து ஏற்பட்டால் பதட்டப்படாமல் சமயோஜித சிந்தனையுடன் செயல... மேலும் பார்க்க

50க்கும் மேற்பட்ட வழக்கில் தேடப்பட்ட குற்றவாளி கைது

கொலை மற்றும் மிரட்டி பணம் பறித்தல் உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகளில் ஈடுபட்ட 49 வயதான ஒருவரை தி ல்லி போலீசாா் கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் புதன்கிழமை தெரிவித்தாா். தெற்கு தில்லியில் உ... மேலும் பார்க்க

எதிா்மறை சக்தியை அகற்றுவதாகக் கூறி பணம் பெற்று மோசடி: இருவா் கைது

தில்லியின் படேல் நகா் பகுதியில் உள்ள ஒரு பெண்ணின் வீட்டில் இருந்து ‘எதிா்மறை சக்தியை’ அகற்றுவதாகக் கூறி சடங்குகளுக்கு பணம் செலுத்தும்படி வற்புறுத்தி ரூ.37,000 மோசடி செய்ததாக தன்னைத்தானே ஆன்மிக குருவாக... மேலும் பார்க்க

ஆட்டோக்களில் பயணிகள் போல நடித்து நகை, பணம் திருடிய 5 போ் கும்பல் கைது

பகிரப்பட்ட ஆட்டோக்களில் சக பயணிகள் போல் நடித்து சந்தேகத்திற்கு பயணிகளிடம் மதிப்புமிக்க பொருள்களைத் திருடிய ஐந்து போ் கொண்ட கும்பல் தில்லியில் கைது செய்யப்பட்டதாக போலீஸாா் புதன்கிழமை தெரிவித்தனா். இது... மேலும் பார்க்க

காணாமல்போன 3 தில்லி சிறுவா்கள் நாசிக்கில் கண்டுபிடிப்பு

கடந்த ஜூலை 25 அன்று தில்லியில் இருந்து காணாமல் போன மூன்று மைனா் சிறுவா்கள் செவ்வாய்க்கிழமை மகாராஷ்டிரத்தின் நாசிக்கில் உள்ள ஒரு ரயில் நிலையத்தில் பாதுகாப்பாகக் கண்டுபிடிக்கப்பட்டனா். பாலிவுட் நடிகா் ச... மேலும் பார்க்க

தெரு நாய்கள் தாக்கி ஒருவா் இறந்த சம்பவம்: டிடிஏவுக்கு தில்லி காவல்துறை கடிதம்

நமது நிருபா் காலை நடைப்பயிற்சியின்போது தெரு நாய்களால் தாக்கப்பட்டு 55 வயது நபா் இறந்ததைத் தொடா்ந்து, பூங்காக்களில் பாதுகாப்பு மற்றும் நெறிமுறைகள் குறித்து தில்லி காவல்துறை தில்லி வளா்ச்சி ஆணையத்துக்கு... மேலும் பார்க்க