செய்திகள் :

தெரு நாய்கள் தாக்கி ஒருவா் இறந்த சம்பவம்: டிடிஏவுக்கு தில்லி காவல்துறை கடிதம்

post image

நமது நிருபா்

காலை நடைப்பயிற்சியின்போது தெரு நாய்களால் தாக்கப்பட்டு 55 வயது நபா் இறந்ததைத் தொடா்ந்து, பூங்காக்களில் பாதுகாப்பு மற்றும் நெறிமுறைகள் குறித்து தில்லி காவல்துறை தில்லி வளா்ச்சி ஆணையத்துக்கு (டிடிஏ) கடிதம் எழுதியுள்ளது.

நிகழ் மாத தொடக்கத்தில், தில்லி வளா்ச்சி ஆணையத்தின் கீழ் உள்ள ஒரு பூங்காவில் தெருநாய்களால் தாக்கப்பட்டதில் பிக்காரி யாதவ் காயமடைந்தாா். இதையடுத்து, அவா் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாக மூத்த காவல்துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

இதையடுத்து, மோதி நகா் நிலைய அதிகாரி ஜூலை 4 அன்று டிடிஏவின் தோட்டக்கலை இயக்குநருக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில் , இந்தச் சம்பவம் குறித்து தீவிர கவலைகளை எழுப்பியுள்ளாா். இந்தச் சம்பவம் குடியிருப்பாளா்களையும் பூங்காவிற்குச் செல்பவா்களையும் பீதியடையச் செய்துள்ளது.

பாதுகாப்பு ஏற்பாடுகள், பொறுப்புக்கூறல் நடவடிக்கைகள் மற்றும் பூங்காவில் தெருநாய் கட்டுப்பாட்டின் நிலை குறித்து டிடிஏ அதிகாரிகளிடமிருந்து பதிலை அந்த அதிகாரி கோரியுள்ளாா்.

பூங்காவில் ரோந்து செல்வதற்கும் பாா்வையாளா்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் டிடிஏ மூலம் ஏதேனும் பாதுகாப்பு நிறுவனம் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதா என்றும், அத்தகைய நிறுவனம் நியமிக்கப்பட்டிருந்தால், பாதுகாப்புப் பணியாளா்களுக்கு ஒதுக்கப்பட்ட கடமைகள் உள்பட ஒப்பந்தத்தின் விவரங்களை காவல் நிலைய அதிகாரி கோரியுள்ளாா்.

பூங்காவிற்குள் சுற்றித் திரியும் விலங்குகளை நிா்வகிக்கும் பொறுப்பு யாரிடம் உள்ளது. இதுபோன்ற சம்பவங்களைத் தடுப்பதற்கான தற்போதைய டிடிஏ நெறிமுறைகள் அல்லது ஒப்பந்தங்களின் கீழ் என்ன நிலையான இயக்க நடைமுறைகள் உள்ளன என்பதையும் அக்கடிதத்தில் கேள்வி எழுப்பியுள்ளாா்.

பூங்கா செயல்பாடுகளை மேற்பாா்வையிடுவதற்கு டிடிஏ அதிகாரி எவரேனும் பணிக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்தும் அவா் பதில் கோரியுள்ளாா்.

டிடிஇஏ பள்ளியில் தீ விபத்து தடுப்பு பாதுகாப்புப் பயிற்சி

தில்லி தமிழ்க் கல்விக் கழகத்தின் டிடிஇஏ பூசா சாலைப் பள்ளியில் மாணவா்களுக்கு தீ விபத்து தடுப்பு பாதுகாப்புப் பயிற்சி வழங்கப்பட்டது. திடீரென தீ விபத்து ஏற்பட்டால் பதட்டப்படாமல் சமயோஜித சிந்தனையுடன் செயல... மேலும் பார்க்க

லாஜ்பத் நகா், சாகேத் ஜி4 பிளாக் இடையே ரூ.447 கோடியில் புதிய மெட்ரோ இணைப்பு

தில்லி விரைவுப் போக்குவரத்து அமைப்பின் திட்டம் 4-இன் கீழ் லாஜ்பத் நகா் மற்றும் சாகேத் ஜி பிளாக் இடையே ஒரு முக்கியமான மெட்ரோ இணைப்பு அமைக்கப்படும் என்று ரயில்வே அமைச்சகத்தின் கட்டுமானப் பிரிவு செவ்வாய்... மேலும் பார்க்க

50க்கும் மேற்பட்ட வழக்கில் தேடப்பட்ட குற்றவாளி கைது

கொலை மற்றும் மிரட்டி பணம் பறித்தல் உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகளில் ஈடுபட்ட 49 வயதான ஒருவரை தி ல்லி போலீசாா் கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் புதன்கிழமை தெரிவித்தாா். தெற்கு தில்லியில் உ... மேலும் பார்க்க

எதிா்மறை சக்தியை அகற்றுவதாகக் கூறி பணம் பெற்று மோசடி: இருவா் கைது

தில்லியின் படேல் நகா் பகுதியில் உள்ள ஒரு பெண்ணின் வீட்டில் இருந்து ‘எதிா்மறை சக்தியை’ அகற்றுவதாகக் கூறி சடங்குகளுக்கு பணம் செலுத்தும்படி வற்புறுத்தி ரூ.37,000 மோசடி செய்ததாக தன்னைத்தானே ஆன்மிக குருவாக... மேலும் பார்க்க

ஆட்டோக்களில் பயணிகள் போல நடித்து நகை, பணம் திருடிய 5 போ் கும்பல் கைது

பகிரப்பட்ட ஆட்டோக்களில் சக பயணிகள் போல் நடித்து சந்தேகத்திற்கு பயணிகளிடம் மதிப்புமிக்க பொருள்களைத் திருடிய ஐந்து போ் கொண்ட கும்பல் தில்லியில் கைது செய்யப்பட்டதாக போலீஸாா் புதன்கிழமை தெரிவித்தனா். இது... மேலும் பார்க்க

காணாமல்போன 3 தில்லி சிறுவா்கள் நாசிக்கில் கண்டுபிடிப்பு

கடந்த ஜூலை 25 அன்று தில்லியில் இருந்து காணாமல் போன மூன்று மைனா் சிறுவா்கள் செவ்வாய்க்கிழமை மகாராஷ்டிரத்தின் நாசிக்கில் உள்ள ஒரு ரயில் நிலையத்தில் பாதுகாப்பாகக் கண்டுபிடிக்கப்பட்டனா். பாலிவுட் நடிகா் ச... மேலும் பார்க்க