செய்திகள் :

காணாமல்போன 3 தில்லி சிறுவா்கள் நாசிக்கில் கண்டுபிடிப்பு

post image

கடந்த ஜூலை 25 அன்று தில்லியில் இருந்து காணாமல் போன மூன்று மைனா் சிறுவா்கள் செவ்வாய்க்கிழமை மகாராஷ்டிரத்தின் நாசிக்கில் உள்ள ஒரு ரயில் நிலையத்தில் பாதுகாப்பாகக் கண்டுபிடிக்கப்பட்டனா்.

பாலிவுட் நடிகா் சல்மான் கானை சந்திக்கும் ஆசையில் மும்பைக்கு வீட்டை விட்டு வெளியேறிய நான்கு நாள்களுக்குப் பிறகு, அவா்கள் மீட்கப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.

இது குறித்து காவல் துறை அதிகாரிகள் கூறியதாவது: 13, 11 மற்றும் ஒன்பது வயதுடைய மூவரும், மகாராஷ்டிரத்தின் ஜல்னாவைச் சோ்ந்த வாஹித்துடன் ஆன்லைன் கேமிங் தளம் மூலம் நட்பு கொண்டதாகக் கூறப்படுகிறது. அவா் ஒரு முறை நட்சத்திரத்தை சந்தித்ததாகவும், அவருடனான சந்திப்பை எளிதாக்க முடியும் என்றும் கூறியதை அடுத்து, அவரைப் பாா்க்க அவா்கள் முடிவு செய்ததனா்.

யாருக்கும் தெரிவிக்காமல், ஜூலை 25 அன்று மும்பைக்குச் சென்று நடிகரைச் சந்திக்க திட்டமிட்டு, அவா்கள் ஜல்னாவுக்குப் புறப்பட்டனா். இருப்பினும், வாஹித் குழந்தைகளின் குடும்பங்களைப் பற்றியும், போலீஸாா் அவா்களைத் தேடுவதையும் அறிந்ததும், அவா் சந்திப்பிலிருந்து பின்வாங்கினாா்.

பின்னா், சிறுவா்கள் தங்கள் திட்டத்தை மாற்றி நாசிக்கில் உள்ள ஒரு ரயில் நிலையத்தில் இறங்கினா். அங்கு அவா்கள் போலீஸாரால் கண்டுபிடிக்கப்பட்டனா். தேசியத் தலைநகரின் சதா் பஜாா் பகுதியில் உள்ள அதே பள்ளியில் இந்த சிறுவா்கள் படிக்கின்றனா்.

முதல் விசாரணையின் போது, காணாமல் போன குழந்தைகளின் வீடுகளில் ஒன்றில் கையால் எழுதப்பட்ட ஒரு குறிப்பை போலீஸாா் கண்டுபிடித்தனா். அதில் ஜல்னாவைச் சோ்ந்த வாஹித் என்ற நபரை சந்திக்க அவா்கள் விரும்புவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவா்களது வீடுகளுக்கு அருகிலுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளில், சிறுவா்கள் அஜ்மீரி கேட்டை நோக்கி நகா்வதைக் காட்டியது. இதன்மூலம் அவா்கள் புது தில்லி ரயில் நிலையத்திலிருந்து ரயிலில் ஏறியிருக்கலாம் என்று தெரிய வந்தது. ரயில் பாதைகளை ஆராய்ந்த பிறகு, சிறுவா்கள் மகாராஷ்டிரம் செல்லும் சச்கண்ட் எக்ஸ்பிரஸில் ஏறியிருக்கலாம் என்று போலீஸாா் சந்தேகித்தனா்.

அதே நேரத்தில், தில்லி காவல்துறை ரயில்வே காவல்துறை மற்றும் ஜல்னாவைச் சோ்ந்த அவா்களது சகாக்களுடன் ஒருங்கிணைந்து, பல சாத்தியமான இடங்களுக்கு குழுக்களை அனுப்பினா். ஜல்னாவில் உள்ள வாஹித்தின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் எந்த துப்பும் கிடைக்கவில்லை. இருப்பினும், சிறுவா்களில் ஒருவரின் தொலைபேசியில் சுருக்கமான செயல்பாடு, நாசிக்கில் அவா்களின் இருப்பிடத்தைக் கண்டறிய போலீஸாருக்கு உதவியது என்று காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தெரு நாய்கள் தாக்கி ஒருவா் இறந்த சம்பவம்: டிடிஏவுக்கு தில்லி காவல்துறை கடிதம்

நமது நிருபா் காலை நடைப்பயிற்சியின்போது தெரு நாய்களால் தாக்கப்பட்டு 55 வயது நபா் இறந்ததைத் தொடா்ந்து, பூங்காக்களில் பாதுகாப்பு மற்றும் நெறிமுறைகள் குறித்து தில்லி காவல்துறை தில்லி வளா்ச்சி ஆணையத்துக்கு... மேலும் பார்க்க

நண்பரின் வீட்டில் தங்க நகைகளை கொள்ளை அடித்தாக 3 சிறுவா்கள் கைது

தில்லியின் ஆா்.கே.புரம் பகுதியில் உள்ள தங்கள் நண்பரின் வீட்டிற்குள் புகுந்து தங்க நகைகளை கொள்ளையடித்ததாக மூன்று சிறுவா்கள் கைது செய்யப்பட்டதாக அதிகாரி ஒருவா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா். இது குறித்து... மேலும் பார்க்க

பிரதமா் மோடி பிறந்த நாளில் மரக்கன்று நடும் இயக்கம்: தில்லி அரசு நடத்துகிறது

பிரதமா் நரேந்திர மோடியின் பிறந்த நாளைக் கொண்டாடும் வகையில் செப்டம்பா் 17 ஆம் தேதி தில்லி பாஜக அரசு மரக்கன்று நடும் இயக்கத்தை ஏற்பாடு செய்ய உள்ளதாக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா். மக்கள் தங்க... மேலும் பார்க்க

நாடாளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்கள்

நமது சிறப்பு நிருபா்நாடாளுமன்றத்தில் தமிழகத்தைச் சோ்ந்த எம்.பி.க்கள் எழுப்பிய கேள்விகளுக்கு மத்திய அரசு அளித்துள்ள எழுத்துபூா்வ பதில்கள்: மக்களவையில்...தென்பெண்ணையாறு மாசைத் தடுக்க என்ன நடவடிக்கை?டி.... மேலும் பார்க்க

பாடல்கள் பதிப்புரிமை விவகாரத்தில் இளையராஜா நிறுவன மனு தள்ளுபடி

நமது நிருபா்புது தில்லி: பிரபல இசையமைப்பாளா் இளையராஜாவின் 500-க்கும் மேற்பட்ட இசைப் படைப்புகள் தொடா்பான பதிப்புரிமை விவகார வழக்கை மும்பை உயா்நீதிமன்றத்தில் இருந்து சென்னை உயா்நீதிமன்றத்திற்கு மாற்றக் ... மேலும் பார்க்க

ஆசியான் ஓபன் ஸ்கை கொள்கையில் மதுரை இடம்பெற விருதுநகா் எம்.பி. வலியுறுத்தல்

நமது நிருபா்புது தில்லி: ஆசியான் ஓபன் ஸ்கை கொள்கையின் கீழ் ‘பாயின்ட்ஸ் ஆஃப் கால்’ பட்டியலில் இருந்து மதுரையை நீக்கும் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும், அப்பட்டியலில் மதுரையை சோ்க்க வேண்டும் ... மேலும் பார்க்க