செய்திகள் :

6 மாதத்தில் பிரிந்த மனைவி; திருமண ஏற்பாடு செய்த புரோக்கரை கொடூரமாக கொன்ற கணவன்!

post image

திருமணமாகி 6 மாதத்தில் மனைவி பிரிந்து சென்றதால், பெண் பார்த்து கொடுத்த புரோக்கரை கணவன் கொலை செய்த சம்பவம் மங்களூர் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம் மங்களூருவில் வாமஞ்சூர் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்த திருமண புரோக்கரான சுலைமான், முஸ்தபா என்பவருக்கு பெண் பார்த்துக் கொடுக்க, 8 மாதங்களுக்கு முன் திருமணம் நடந்துள்ளது.

கணவன் - மனைவி சண்டை

தம்பதிக்குள் அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டு சண்டை நடந்ததால் முஸ்தபா வெறுத்து போய் இருந்திருக்கிறார். அது மட்டுமின்றி கோவித்துக்கொண்டு தாய் வீட்டிற்கு சென்ற மனைவி கடந்த 6 மாதங்களாக திரும்பி வரவில்லை என்றும் சொல்லப்படுகிறது.

இதனால் மிகவும் மன உளைச்சலுடன் இருந்த முஸ்தபா, இரண்டு நாள்களுக்கு முன் தனக்கு பெண் பார்த்து கொடுத்த புரோக்கர் சுலைமானுக்கு போன் செய்து கடுமையாக திட்டியிருக்கிறார். அவரை சமாதனப்படுத்த தன் மகன்களுடன் மங்களூரில் புறநகர்ப் பகுதியில் இருந்த முஸ்தபாவின் வீட்டிற்கு வந்துள்ளார் சுலைமான்.

இரு மகன்களையும் வெளியில் நிற்க வைத்துவிட்டு வீட்டுற்குள் சென்ற புரோக்கர் சுலைமானிடம் கடும் கோபத்துடன் முஸ்தபா சண்டை போட, அதனால் வெளியே வந்த சுலைமானை துரத்தி வந்து கழுத்தில் குத்தியுள்ளார் முஸ்தபா. சுலைமான் அங்கேயே சரிந்து விழுந்து இறந்தார்.

சத்தம் கேட்டு தடுக்க வந்த சுலைமானின் இரு மகன்களையும் கடுமையாக தாக்கியுள்ளார். பின்பு தகவல் தெரிந்து விரைந்து வந்த மங்களூரு போலீசார், காயமடைந்த இருவரையும மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு முஸ்தபாவை கைது செய்தனர்.

பெண் பார்த்து கொடுத்த புரோக்கரை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கணவன் வாங்கிய ரூ.25000 கடனுக்காக மகனை அடமானம் வைத்த தாய்; மீட்க வந்தபோது புதைக்கபட்டிருந்த மகன்..

ஆந்திரா மாநிலம் திருப்பதியில் வாத்து உரிமையாளரிடம் சென்சையாவும், அவரது மனைவி அனகம்மா ஆகியோர் தங்களது மூன்று மகன்களுடன் வாத்து மேய்த்து வந்துள்ளனர்.சென்சையா தான் வேலை செய்த வாத்து உரிமையாளரிடம் ரூ.25 ஆ... மேலும் பார்க்க

துப்பாக்கியால் சுட்டு உயிரை மாய்த்துக் கொண்ட பெண் போலீஸ்.. நாகை ஆட்சியர் அலுவலகத்தில் நடந்தது என்ன?

மயிலாடுதுறை மாவட்டம் மணகுடி அருகே உள்ள கீழிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் அபிநயா (29). இவர் நாகப்பட்டினம் மாவட்ட ஆயுதப்படையில் பெண் போலீஸாக பணியாற்றி வருகிறார். திருமணம் ஆன இவர் கணவருடன் ஏற்பட்ட கருத்து ... மேலும் பார்க்க

சென்னை: இன்ஸ்டா பழக்கம்; பள்ளி மாணவியுடன் லாட்ஜில் தங்கிய இளைஞர் கைதான பின்னணி!

ஆவடி போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்குட்பட்ட பகுதியில் தாத்தா, பாட்டியுடன் வசிக்கும் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவி, திடீரென மாயமனார். அவரைக் கண்டுபிடித்து தரும்படி மாணவி தரப்பில் ஆவடி காவல் நிலையத்தில் புக... மேலும் பார்க்க

`பேன்ட் அளவு சரியில்லை' - டெய்லரை கத்தரிகோலால் குத்திக் கொன்ற இளைஞர்... குமரி `பகீர்'

கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி, திட்டுவிளை அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் செல்வம்(65). இவர் நாகர்கோவில் பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி சாலையில் பெண்களுக்கான தையலகம் நடத்தி வருகிறார். இவர் நேற்று முன் தினம... மேலும் பார்க்க

போதையில் தகராறு; அண்ணனை கொன்ற தம்பி போலீஸில் சரண் - மதுவால் நடந்த விபரீதம்

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே உள்ள நடுக்காவேரி அரசமர தெருவைச் சேர்ந்த ராஜா இவரது மகன்கள் அஜித்குமார் (27) டிப்ளமோ படித்துள்ளார். ராம்குமார் (25) டூ விலர் மெக்கானிக். ராஜா சில ஆண்டுகளுக்கு முன்பு... மேலும் பார்க்க

படித்தது பிளஸ் 2; 18 ஆண்டுகளாக நோயாளிகளுக்கு சிகிச்சை -திருப்பரில் கைது செய்யப்பட்ட போலி மருத்துவர்!

திருப்பூர் முருகம்பாளையம் கிராமத்தில் சூர்யா கிருஷ்ணா நகர் 1-ஆவது வீதியில் ஹிமாலயா பார்மசி என்ற மருந்துக் கடை இயங்கி வருகிறது. ஜோலி அகஸ்டின் என்பவர் இந்த மருந்துக் கடையை நடத்தி வருகிறார். கேரளத்தைச் ச... மேலும் பார்க்க