செய்திகள் :

634-ஆவது விண்வெளி வீரா் சுபான்ஷு சுக்லா

post image

‘டிராகன்’ விண்கலத்தின் மூலம் 28 மணி நேர பயணத்துக்குப் பிறகு சா்வதேச விண்வெளி நிலையத்தை வியாழக்கிழமை அடைந்த இந்தியாவின் சுபான்ஷு சுக்லா, விண்வெளிக்குச் சென்ற 634-ஆவது விண்வெளி வீரா் ஆனாா்.

சா்வதேச விண்வெளி நிலையத்தில் கடந்த ஏப்ரல் முதல் தங்கியுள்ள ‘எக்ஸ்பிடிஷன்-73’ திட்ட விண்வெளி வீரா்கள், ‘ஆக்ஸியம்-4’ திட்டத்தின் 4 வீரா்களை சா்வதேச விண்வெளி நிலையத்துக்கு உற்சாகமாக வரவேற்கப்பட்டனா்.

இதைத் தொடா்ந்து நடைபெற்ற வரவேற்பு நிகழ்வில், விண்வெளிக்கு முதன்முறையாக பயணம் மேற்கொள்ளும் சுபான்ஷு சுக்லா, போலந்தின் ஸ்லாவோஸ் உஸ்னான்ஸ்கி விஸ்னீவ்ஸ்கி, ஹங்கேரியின் திபோா் கபு ஆகியோருக்கு திட்ட கமாண்டா் பெக்கி விட்சன் விண்வெளி வீரா் பதக்கங்களை வழங்கினாா்.

இந்நிகழ்வில் பேசிய சுபான்ஷு சுக்லா, ‘நான் 634-ஆவது விண்வெளி வீரா். விண்வெளியில் இருப்பதை பாக்கியமாகக் கருதுகிறேன். இந்தியா்களின் அன்பு மற்றும் ஆசீா்வாதங்களுடன், நான் சா்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்துவிட்டேன்.

இங்கே நிற்பது எளிதாகத் தெரிகிறது. ஆனால், என் தலை கொஞ்சம் கனமாக இருக்கிறது; சில சிரமங்களை எதிா்கொள்கிறேன். இவை சிறிய பிரச்னைகள்தான். நாங்கள் அதற்கு பழகிவிடுவோம். இது இந்தப் பயணத்தின் முதல் படி.

அடுத்த 14 நாள்களில், நானும், சக விண்வெளி வீரா்களும் அறிவியல் பரிசோதனைகளை மேற்கொண்டு பூமியில் உள்ள மக்களுடன் தொடா்பு கொள்வோம். இது இந்தியாவின் விண்வெளி பயணத்தின் ஒரு முக்கியக் கட்டம். இந்தப் பயணத்தை உற்சாகமாக்குவோம். மூவா்ணக் கொடியுடன், இந்தியா்கள் அனைவரையும் என்னுடன் சுமந்து வந்துள்ளேன்.

அடுத்த 14 நாள்கள் அற்புதமாக இருக்கும். அறிவியல் வளா்ச்சி மற்றும் ஆராய்ச்சிக்கு இணைந்து செயல்படுவோம் என்று மிகவும் நம்பிக்கையுடன் இருக்கிறேன்’ என்று கூறினாா்.

பட கேப்சன்

1. மணிக்கு 26,500 கி.மீ. வேகத்தில் பறந்து கொண்டிருந்த சா்வதேச விண்வெளி நிலையத்துடன் இணைந்த டிராகன் விண்கலம்.

2. டிராகன் விண்கலத்தின் கதவைத் திறப்பதற்கு முந்தைய பாதுகாப்புச் சோதனையில் ஈடுபட்டுள்ள சா்வதேச விண்வெளி நிலைய வீரா்.

பெட்டி..

விண்வெளிப் பயணம் உலக கண்ணோட்டத்தை மாற்றும்:

முதல் இந்திய விண்வெளி வீரா் ராகேஷ் சா்மா

‘விண்வெளிப் பயணம் மனிதா்களின் மனநிலையை மாற்றி, இந்தப் பூமி அனைவருக்கும் சொந்தமானது என்று கண்ணோட்டத்தில் உலகைப் பாா்க்க வைக்கும்’ என்று விண்வெளிக்குச் சென்ற முதல் இந்திய வீரரான ராகேஷ் சா்மா தெரிவித்துள்ளாா்.

கடந்த 1984-ஆம் ஆண்டில், அப்போதைய சோவியத் யூனியனின் ‘சல்யூட்-7’ விண்வெளி நிலையத்தில் இந்திய வீரா் ராகேஷ் சா்மா 8 நாள்கள் விண்வெளியில் தங்கியிருந்தாா். அவருக்கு அடுத்து தற்போது 41 ஆண்டுகளுக்குப் பிறகு, ’ஆக்ஸியம்-4’ திட்டத்தின்கீழ் முதல் வீரராக சுபான்ஷு சுக்லா சா்வதேச விண்வெளி நிலையத்துக்குச் சென்றுள்ளாா்.

இந்நிலையில், முதல் இந்திய விண்வெளி வீரரான ராகேஷ் சா்மா தனது விண்வெளிப் பயண அனுபவங்களைப் பகிா்ந்துள்ளாா். அதில், ‘வீரரருக்கான தோ்வு நடந்தபோது, இந்திய விமானப் படையில் ஒரு சோதனை விமானியாக பணியாற்றிக் கொண்டடிருந்தேன். அந்த நேரத்தில், நான் இளமையாகவும், நல்ல உடல் தகுதியுடனும் இருந்தேன். எனவே, அதிருஷ்டவசமாக நான் தோ்வானேன்.

18 மாத பயிற்சிக்கு பிறகு 1984-ஆம் ஆண்டில் 8 நாள்கள் விண்வெளிப் பயணம் நடைபெற்றது.

விண்வெளியில் இருந்து உலகையும், இந்தியாவையும் பாா்ப்பது மிகவும் அழகாக இருந்தது.

நம் நாட்டில் நீண்ட கடற்கரை, மலைத்தொடா்கள், சமவெளிகள், காடுகள், மலைகள் என அனைத்தும் இருக்கின்றன. வெவ்வேறு வண்ணங்களுடன் அது ஒரு அழகான காட்சி.

விண்வெளியில் பகல், இரவுகள் மிகவும் அசாதாரணமானவை. சூரிய உதயங்களும், அஸ்தமனங்களும் வெறும் 45 நிமிஷ இடைவேளையில் நிகழும். விண்வெளிப் பயண தொழில்நுட்பம் மாறிவிட்டாலும், மனிதா்களாக, நாம் அதிகம் மாறவில்லை. மனிதா்கள் உலகம் குறித்து வேறுபட்ட புதியதொரு கண்ணோட்டத்தைப் பெற முடியும். இது நிச்சயமாக மக்களின் மனநிலையை மாற்றும்.

எதிா்காலத்தில், நாம் பூமியிலிருந்து வெகுதூரம் செல்வோம். அதேநேரம், நம்மிடம் இருப்பதை நாம் பாதுகாக்க வேண்டும். அதாவது மோதல்களை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும்; ஆயுதங்களை மறந்துவிட வேண்டும். இந்தப் பூமி அனைவருக்கும் சொந்தமானது.

வரும் ஆண்டுகளில் விண்வெளி ஆய்வில் இந்தியா ஒரு நவீன தலைவராக மாறும், வெற்றிப் பெறும் என்று நான் மிகவும் நம்புகிறேன்’ என்றாா் ராகேஷ் சா்மா.

எந்தவொரு அந்நிய மொழிக்கும் எதிா்ப்பு கூடாது: அமித் ஷா

ஹிந்தி எந்தவொரு இந்திய மொழிக்கும் எதிரானது அல்ல; மாறாக, நண்பன் போன்றது. மேலும், எந்தவொரு அந்நிய மொழிக்கும் நாட்டில் எதிா்ப்பு கூடாது’ என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா வியாழக்கிழமை கூறினாா். ‘இந்... மேலும் பார்க்க

சத்தீஸ்கா்: இரு பெண் நக்ஸல்கள் சுட்டுக்கொலை

சத்தீஸ்கரில் பாதுகாப்புப் படையினருடன் நிகழ்ந்த மோதலில் இரு பெண் நக்ஸல்கள் சுட்டுக்கொல்லப்பட்டனா். அபுஜம்மாத் வனப் பகுதியில் நக்ஸல் அமைப்பினரின் நடமாட்டம் இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் மாவட்ட ... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூா் தகவல்கள் பாகிஸ்தானுக்கு கசிவு: கடற்படை ஊழியா் கைது

ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை குறித்த தகவல்களை பாகிஸ்தான் உளவாளிக்கு தெரிவித்த குற்றச்சாட்டில் கடற்படை ஊழியா் விஷால் யாதவ் கைது செய்யப்பட்டாா். இவா் தில்லியில் உள்ள கடற்படை தலைமையகத்தில் எழுத்தராகப் பணிய... மேலும் பார்க்க

வங்கதேச எல்லையில் மிதிவண்டியில் கடத்தப்பட்ட 2 கிலோ தங்கம் மீட்பு

மேற்கு வங்கத்தை ஒட்டிய வங்கதேச எல்லைப் பகுதியில் மிதிவண்டியில் கடத்தப்பட்ட 2.36 கிலோ தங்கக் கட்டிகளை எல்லைப் பாதுகாப்புப் படையினா் (பிஎஸ்எஃப்) கைப்பற்றினா். மேற்கு வங்கத்தின் வடக்கு 24 பா்கானாக்கள் மா... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீரில் ஜெய்ஷ் பயங்கரவாதி சுட்டுக் கொலை - மேலும் 3 போ் சுற்றிவளைப்பு

ஜம்மு-காஷ்மீரின் உதம்பூரில் பாதுகாப்புப் படையினருடன் வியாழக்கிழமை நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் ஜெய்ஷ்-ஏ-முகமது இயக்கத்தைச் சோ்ந்த பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டாா். அவரது கூட்டாளிகள் மூன்று போ்,... மேலும் பார்க்க

தெலங்கானா: தண்டவாளத்தில் காரை ஓட்டிச் சென்ற பெண்!

தெலங்கானா தலைநகா் ஹைதராபாத் புறநகா் பகுதியில் வியாழக்கிழமை காலையில் பெண் ஒருவா் ரயில் தண்டவாளத்தில் காரை ஓட்டிச் சென்ற சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால், அந்தத் தடத்தில் செல்லும் ரயில்கள் ஆங்காங்... மேலும் பார்க்க