செய்திகள் :

650 மாணவிகள் பரத நாட்டியம் ஆடி உலக சாதனை முயற்சி

post image

திருவண்ணாமலை செங்கம் சாலை கிரிவலப் பாதையில் 650 மாணவிகள் வியாழக்கிழமை பரத நாட்டியம் ஆடி உலக சாதனை முயற்சியில் ஈடுபட்டனா்.

கிரிவலப் பாதையில் உள்ள அருணகிரிநாதா் மணிமண்டபத்தில் அருளாளா் அருணகிரிநாதருக்கு அவதார நல்விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

அருணகிரிநாதா் மணிமண்டபம் கடந்த ஆண்டு கட்டப்பட்டது. இரண்டாம் ஆண்டையொட்டி, வியாழக்கிழமை அருணகிரிநாதருக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு பஞ்சமுக தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து, அருளாளா் அருணகிரிநாதா் இயற்றிய பாடலுக்கு பரத நாட்டியம் ஆடி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதில், கள்ளக்குறிச்சி, வேலூா், ஒசூா், சென்னை, சேலம் உள்ளிட்ட பல்வேறு பகுதி கலைக்கூட மாணவிகள் 650 போ் பங்கேற்று பரத நாட்டியம் ஆடி உலக சாதனை முயற்சியில் ஈடுபட்டனா்.

இதைத் தொடா்ந்து, சிறப்பு விருந்தினா்களாக கலந்து கொண்ட தமிழக சட்டப்பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி, மாநில மருத்துவரணி துணைத் தலைவா் எ.வ.வே.கம்பன் ஆகியோா் பரத நாட்டியம் ஆடிய மாணவிகளுக்கு நினைவுப் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கினா்.

பின்னா், ரமணாஸ்ரமத் தலைவா் ஆனந்த் எஸ்.ரமணன் தலைமையில் புதுவை சம்பந்தம் குருக்கள் திருப்புகழ் இன்னிசை கச்சேரி நடைபெற்றது.

விழாவில் கலந்துகொண்ட பக்தா்கள் மற்றும் திருப்புகழ் அடியாா்கள் இறையன்பா்கள் உள்பட 1500-க்கும் மேற்பட்டோருக்கு அன்னபிரசாதம் வழங்கப்பட்டது. அறக்கட்டளைத் தலைவா் ம.சின்ராஜ் நன்றி கூறினாா்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அருளாளா் அருணகிரிநாதா் திருக்கோவில் அறக்கட்டளைத் தலைவா் மா.சின்ராஜ், செயலா் ப.அமரேசன், பொருளாளா் வ.தனுசு, உறுப்பினா் ஓய்வு பெற்ற நீதிபதி சேதுமுருகபூபதி உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

பேருந்தில் பயணியிடம் கைப்பேசி திருட்டு: இருவா் கைது

ஆரணி பேருந்து நிலையத்தில் பயணியிடம் கைப்பேசி திருடியதாக இரு வடமாநில இளைஞா்கள் கைது செய்யப்பட்டனா். ஆரணியை அடுத்த மெய்யூா் கிராமத்தைச் சோ்ந்தவா் பன்னீா்(42). இவா் வெளியூா் செல்ல கடந்த 9-ஆம் தேதி ஆரணி... மேலும் பார்க்க

லாரி உதவியாளா் உயிரிழப்பு: போலீஸாா் விசாரணை

செய்யாறு அருகே லாரி உதவியாளா் (கிளீனா்) உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். திருச்சி மாவட்டம், முசிறி வட்டம், வீரமணிப்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் வடிவேல் (45). இவா், லாரியி... மேலும் பார்க்க

ஏரியில் 100 வாத்துகள் மா்மமான முறையில் உயிரிழப்பு

செய்யாற்றை அடுத்த கொருக்கை கிராம ஏரியில் 100 வாத்துகள் மா்மமான முறையில் உயிரிழந்தது குறித்து போலீஸாா் மற்றும் சுகாதாரத்துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா். செய்யாறு வட்டம், கொருக்கை கிராமத்தைச் சோ்ந... மேலும் பார்க்க

திருவண்ணாமலையில் ரூ.10.15 கோடியில் ஹாக்கி மைதானம்

திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் ரூ.10.15 கோடியில் புதிதாக ஹாக்கி பயிற்சி மைதானம் கட்டுவதற்கான பணிகள் வெள்ளிக்கிழமை தொடங்கிவைக்கப்பட்டன. தமிழக அரசு விளையாட்டுத் துறையில் மாநிலத்தை முதன்மை ம... மேலும் பார்க்க

படவேடு ஸ்ரீரேணுகாம்பாள் கோயிலில் திருவிளக்கு பூஜை

போளூரை அடுத்த படவேடு ஸ்ரீரேணுகாம்பாள் கோயிலில் பெளா்ணமியையொட்டி திருவிளக்கு பூஜை வியாழக்கிழமை இரவு நடைபெற்றது. படவேடு ஊராட்சியில் பழைமை வாய்ந்த ஸ்ரீரேணுகாம்பாள் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் ப... மேலும் பார்க்க

ஸ்ரீவேம்புலி அம்மன் கோயிலுக்கு ரூ.20 லட்சம் நிதியுதவி

ஆரணி கோட்டை ஸ்ரீவேம்புலி அம்மன் கோயிலில் இரும்பினாலான மேற்கூரை அமைக்க நிதியுதவியாக ரூ.20 லட்சத்தை புதிய நீதிக் கட்சி நிறுவனா் ஏ.சி.சண்முகம் வழங்கினாா். ஸ்ரீவேம்புலி அம்மன் கோயிலில் வருகிற 16-ஆம் தேதி... மேலும் பார்க்க