செய்திகள் :

73 ஆண்டு கால தடை.. மது விலக்கை நீக்குகிறதா சவூதி அரேபியா?

post image

மிகப் பாரம்பரியமான நடைமுறைகளைக் கட்டுக்கோப்பாகப் பின்பற்றி வரும் நாடுகளில் முதன்மையான இடத்தில் இருக்கும் சவூதி அரேபியாவில், கடந்த 73 ஆண்டு காலமாக இருக்கும் மது விலக்கு ரத்து செய்யப்படவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

வரும் 2034ஆம் ஆண்டில் உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் நடைபெறவிருக்கும் நிலையில், 600 சுற்றுலாத் தலங்களில் மட்டும், ஒய்ன், பியர் போன்ற ஆல்கஹால் குறைந்த மதுபானங்களின் விற்பனையைத் தொடங்க திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்பட்டது.

ஒருவேளை இந்த திட்டம் நடைமுறைக்கு வந்தால், சவூதி ரேபியாவில் கடந்த 73 ஆண்டுகளாக இருந்த தடை முடிவுக்கு வரலாம் என்றும் கூறப்படுகிறது.

1932ஆம் ஆண்டு சவூதி அரேபியா உருவானது. இந்த நாடு ஷரியா சட்டத்தைப் பின்பற்றியதால் மதுபானத்துக்கு முற்றிலும் தடைவிதிக்கப்பட்டது. இந்த மது விற்பனைக்கான தடையானது, மது விற்பனை மற்றும் நுகர்வு மீதான சட்டத் தடை 1952 இல் கொண்டுவரப்பட்டு, சட்டப்படி முறைப்படுத்தப்பட்டது.

2024ல் திறக்கப்பட்ட மதுக்கூடம்

சவூதி நாட்டில் வாழும் வெளிநாட்டுத் தூதர்களுக்காக 2024ஆம் ஆண்டு ரியாத்தில் உள்ள தூதர்களுக்கான குடியிருப்பில் முதல் மதுபானம் திறக்கப்பட்டது. இங்கு முஸ்லிம் அல்லாத தூதர்கள் மட்டும் ஒயின், இரண்டு வகையான பியர்களை மட்டும் வாங்கிக் கொள்ளும் வகையில் வசதி செய்து தரப்பட்டுள்ளது. இதிலும் குறிப்பிட்ட அளவிலான மதுபானம் மட்டுமே தூதர்களுக்கு வழங்கப்படும். செல்போன்கள் மதுக்கூடத்துக்குள் அனுமதியில்லை என்பது போன்ற கட்டுப்பாடுகளுடன் கடை இயங்கி வருகிறது.

புதிய தலைமையின் கீழ்

சவூதி அரேபியா, முகமது பின் சல்மான் தலைமை ஏற்றதற்குப் பிறகு சில மாற்றங்களை சந்தித்து வருகிறது. எரிபொருளை மட்டும் நம்பியிருந்தால் பொருளாதாரத்தை முன்னேற்ற முடியாது என்ற கொள்கையிடன் பல்வேறு மாற்றங்களையும் இவர் செய்து வருகிறது. பெண்களுக்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வாகனம் ஓட்ட அனுமதி, போட்டிகளில் பங்கேற்க அனுமதி ஆண் துணையில்லாமல் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்கலாம் என்பது போன்ற தளர்வுகளை மேற்கொண்டுள்ளார்.

2018ஆம் ஆண்டு சினிமாவுக்கு இருந்த கட்டுப்பாடு தளர்த்தப்பட்டது. 2030ஆம் ஆண்டுக்குள் 300 திரையரங்குகளைத் திறக்க திட்டமிட்டுள்ளது.

என்ன சொல்கிறது சவூதி அரேபியா?

மதுபானத்துக்கு அனுமதி கொடுக்கும் திட்டம் எதுவும் இல்லை என்றும், மது விலக்கு தொடரும் என்றும் கத்தாரில் உலகக் கோப்பை நடந்தபோது அங்கும் மது விற்பனைக்குத் தடை இருந்ததையும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

டிரம்ப்பின் பரஸ்பர வரிக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்!

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பின் பரஸ்பர வரி விதிப்புக்கு வா்த்தக நீதிமன்றம் விதித்த தடையை நீக்கி அந்நாட்டு உச்சநீதிமன்றம் தற்காலிக அனுமதி வழங்கியுள்ளது.உலக நாடுகளில் இருந்து இறக்குமதியாகும் பொருள்... மேலும் பார்க்க

டிரம்ப் பேச்சுக்குப் பிறகே சண்டை நிறுத்தத்துக்கு இந்தியா -பாக். உடன்பாடு: நியூயாா்க் நீதிமன்றத்தில் அமெரிக்க அரசு தகவல்

அதிபா் டொனால்ட் டிரம்ப் பேச்சுவாா்த்தை நடத்திய பிறகே தற்காலிக சண்டை நிறுத்தத்துக்கு இந்தியாவும் பாகிஸ்தானும் உடன்பட்டன என்று நியூயாா்க் நீதிமன்றத்தில் டிரம்ப் நிா்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.... மேலும் பார்க்க

இந்தியா மீது பாகிஸ்தான் பயன்படுத்திய சீன தயாரிப்பு ஆயுதங்களின் செயல்பாடு: கருத்துத் தெரிவிக்க சீன ராணுவம் மறுப்பு

இந்தியா உடனான மோதலில் பாகிஸ்தான் பயன்படுத்திய சீன தயாரிப்பு ஆயுதங்களின் செயல்பாடு எந்தளவு இருந்தது? என்ற கேள்விக்கு பதிலளிக்க சீன ராணுவம் மறுத்துவிட்டது. பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயங... மேலும் பார்க்க

டிரம்ப்பின் பரஸ்பர வரி விதிப்புக்கு நீதிமன்றம் தடை

இந்தியா உள்ளிட்ட ஏறத்தாழ உலகின் அனைத்து நாடுகளில் இருந்து இறக்குமதியாகும் பொருள்களுக்கும் கூடுதலாக பரஸ்பர வரி விதிக்கும் அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் உத்தரவுக்கு அந்த நாட்டு நீதிமன்றம் தடை வித... மேலும் பார்க்க

பாகிஸ்தான் ராணுவத்துக்கு ஆதரவாக பயங்கரவாத அமைப்பு ஊா்வலம்: 50 நகரங்களில் நடைபெற்றது

பாகிஸ்தான் ராணுவத்துக்கு ஆதரவாக பயங்கரவாதி ஹஃபீஸ் சயீதின் ஜமாத்-உத்-தாவா பயங்கரவாத அமைப்பின் அரசியல் பிரிவான பாகிஸ்தான் மா்கஸி முஸ்லிம் லீக் சாா்பில் 50 நகரங்களில் ஊா்வலம் நடைபெற்றது. 2008 மும்பை பயங்... மேலும் பார்க்க

மேற்குக் கரையில் மேலும் 22 யூதக் குடியிருப்புகள்

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரை பகுதியில் மேலும் 22 யூதக் குடியிருப்புகளை அமைப்பதாக இஸ்ரேல் வியாழக்கிழமை அறிவித்துள்ளது. இது குறித்து பாதுகாப்புத் துறை அமைச்சா் இஸ்ரேல் காட்ஸ் மற்றும் நிதியமைச்சா் பெஸா... மேலும் பார்க்க