செய்திகள் :

ITR Filing: வருமான வரிக் கணக்குத் தாக்கல் கடைசி தேதி இன்னும் தள்ளிப்போகிறதா? காரணம் என்ன?

post image

இந்த ஆண்டு புதிய ஐ.டி.ஆர் படிவங்கள் அறிமுகப்படுத்தப்பட்டது... ஐ.டி.ஆர் போர்ட்டல் அப்டேட் செய்யப்பட்டது.

இதனால், வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்யும் கடைசி தேதி செப்டம்பர் 15-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. வழக்கமாக, இந்தக் கடைசி தேதி, ஜூலை 31-ம் தேதி என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், மீண்டும் வருமான வரிக் கணக்குத் தாக்கல் கடைசி தேதியை நீட்டிக்குமாறு கோரிக்கை எழுந்துள்ளது.

வருமான வரி
வருமான வரி

காரணம் என்ன?

பொதுவாக, 'யூட்டிலிட்டி' என்று கூறப்படுகிற வருமான வரிக் கணக்குத் தாக்கல் சாப்ட்வேர் ஏப்ரல் மாதமே திறக்கப்படும். ஆனால், இந்த ஆண்டு ஜூலை மாதம் தான் திறக்கப்பட்டது.

அடுத்ததாக, ஜூலை மாதத்தின் இறுதியில் தான், ஐ.டி.ஆர் 1, 2, 3, 4 ஃபார்ம்கள் வெளியிடப்பட்டது. இன்னும் ஐ.டி.ஆர் 5 மற்றும் 6 ஃபார்ம்கள் வெளியிடப்படவில்லை.

மேலும், புதிதாக அப்டேட் ஐ.டி.ஆர் போர்ட்டலை சாப்ட்வேர் டெவலப்பர்கள் தங்களது சிஸ்டம்களில் அப்டேட் செய்யவும் நேரம் பிடிக்கிறது.

புதிதாக, அப்டேட் செய்யப்பட்ட போர்ட்டலைப் புரிந்துகொண்டு, சரியாக தகவல்களை உள்ளிட இன்னும் அதிக நேரம் பிடிக்கிறது.

இ-ஃபைலிங் போர்ட்டலில் அடிக்கடி தொழில்நுட்ப கோளாறும் ஏற்படுகிறது.

அதனால்...

இவ்வளவு பிரச்னைகள் மத்தியில், இ-ஃபைலிங் செய்வது... அதுவும் பார்த்து சரியாக செய்வது கடினமாக இருக்கிறது என்றும், அதனால், செப்டம்பர் 15-ம் தேதியில் இருந்து கடைசித் தேதியை இன்னும் நீட்டிக்குமாறு கோரிக்கைகள் எழுந்து உள்ளன.

இது குறித்து குஜராத் வர்த்தக சபை வருமான வரித் துறைக்கு கடிதம் எழுதி உள்ளது.

இந்தக் கோரிக்கையை ஏற்று வருமான வரித் துறை இன்னும் கடைசி தேதியை நீட்டிக்குமா... உங்களக்கு கால நீட்டிப்பு வேண்டுமா? - கமெண்ட் செய்யுங்கள்.

Business, Money, Invest, Personal Finance தொடர்பான Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://chat.whatsapp.com/IdbC2MFyIM6E5EHRomv2l4

வணக்கம்,

Personal Finance, மியூச்சுவல் ஃபண்ட், பங்குச்சந்தை, முதலீடு, சேமிப்பு போன்றவைகளில் பக்கா அப்டேட்டுகளும், ஆலோசனைகளும்.

கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...

https://chat.whatsapp.com/IdbC2MFyIM6E5EHRomv2l4

Personal Finance: 8ஆம் வகுப்புக்கு ரூ.1,30,000? படிப்புச் செலவைச் சேர்க்க ஈஸி வழி; நிதி சுதந்திரம்-5

இன்றைய நிலையில், நம்முடைய மிகப் பெரிய சொத்து என்று பார்த்தால், நம் குழந்தைகள்தான். நாம் வாங்கிய வீட்டையோ, நமக்குக் கிடைத்த ஆகச் சிறந்த உறவையோ விட மிகப் பெரிய பொக்கிஷமாக நாம் நினைப்பது நம் குழந்தைகளைத்... மேலும் பார்க்க

50 லட்சமா, 1 கோடியா..? - நீங்கள் நினைத்த தொகையை அடைய உதவும் கோல் கால்குலேட்டர்!

உங்களால் அடுத்த 20 ஆண்டுகளில் 50 லட்சம் ரூபாயையோ அல்லது 1 கோடி ரூபாயையோ சேர்க்க முடியுமா?இந்தக் கேள்வியைக் கேட்டால், பலரும் ‘’முடியாது’’ என்று அடித்துச் சொல்லிவிடுவார்கள்.காரணம் என்ன என்று கேட்டால், ‘... மேலும் பார்க்க

Personal Finance: உங்கள் வீட்டு பட்ஜெட் சூப்பரா, சுமாரா, இல்ல டேஞ்சரா இருக்கா? நிதிச் சுதந்திரம் - 3

‘‘சார், எனக்குப் பெரிசா பணம் சேர்க்கணுங்கிற ஆசை இருக்கு. ஆனா, சம்பாதிக்கிற பணம் அத்தனையும் செலவாயிடுது…’’‘‘சார், எனக்கு மாசாமாசம் 2 லட்சம் கிடைக்குது. ஆனா, 10,000 ரூபா மாசக் கடைசியில மிஞ்ச மாட்டேங்குத... மேலும் பார்க்க

Loan: கடனை முன்கூட்டியே அடைப்பது லாபமா? இல்ல இதுக்கு அபராதம் உண்டா?!

கடன் இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். இப்போது காசு கொஞ்சம் கையில் கிடைத்திருக்கிறது. இந்தக் காசை வைத்து கடனை முன்னரே அடைக்கலாமா... கூடாதா என்கிற சந்தேகம் பலருக்கும் இருக்கிறது. இந்தச் சந்தேகத்திற்கா... மேலும் பார்க்க

Labham Webinar: அடைவோம் நிதிச் சுதந்திரம்! ₹5 கோடி நிதி சேர்ப்பது எப்படி?

நாடு சுதந்திரம் அடைந்து 78 ஆண்டுகள் ஆகிவிட்டது, ஆனால் நீங்கள் நிதிச் சுதந்திரம் அடைவது எப்போது? உங்கள் வாழ்க்கைக்குத்தேவையான செல்வத்தைச் சேர்த்து நிதிச் சுதந்திரம் பெற ஆசையா? லாபம் வழங்கும் 'சுய நிதி ... மேலும் பார்க்க

Personal Finance: வைகைப் புயல் வடிவேலு கற்றுத் தந்த பாடம்… நிதிச் சுதந்திரம் - 2

‘போக்கிரி’ படத்தில் வைகைப் புயல் வடிவேலு சின்னஞ்சிறுசுகளிடம் எக்குத்தப்பாக அடி வாங்கிய பிறகு சொல்லும் வசனம்: ‘‘எதையும் பிளான் பண்ணிப் பண்ணனும்…’’இந்த வசனம் எதற்குப் பொருந்துமோ, பொருந்தாதோ, நாம் நிதிச்... மேலும் பார்க்க