செய்திகள் :

Monsoon session: `ஆபரேஷன் சிந்தூர்; பொருளாதாரம்; நக்சலிசம்' - செய்தியாளர்களிடம் மோடி கூறியதென்ன?

post image

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று (ஜூலை 21) முதல் தொடங்குகிறது.

இந்தக் கூட்டத்தொடரில், 17 மசோதாக்களை மத்திய அரசு தரப்பிலிருந்து தாக்கல் செய்யவிருப்பதாக மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ நேற்று தெரிவித்திருந்தார்.

காங்கிரஸ், தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பஹல்காம் தாக்குதல், கீழடி ஆய்வறிக்கை, தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாகக் கேள்விகள் எழுப்பத் தயாராக இருக்கின்றன.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் - மோடி
Parliament Monsoon Session - மோடி

அ.தி.மு.க தரப்பிலிருந்து, தமிழக காவல்துறையின் லாக்கப் மரணங்கள், போதைப்பொருள் புழக்கம், தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் தாக்குதல் உள்ளிட்ட விவகாரங்களை எழுப்பப்படவிருக்கின்றன.

இந்த நிலையில், கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன் நாடாளுமன்றத்துக்கு வெளியே பிரதமர் மோடி செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய மோடி, "மழைக்காலம் புதிய உருவாக்கத்தின் சின்னம்.

விவசாயிகளின் பொருளாதாரம், நாட்டின் பொருளாதாரம், கிராமப்புற பொருளாதாரம் மற்றும் ஒவ்வொரு குடும்பத்தின் பொருளாதாரத்திற்கும் மழை மிக முக்கியமானது.

இந்த மழைக்கால கூட்டத்தொடர் ஒரு வெற்றி கொண்டாட்டம் போன்றது.

சர்வதேச விண்வெளி நிலையத்தில் இந்தியாவின் கொடி ஏற்றப்படுவது ஒவ்வொரு இந்தியனுக்கும் பெருமை சேர்க்கும் தருணம்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் - மோடி
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் - மோடி

ஆபரேஷன் சிந்தூர்

ஆபரேஷன் சிந்தூரில் இந்திய ராணுவத்தால் நிர்ணயிக்கப்பட்ட இலக்குகள் 100 சதவிகிதம் எட்டப்பட்டது.

தீவிரவாதிகளின் கூடாரங்கள் 22 நிமிடங்களுக்குள் தரைமட்டமாக்கப்பட்டன. இந்திய ராணுவத்தின் வலிமையை மொத்த உலகமும் கண்டது.

இப்போதெல்லாம், உலக மக்களை நான் சந்திக்கும் போதெல்லாம், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் மீதான உலகத்தின் ஈர்ப்பு அதிகரித்து வருகிறது.

பொருளாதாரம்

பொருளாதாரத்தைப் பொறுத்தவரையில், 2014-க்கு முன்பு உலகப் பொருளாதாரத்தில் நாம் 10-வது இடத்தில் இருந்தோம்.

இன்று, உலகின் 3-வது பெரிய பொருளாதாரமாக மாறுவதை நோக்கி வேகமாக முன்னேறி வருகிறோம்.

அதேபோல், 2014-க்கு முன்பு நாட்டில் பணவீக்க விகிதம் இரட்டை இலக்கத்தில் இருந்தது.

இன்று, இந்த விகிதம் சுமார் இரண்டு சதவீதமாகக் குறைந்து வருவதால், அது நம் சாதாரண மக்களின் வாழ்க்கையில் ஒரு நிம்மதியாக மாறியுள்ளது.

25 கோடி ஏழை மக்கள் வறுமையிலிருந்து மீண்டுள்ளனர். இது உலகின் பல நிறுவனங்களால் பாராட்டப்படுகிறது.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் - மோடி
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் - மோடி

நக்சலிசம்

இன்று, நக்சலிசத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான புதிய தன்னம்பிக்கை மற்றும் உறுதியுடன் நமது பாதுகாப்புப் படைகள் முன்னேறி வருகின்றன.

பல மாவட்டங்கள் இன்று நக்சலிசத்திலிருந்து விடுபட்டுள்ளன. 'சிவப்பு வழித்தடங்கள்' எல்லாம் 'பசுமை வளர்ச்சி மண்டலங்களாக' மாறி வருகின்றன.

இந்திய அரசியலமைப்பு நக்சலிசத்திற்கு எதிராக வெற்றி பெற்று வருவதில் நாங்கள் பெருமைப்படுகிறோம்." என்று கூறினார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

திமுகவினர் சின்ன தலைவலின்னாலும் தனியார் ஆஸ்பத்திரிக்கு போறாங்க! - தவெக அருண்ராஜ் விமர்சனம்!

தவெகவின் முதல் கொள்கைவிளக்க மாநில பொதுக்கூட்டம் சேலத்தில் நடந்திருந்தது. இதில், அக்கட்சியின் கொள்கைப் பரப்புப் பொதுச்செயலாளர் அருண்ராஜ் சில முக்கியமான விஷயங்களைப் பேசியிருந்தார். குறிப்பாக, திமுகவைப் ... மேலும் பார்க்க

'அதிமுக தலைமை வலுவிழந்துவிட்டது; தொண்டர்கள் தவெக பக்கம் வந்துவிட்டனர்!'- ஆதவ்வின் அதிமுக அட்டாக்!

தவெகவின் முதல் கொள்கைவிளக்க மாநில பொதுக்கூட்டம் சேலத்தில் நடந்திருந்தது. இதில், அக்கட்சியின் தேர்தல் மேலாண்மைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா சில முக்கியமான விஷயங்களைப் பேசியிருந்தார். குறிப்பாக, முதல் ... மேலும் பார்க்க

`3 நாள்கள் மருத்துவமனையில்; இன்னும் சில பரிசோதனைகள்..!'- ஸ்டாலின் உடல்நிலை குறித்து மருத்துவ அறிக்கை

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று காலை நடைபயிற்சி மேற்கொண்டிருந்தபோது ஏற்பட்ட தலைச்சுற்றல் காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் இன்று காலை அனுமதிக்கப்பட்டார். அவர் மருத்துவம... மேலும் பார்க்க

Dharmasthala mass burial: சிதைக்கப்பட்டு புதைக்கப்பட்ட 100+ பெண்கள்? - அதிரவைக்கும் குற்றச்சாட்டு!

கர்நாடக மாநிலம் தர்மஸ்தலா மஞ்சுநாதர் கோயில் வளாகத்தில் 100-க்கும் மேற்பட்ட பெண் சடலங்கள் புதைக்கட்டிருப்பதாக அந்தக் கோயில் முன்னாள் ஊழியர் கொடுத்துள்ள குற்றச்சாட்டு கர்நாடகத்தை மட்டுமல்லாது ஒட்டுமொத்த... மேலும் பார்க்க

'முதலாளித்துவ, சாதிய இருண்ட காலத்தை போராட்டத்தால் சரிசெய்தார் அச்சுதானந்தன்' - பினராயி உருக்கம்!

கம்யூனிஸ்ட் மூத்த தலைவரும், கேரள முன்னாள் முதல்வருமான வி.எஸ்.அச்சுதானந்தன் உடல்நலக்குறைவு காரணமாக இன்று மாலை மரணமடைந்தார். அவரது இறுதிச்சடங்கு புதன்கிழமை நடக்க உள்ளது. வி.எஸ்.அச்சுதானந்தன் மறைவை ஒட்டி... மேலும் பார்க்க

Monsoon session: நிதி, கல்வி, ஸ்போர்ட்ஸ்... மத்திய அரசு கொண்டு வரும் 15 மசோதாக்களின் முழு பட்டியல்!

இந்த ஆண்டின் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று (ஜூலை 21) தொடங்கியது.ஆகஸ்ட் 21 வரை நடைபெறும் இந்தக் கூட்டத்தொடரில், ஆபரேஷன் சிந்தூர், பீகாரில் தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை, கீழடி ஆய்வறிக்கை உள்ளிட... மேலும் பார்க்க