Parandhu Po: `நடிகர் சிம்புவுக்கு எப்போது திருமணம்?' - மிர்ச்சி சிவா அளித்த பதில் இதுதான்
இயக்குநர் ராம் இயக்கத்தில், மிர்ச்சி சிவா, அஜு வர்கீஸ், அஞ்சலி, கிரேஸ் ஆண்டனி ஆகியோர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் 'பறந்து போ'.
ஜூலை 4 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இத்திரைப்படம் மக்களிடையே வரவேற்பைப் பெற்றிருக்கிறது.
இந்நிலையில் மதுரையில் நேற்று( ஜூன் 7) ‘பறந்து போ’ படக்குழுவினர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கின்றனர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சிவா, “ இரண்டு படங்களுக்கு ஓகே சொல்லி இருக்கிறேன்.
அதில் ஒன்று சுந்தர்.சி சாரின் ‘கலகலப்பு 3’. எந்தப் படத்தில் நடித்தாலும் இந்தப் படம் எனக்கு ரொம்ப ஸ்பெஷல்.
18 வருடங்கள் அவருடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று ஆசைப்பட்டிருக்கிறேன்.
அது நிறைவேறியது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. அதன் பிறகு இந்தப் படத்திற்கு கிடைத்த வரவேற்பை பார்க்கும்போது இன்னும் சந்தோஷமாக இருக்கிறது” என்று நெகிழ்ச்சியாகப் பேசியிருக்கிறார்.

மேலும் சிவாவிடம் நடிகர் சிம்புவுக்கு எப்போது திருமணம்? என்று கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது.
“சிம்பு சார் இந்த மாதிரி கேள்விகளைத் தவிர்க்க வேண்டும். அதனால் சீக்கிரம் திருமண அழைப்பிதழை எல்லோருக்கும் கொடுங்கள்” என்று பதிலளித்திருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...