செய்திகள் :

Rashmika: 'ராஷ்மிகா சொல்வதால் அது உண்மையாகிவிடாது!' - ராஷ்மிகாவின் கருத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு!

post image

ராஷ்மிகா மந்தனா நடிப்பில் சமீபத்தில் 'குபேரா' திரைப்படம் வெளியாகியிருந்தது. இப்படத்தின் ரிலீஸை முடித்த உடனே தன்னுடைய அடுத்தடுத்த படங்களின் வேலைகளுக்கு நகர்ந்துவிட்டார் ராஷ்மிகா.

தற்போது, ராஷ்மிகா மந்தனா சமீபத்திய பேட்டி ஒன்றில் பகிர்ந்த விஷயத்திற்கு எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.

Rashmika Mandana - Kubera
Rashmika Mandana - Kubera

சமீபத்திய பேட்டியில் ராஷ்மிகா மந்தனா, "எங்களுடைய கொடவா சமூகத்திலிருந்து எனக்கு முன் சினிமாவிற்குள் யாரும் வந்ததில்லை.

எங்கள் சமூகத்திலிருந்து சினிமாவுக்கு வந்த முதல் நபர் நான்தான் என நினைக்கிறேன்." எனக் கூறியிருந்தார். ராஷ்மிகாவின் இந்தக் கருத்துக்கு கொடவா சமூகத்தைச் சேர்ந்த நடிகர்களிடமிருந்து எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

ராஷ்மிகா பேசிய விஷயத்திற்கு நடிகை பிரேமா அவரை விமர்சித்திருக்கிறார். நடிகை பிரேமா பேசுகையில், "கொடவா சமூகத்திலிருந்து சினிமாத் துறைக்குள் வந்த நடிகர்களின் உண்மையான விவரங்கள் கொடவா சமூகத்தைச் சேர்ந்த மக்களுக்கு தெரியும். இதில் நான் சொல்வதற்கு என்ன இருக்கிறது?

ராஷ்மிகாவிடம்தான் அவர் கூறிய கருத்திற்கு விளக்கத்தைக் கேட்க வேண்டும். எனக்கு முன்பே, கொடவா சமூகத்தைச் சேர்ந்த நடிகை சசிகலா சினிமாவிற்குள் வந்துவிட்டார். அதன் பிறகுதான் நான் சினிமாவிற்குள் வந்தேன்.

Actress Prema
Actress Prema

அதனைத் தொடர்ந்து கொடவா சமூகத்தைச் சேர்ந்த பலரும் சினிமாவிற்குள் வந்து சோபித்திருக்கிறார்கள்." என்றார். இவரைத் தொடர்ந்து மாடல் மற்றும் கன்னட சினிமாவின் நடிகையுமான நிதி சுப்பையா, "ராஷ்மிகா சொல்வது ஜோக் போல இருக்கிறது. அவர் அப்படியான கருத்தை வைத்ததாலேயே அது உண்மையாகிவிடாது.

இதனை மிகப் பெரிய பிரச்னையாக எடுத்துக் கொள்ள வேண்டாம். ராஷ்மிகா சினிமாவில் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். நடிகை பிரேமா கொடவா சமூகத்திலிருந்து சினிமாவுக்கு வந்து சூப்பர் ஸ்டார் ஆகியிருக்கிறார். இருப்பினும், ராஷ்மிகா ஏன் அப்படியான கருத்தைச் சொன்னார் எனத் தெரியவில்லை." எனத் தெரிவித்திருக்கிறார்.

Mamitha Baiju: `விஜய், சூர்யா, நிவின் பாலி, பிரதீப் ரங்கநாதன்' - சென்சேஷன் மமிதா பைஜுவின் லைன் அப்!

நடிகை மமிதா பைஜு தான் தமிழ் சினிமாவின் தற்போதைய சென்சேஷன். அடுத்தடுத்து பெரிய நட்சத்திரங்களின் படங்களில் கமிட்டாகி, பட்டாம்பூச்சியாய் படப்பிடிப்புகளுக்கு பறந்து வருகிறார். கடந்த ஆண்டு இவர் நடிப்பில் வ... மேலும் பார்க்க

``ஜாபர் சாதிக்கை உறுப்பினராகச் சேர்த்திருக்கோம்;ஆனா..." நடப்பு தயாரிப்பாளர் சங்கத்தின் விளக்கம்

`தமிழ் ஃபிலிம் ஆக்டிவ் புரடியூசர்ஸ் அசோசியேசன்' எனப்படும் இயக்குநர் பாரதிராஜாவைத் தலைவராகக் கொண்ட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் புதிதாக சேர்க்கிற உறூப்பினர்கள் குறித்த விபரங்களை அவ்வப்போது வெளியிடுவது வழ... மேலும் பார்க்க

Madhan Karky: ``நா.முத்துக்குமார் இருந்திருந்தா நான் பாடல் எழுதியிருக்க மாட்டேன்!" - மதன் கார்க்கி

இயக்குநர் ராம் இயக்கத்தில், மிர்ச்சி சிவா, கிரேஸ் ஆண்டனி, அஞ்சலி ஆகியோர் நடிப்பில் பறந்து போ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. Parandhu Po - Sunflower Songகுழந்தைகள் வளர்ப்பு, பொருளாதாரத... மேலும் பார்க்க

Parandhu Po: ``ராம் உயிருடன் இருக்கிறார் என்று அப்போதுதான் தெரிந்திருக்கும்'' - இயக்குநர் ராம்

இயக்குநர் ராம் இயக்கத்தில், மிர்ச்சி சிவா, அஜு வர்கீஸ், அஞ்சலி, கிரேஸ் ஆண்டனி ஆகியோர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் 'பறந்து போ'.ஜூலை 4 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இத்திரைப்படம் மக்களிடையே வரவே... மேலும் பார்க்க

Parandhu Po: ``சினிமாவில் நடிக்க ஆசை இருக்கு'னு முதல்ல அம்மாகிட்ட சொன்னேன்; ஆனா..'' - கிரேஸ் ஆண்டனி

இயக்குநர் ராம் இயக்கத்தில், மிர்ச்சி சிவா, அஜு வர்கீஸ், அஞ்சலி, கிரேஸ் ஆண்டனி ஆகியோர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் 'பறந்து போ'.ஜூலை 4 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இத்திரைப்படம் மக்களிடையே வரவே... மேலும் பார்க்க

Parandhu Po: `நடிகர் சிம்புவுக்கு எப்போது திருமணம்?' - மிர்ச்சி சிவா அளித்த பதில் இதுதான்

இயக்குநர் ராம் இயக்கத்தில், மிர்ச்சி சிவா, அஜு வர்கீஸ், அஞ்சலி, கிரேஸ் ஆண்டனி ஆகியோர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் 'பறந்து போ'.ஜூலை 4 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இத்திரைப்படம் மக்களிடையே வரவே... மேலும் பார்க்க