செய்திகள் :

Priyank Panchal: "இனிமேல் எதுவும் நடக்காது என உணர்ந்துவிட்டேன்" - நிறைவேறா கனவுடன் விடைபெறும் வீரர்

post image

இந்திய அணியில் இடம்பிடிக்கப் பல வருடமாகப் போராடிவந்த பிரியங்க் பஞ்சல், ஏமாற்றத்தோடு தனது ஓய்வை அறிவித்திருக்கிறார்.

127 முதல் தரப் போட்டிகளில் சதங்களுடன் 8,856 ரன்களும், 97 லிஸ்ட் ஏ போட்டிகளில் 3,672 ரன்களும் குவித்திருக்கும் இவர், அதிகபட்சமாக 2021-22ல் தென்னாப்பிரிக்கச் சுற்றுப் பயணத்திற்கான இந்திய அணியில் இடம்பிடித்தார்.

ஆனால், ஒரு போட்டியில் கூட களமிறங்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

உள்ளூர் போட்டிகளில் 40+ ஆவரேஜில் ஆட்டத்தை வெளிப்படுத்தியபோதிலும் இந்திய அணியில் இடம் கிடைக்காத விரக்தியில், முதல் தர கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக எக்ஸ் தளத்தில் நேற்று அறிவித்திருக்கிறார்.

பிரியங்க் பஞ்சல்
பிரியங்க் பஞ்சல்

தனது ஓய்வு முடிவு குறித்து ஹிந்துஸ்தான் ஊடகத்திடம் பேசிய பிரியங்க் பஞ்சல், "நான் ஓய்வு பெறவேண்டும் என்ற எண்ணம் நீண்ட காலமாக என்னுள் இருந்தது.

ஏனென்றால், நான் கிரிக்கெட் விளையாடத் தொடங்கியபோது, ​​இந்தியாவுக்காக விளையாட வேண்டும் என்ற ஒரு உந்து சக்தி இருந்தது. அதோடு, ஒழுக்கமும் அர்ப்பணிப்பும் இருந்தது.

ஆனால், ஒரு கட்டத்திற்குப் பிறகுதான் நடைமுறையை உணர்ந்தேன். அது சாத்தியம் என்று எனக்குத் தோன்றவில்லை.

என்னால் முடிந்தவரை நான் முயன்றேன். இந்தியா ஏ அணியில் விளையாடினேன். ரஞ்சி டிராபியில் விளையாடினேன். ஆனால், இதற்கு மேல் எதுவும் நடக்காது என்று உணர்ந்துவிட்டேன்.

இந்திய அணியில் இடம்பிடித்தும் விளையாட முடியாமல் போனது நிச்சயமாக ஒரு வருத்தம்தான். அதேசமயம் இதுவும் ஒரு சாதனைதான்.

கிரிக்கெட்டில் 1 முதல் 10 வரை லெவல் பிரித்தால், அதில் லெவல் 9-ல் நான் இருந்தேன். இருப்பினும், இந்திய அணியில் விளையாட முடியாதது உண்மையில் வருத்தம்தான்.

அதேசமயம் விராட் கோலி, ரவிச்சந்திரன் அஸ்வினுடன் டிரெஸ்ஸிங் ரூமை பகிர்ந்து கொள்வது ஒரு பெரிய விஷயம்.

பிரியங்க் பஞ்சல்
பிரியங்க் பஞ்சல்

ஒரு வீரருக்கு கன்சிஸ்டன்சியாக இருப்பது முக்கியம். மேலும், சிறப்பாக விளையாடுவது மட்டுமல்லாமல், சரியான நேரத்திலும் சிறப்பாக விளையாட வேண்டும்.

நீங்கள் தொடர்ச்சியாகச் சதத்துக்கு மேல் சதம் அடித்தாலும், உங்கள் அணி வெற்றி பெறவில்லையென்றால் அது சரியான நேரம் இல்லை.

அதே சமயம், நீங்கள் 30 ரன்கள் அடித்தாலும், உங்களுடைய அணி வெற்றிபெற்றால் உங்களின் பங்களிப்பு முக்கியமானதாகப் பார்க்கப்படும்.

சர்வதேச கிரிக்கெட்டுக்கான தேவையும் அதுதான். அதிலிருந்து நான் நிறையக் கற்றுக்கொண்டேன்." என்று கூறினார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

CSK: 'நாங்க எதிர்பார்த்த சீசனா இது அமையல, ஆனா சென்னை ரசிகர்கள்...'- நெகிழ்ச்சியாக பேசிய பதிரனா

18-வது ஐ.பி.எல். தொடர் இறுதி கட்டத்தை நெருங்கி இருக்கிறது. லீக் சுற்றுப் போட்டிகள் அனைத்தும் முடிவடைந்து, இப்போது பிளே ஆஃப் சுற்று போட்டிகள் நடக்க உள்ளன. மொத்தம் 10 அணிகள் விளையாடிய ஐபிஎல் 2025 லீக் ப... மேலும் பார்க்க

Shreyas Iyer: `கொல்கத்தாவில் ஸ்ரேயஸ் முதுகில் குத்தப்பட்டார்' - முன்னாள் இந்திய வீரர் ஓப்பன் டாக்

ஸ்ரேயஸ் ஐயர் கடந்த ஓராண்டாக பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டு வருவதோடல்லாமல், கேப்டன்சியில் சாதனை மேல் சாதனை படைத்தது வருகிறார்.கடந்த ஆண்டில் ஐபிஎல் கோப்பை உட்பட உள்ளூர் கிரிக்கெட் கோப்பைகள் அனைத்தையும... மேலும் பார்க்க

Jithesh Sharma: 'தினேஷ் கார்த்திக்தான் என்னோட குரு!' - ஆட்டநாயகன் ஜித்தேஷ் சர்மா

'பெங்களூரு வெற்றி!'லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கிடையேயான போட்டி ஏக்னா மைதானத்தில் நடந்திருந்தது. இந்தப் போட்டியை பெங்களூரு அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெ... மேலும் பார்க்க

Rishabh Pant : 'ஜித்தேஷை அவுட் ஆக்கிய திக்வேஷ்; பெருந்தன்மை காட்டிய பண்ட்!' - என்ன நடந்தது?

'பெங்களூரு வெற்றி!'லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கிடையேயான போட்டி ஏக்னா மைதானத்தில் நடந்து முடிந்திருக்கிறது. பெங்களூரு அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றிர... மேலும் பார்க்க

LSG vs RCB : 'நாங்க வர்றோம்!' - RCB அணியை உச்சத்தில் அமர்த்திய ஜித்தேஷ்

'பெங்களூரு வெற்றி!'லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை வீழ்த்தி புள்ளிப்பட்டியலில் டாப் 2 க்குள் நுழைந்திருக்கிறது பெங்களூரு அணி. இமாலய டார்கெட் கோலி, மயங்க் அகர்வால், ஜித்தேஷ் சர்மா ஆகியோரின் அசத்தலான ஆட்ட... மேலும் பார்க்க

Sikandar: இங்கிலாந்தில் டெஸ்ட்; பாகிஸ்தானில் T20 - 24 மணி நேரத்தில் சிக்கந்தர் ராசா செய்த சாகசம்

ஜிம்பாப்வே வீரர் சிக்கந்தர் ராசா இங்கிலாதில் டெஸ்ட் ஆடிவிட்டு, உடனே அங்கிருந்து அவசர அவசரமா புறப்பட்டு துபாய், அபுதாபி வழியாக லாகூர் வந்து பாகிஸ்தான் சூப்பர் லீகின் இறுதிப்போட்டியில் ஆடி லாகூர் அணியை ... மேலும் பார்க்க