செய்திகள் :

RCB வீரர் யாஷ் தயாள் மீது மேலும் ஒரு வன்கொடுமை புகார்; போக்சோ வழக்கு - அதிகரிக்கும் சிக்கல்

post image

ராயல் சேலஞ்ச் பெங்களூரு ஐ.பி.எல் அணியில் வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தயாள் மீது ஏற்கனவே காஜியாபாத்தை சேர்ந்த பெண் ஒருவர் `திருமணம் செய்து கொள்வதாக கூறி 5 ஆண்டுகள் பாலியல் வன்கொடுமை’ செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. தற்போது யாஷ் தயாள் தன்னை திருமணம் செய்து கொள்ள மறுப்பதாக கூறி அப்பெண் இம்மாத தொடக்கத்தில் காஜியாபாத் போலீஸில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆனால் இவ்வழக்கில் யாஷ் தயாளை கைது செய்ய அலகாபாத் உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. தற்போது யாஷ் தயாள் மீது மேலும் ஒரு பெண் பாலியல் வன்கொடுமை புகார் தெரிவித்துள்ளார். இது யாஷ் தயாளுக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தி இருக்கிறது. 17 வயதேயாகும் அந்த மைனர் பெண் இது தொடர்பாக ஜெய்ப்பூர் போலீஸில் புகார் செய்துள்ளார்.

யாஷ் தயாள்

அப்பெண் கொடுத்துள்ள புகாரில், ''இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கிரிக்கெட்டில் வாய்ப்பு வாங்கிக் கொடுப்பதாகவும், என்னை விளையாட்டு வீராங்கணையாக மாற்றுவதாகவும் கூறி என்னை யாஷ் தயாள் பாலியல் வன்கொடுமை செய்துவிட்டார். இந்த ஆண்டு ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி நடந்த போது ஜெய்ப்பூரில் உள்ள ஹோட்டலுக்கு வரவழைத்தார். கிரிக்கெட் தொடர்பாக ஆலோசனைகள் தருவதாக கூறி வரவழைத்து பாலியல் வன்கொடுமை செய்துவிட்டார். இரண்டு ஆண்டுகளாக மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்ததாக” அவர் தனது புகாரில் தெரிவித்துள்ளார். தொடர்ச்சியாக மிரட்டி மிரட்டி பாலியல் துன்புறுத்தல் கொடுத்து வந்ததால் புகார் செய்வதாகவும் குறிப்பிட்டுள்ளார். பாதிக்கப்பட்டவர் மைனர் பெண் என்பதால் போக்சோ சட்டத்தின் கீழ் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இப்புகார் யாஷ் தயாளுக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தி இருக்கிறது. இக்குற்றச்சாட்டு நிரூபிக்கப்படும் பட்சத்தில் யாஷ் தயாளுக்கு 10 ஆண்டு வரை சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு இருப்பதாக சட்ட வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே ஒரு பாலியல் வழக்கில் கைது நடவடிக்கையில் இருந்து தப்பி இருக்கும் யாஷ் தயாள் இவ்வழக்கிலும் தன்னை கைது செய்ய தடை விதிக்க வேண்டும் கோரி கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்ய இருக்கிறார் என்கிறார்கள்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

கோவை: `திருமணம் தாண்டிய உறவுக்கு தடை' - 4 வயது மகளை கொலை செய்த பெண் கைது

கோவை இருகூர் பகுதியைச் சேர்ந்தவர் தமிழரசி (30). இவர் கட்டுமானப் பணியில் சித்தாளாக பணியாற்றி வருகிறார். தமிழரசிக்கும், ரகுபதி (35) என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த ... மேலும் பார்க்க

காதலிக்காக மனைவிக்கு விவாகரத்து: சொத்துடன் வராததால் காதலனை கொடூரமாக அடித்து தெருவில் போட்ட காதலி..

மும்பை தாதரில் வசிப்பவர் ரஞ்சித் தேஷ்முக் (48). ரியல் எஸ்டேட் ஏஜெண்டாக வேலை செய்து வருகிறார். அதோடு அரசு நிறுவனம் ஒன்றில் பாய்லர் ஆப்ரேட்டராகவும் இருக்கிறார். இவருக்கு ஷில்பா(51) என்ற பெண்ணுடன் தொடர்ப... மேலும் பார்க்க

3 வயது ஆண் குழந்தை; 12 லட்சத்திற்கு விற்க முயற்சி; 3 பெண்கள் கைது - பின்னணி என்ன?

சென்னையை சேர்ந்த கார்த்திக் என்பவரிடம் பெண் ஒருவர் செல்போனில் தொடர்பு கொண்டு குழந்தை ஒன்று விற்பனைக்கு உள்ளது என்றும், ரூ.12 லட்சம் கொடுத்தால் குழந்தையை பெற்றுக்கொள்ளலாம் என்றும் கூறியிருக்கிறார். இதன... மேலும் பார்க்க

கும்மிடிப்பூண்டி: சிறுமி பாலியல் வன்கொடுமை; வடமாநில நபர் கைது - குற்றவாளியை உறுதிபடுத்தியது எப்படி?

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் 4-ம் வகுப்பு சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட வழக்கில் சந்தேகப்படும் நபரை நேற்று (ஜூலை 25) கைது செய்துள்ளது காவல்துறை. ஜூலை மாதம் 12-ம் தேதி, பள்ளிக்குச் செ... மேலும் பார்க்க

``பேரல்களை அடுக்கி, சுவர் ஏறி குதித்தேன்" - கண்ணூர் சிறையிலிருந்து தப்பிய கோவிந்தசாமி சொல்வது என்ன?

கேரள மாநிலம், கொச்சியில் இருந்து சொர்ணூர் சென்ற ரயிலில் 2011-ம் ஆண்டு பிப்ரவரி 1-ம் தேதி பயணித்தார் தனியார் நிறுவன ஊழியரான செளமியா(23). அதே ரயிலில் பயணித்த தமிழ்நாட்டின் விருத்தாச்சலத்தைச் சேர்ந்த கோவ... மேலும் பார்க்க

சென்னை: திருமணமான பெண்ணுடன் குடும்பம் நடத்திய வடமாநில இளைஞர் - கொலையில் முடிந்த கூடா நட்பு!

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்தவர் கணேசமூர்த்தி (47). இலரின் மனைவி சரசு (38). இந்தத் தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இதில் மூத்த மகன் சற்று மூளை வளர்ச்சி குன்றியவர். கணேசமூர... மேலும் பார்க்க