செய்திகள் :

Rohit Sharma: `இரவெல்லாம் தூங்கவில்லை, பதட்டமாக இருந்தேன்' - ரோஹித்தின் டி 20 உலக கோப்பை நினைவுகள்

post image

ஜூன் 29, 2024-ல் இந்திய கிரிக்கெட் அணி 11 ஆண்டுகளுக்குப் பிறகு டி20 உலகக் கோப்பையை வென்று சாதனைப் படைத்தது.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான அந்த விறுவிறுப்பான போட்டியில் இந்தியா வெறும் 7 ரன்கள் வித்தியாசத்திலேயே வெற்றிபெற்றது.

போட்டி கையை விட்டு சென்றுவிடும் சூழலில் பும்ராவும், ஹர்திக் பாண்டியாவும் வீசிய இறுதி ஓவர்கள் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றுத்தந்தன.

T20 World Cup India Victory Parade

இந்த வெற்றி கிடைத்த ஓராண்டு நிறைவை கொண்டாடும் சூழலில், தென்னாப்பிரிக்காவை சந்திக்கும் இறுதிப்போட்டிக்கு முந்தைய இரவு படபடப்பாக இருந்தது குறித்து நினைவுகூர்ந்திருக்கிறார் கேப்டன் ரோஹித் சர்மா.

ஒரு நாள் உலக கோப்பை இறுதிப் போட்டியில் தோல்வியை சந்தித்த 8 மாதங்களில் மீண்டும் ஒரு இறுதிப்போட்டியில் அணியை வழிநடத்தினார் ரோஹித் சர்மா. தொடர் முழுவதும் 257 ரன்கள் சேர்த்த அவர் இறுதிப்போட்டியில் 9 ரன்களுக்கு ஆட்டமிழந்தது குறிப்பிடத்தக்கது.

Rohit Sharma

எனினும் விராட் கோலியின் 79 ரன்கள் தென்னாப்பிரிக்காவுக்கு 177 என்ற சற்று கடினமான இலக்கை நிர்ணயிக்க உதவியது. க்ளாசனின் அதிரடி பீதியைக் கிளப்பினாலும் பும்ரா, அர்ஷ்தீப் சிங் மற்றும் பாண்டியாவின் போராட்டம் போட்டியை இந்திய அணியின் பக்கம் இழுத்துவந்தது. கடைசி ஓவரில் டேவிட் மில்லரை வெளியனுப்பிய சூர்ய குமார் யாதவின் கேட்சை யார்தான் மறக்க முடியும்?

Rohit Sharma கூறியது என்ன?

"கடைசியாக 2007-ம் ஆண்டு நான் உலகக் கோப்பையை வென்றேன். என்னைப் பொருத்தவரை உலகக் கோப்பையை வெல்வதை விட பெரிய விஷயம் எதுவுமில்லை. அன்றைய இரவு முழுவதும் நான் தூங்கவில்லை. என் கால்கள் தரையில் இருப்பதை உணர முடியாத அளவு பதட்டமாக இருந்தேன்." என நினைவுகளைப் பகிர்ந்துள்ளார் ரோஹித்.

surya kumar yadhav
surya kumar yadhav

சூர்யா பிடித்த கேட்ச்!

மேலும் அவர், "சூர்யா லாங் ஆஃபில் அந்த கேட்சைப் பிடித்ததுதான், இந்த போட்டிக்கான தருணம்." எனக் கூறியுள்ளார். "நான் லாங் ஆனில் இருந்தேன். சூர்யா பறந்துவரும் வரை அது சிக்ஸ் என்றுதான் நினைத்தேன். நடுவர்கள் எல்லையை சோதனை செய்தபோது எல்லோருமே பதட்டமாக இருந்தோம். சூர்யாவிடம் கேட்டபோது, 'பிடித்துவிட்டேன் என்றே நினைக்கிறேன்' என்று பதில் கூறினார். ஆனால் பெரிய திரையில் தோன்றும் வரை நடுவர்கள் என்ன முடிவு எடுப்பார்கள் என்று கூற முடியாது." என தனது மனநிலையை விளக்கியிருக்கிறார்.

Rishabh Pant: "விபத்துக்குப் பின் கண்விழித்ததும் பண்ட் முதலில் கேட்டது..!" - பகிரும் மருத்துவர்

இந்திய டெஸ்ட் அணியின் துணைக் கேப்டனும், விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனுமான ரிஷப் பண்ட் கடந்த 2022 டிசம்பரில் டெல்லியிலிருந்து தனது சொந்த ஊருக்கு காரில் சென்று கொண்டிருந்தபோது சாலை விபத்துக்குள்ளானார்.அதிர... மேலும் பார்க்க

சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அதிரடி ஆட்டம்; மதுரை பேந்தர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி நடை

திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் உள்ள NPR கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற ஸ்ரீராம் கேபிட்டல் தமிழ்நாடு பிரீமியர் லீக் (TNPL) கிரிக்கெட் போட்டியில், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி மதுரை பேந்தர்ஸ் அணியை டக்வ... மேலும் பார்க்க

TNPL சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அதிரடி ஆட்டம்.. மதுரை பேந்தர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி | Photo Album

Dindigul TNPL Dindigul TNPL Dindigul TNPL Dindigul TNPL Dindigul TNPL Dindigul TNPL Dindigul TNPL Dindigul TNPL Dindigul TNPL Dindigul TNPL Dindigul TNPL Dindigul TNPL Dindigul TNPL Dindigul TNPL Dind... மேலும் பார்க்க

``தேவைப்படும்போது வீட்டுக்கே வந்து அழைப்பார்கள்" 2015-ல் பயிற்சியாளரிடம் ரிஷப் பண்ட் சொன்ன பதில்

இந்திய அணி இங்கிலாந்தில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. ஜூன் 20 முதல் 24 வரை நடைபெற்ற முதல் டெஸ்டில் இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.இப்போட்டியில் இந்திய ... மேலும் பார்க்க

`2024 T20 WC பைனலில் அவரைப் பெரிதாக யாரும் பேசுவதில்லை’ - நோ கோலி, பும்ரா; ரோஹித் கூறும் வீரர் யார்?

ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி 2023-ல் சொந்த மண்ணில் ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் தோல்வியடைந்த அடுத்த ஆண்டே, டி20 உலகக் கோப்பையை வென்றது.அந்த இறுதிப்போட்டியில் கடைசி 24 பந்துகளில் வெறும்... மேலும் பார்க்க

TNPL 2025: பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற்ற திண்டுக்கல் டிராகன்ஸ் | Photo Album

TNPL-2025:நெல்லை ராயல் கிங்ஸ் அணியை வீழ்த்தி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்ற திண்டுக்கல் டிராகன்ஸ்!ENG vs IND: "இந்தியா தவறியது அங்குதான்... 2-வது டெஸ்டில் அவரை இறக்குங்கள்" - கவாஸ்கர் அறிவுரை என்ன?ச... மேலும் பார்க்க