செய்திகள் :

Ruturaj Gaikwad: ``அணியின் நலனுக்காகதான் அதைச் செய்தேன்!"- தெளிவுப்படுத்தும் ருத்துராஜ்

post image

சேப்பாக்கத்தில் சென்னை மற்றும் மும்பை அணிகள் மோதிய போட்டியில் சென்னை அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது. சென்னை சார்பில் ருத்துராஜ் கெய்க்வாட் சிறப்பாக ஆடி அசத்தியிருந்தார். மும்பை அணி தோற்றிருந்தாலும் அந்த அணி சார்பில் விக்னேஷ் புத்தூர் எனும் இளம் அறிமுக பௌலர் மிகச்சிறப்பாக வீசியிருந்தார். இந்நிலையில், போட்டிக்குப் பிறகு பேசிய ருத்துராஜ் கெய்க்வாட் சென்னை அணியின் வெற்றி குறித்து சில முக்கியமான விஷயங்களை பகிர்ந்துகொண்டார்.

ருத்துராஜ்

ருத்துராஜ் கெய்க்வாட் பேசுகையில், ``நான் அவுட் ஆன பிறகு எங்கள் அணியின்மீது கொஞ்சம் அழுத்தம் கூடியது. ஒரு சில போட்டிகள் இப்படித்தான் கடைசி வரை நெருக்கமாகச் செல்லும். அப்படியொரு போட்டியை இன்று வென்றதில் மகிழ்ச்சி. அணியின் நலனைக் கருத்தில் கொண்டுதான் நம்பர் 3 இல் பேட்டிங் ஆடுகிறேன். இந்த ஆர்டர்தான் எங்கள் அணிக்கு சமநிலையைக் கொடுக்கிறது. ஓப்பனிங்கில் ராகுல் திரிபாதியாலும் அதிரடியாக ஆட முடியும். என்னாலும் நம்பர் 3 இல் சிறப்பாக ஆட முடியும்.

எங்களின் ஸ்பின்னர்கள் இன்று சரியான லைன் & லெந்தில் வீசியிருந்தனர். ஏலம் முடிந்ததிலிருந்தே மூன்று ஸ்பின்னர்களும் சேப்பாக்கத்தில் வீசுவதைக் காண ஆவலாக இருந்தோம். கலீல் அஹமது கடந்த சில ஆண்டுகளாகவே சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.

ருத்துராஜ்
ருத்துராஜ்

அவர் அனுபவமிக்க வீரர். நூர் அஹமதுவும் அதீத திறமைமிக்க பௌலர். அதனால் அவர் கண்டிப்பாக அணியில் இருக்க வேண்டும் என நினைத்தோம். தோனி கடந்த சீசனை விட இந்த சீசனில் இன்னும் ஃபிட்டாகவும் இளமையாகவும் மாறியிருக்கிறார்." என்றார்.

Shreyas Iyer : `சாய் சுதர்சனின் விக்கெட்டை எடுத்த ரகசியம் இதுதான்' - ஆட்டநாயகன் ஸ்ரேயாஸ் ஐயர்

பஞ்சாப் மற்றும் குஜராத் அணிகளுக்கிடையேயான போட்டியில் பஞ்சாப் அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது. பஞ்சாப் அணி சார்பில் டெத் ஓவரில் வைஷாக் விஜயகுமார், மார்கோ யான்சென், அர்ஷ்தீப் குமார் ஆகியோர... மேலும் பார்க்க

GT vs PBKS : தியாகம் செய்த ஸ்ரேயாஸ்; வைசாக்கின் வைட் யார்க்கர் மந்திரம் - பஞ்சாப் வென்றது எப்படி?

பீல்டிங்கைத் தேர்வு செய்த கில்!ஐ.பி.எல் 18வது சீசனின் 5வது போட்டியில், குஜராத் டைட்டன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் புள்ளிப்பட்டியலில் தங்கள் முதல் கணக்கைத் தொடங்க அகமதாபாத்தில் பலப்பரீட்சை நடத்தின... மேலும் பார்க்க

Dhoni: "ஆரம்பத்தில் தேவையற்றது என்றே கருதினேன்; ஆனால்..." - Impact Player விதி குறித்து தோனி

IPL தொடரில் இம்பாக்ட் பிளேயர் விதிக்கு ஆதரவாக குரல் எழுப்பியுள்ளார் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் எம்.எஸ்.தோனி. அதிக ரன்கள் வரும் போட்டிகளுக்கு அணியின் மனநிலைதான் முக்கிய காரணம் என்றும் பேசியுள்ளார்.202... மேலும் பார்க்க

IPL: ஆர்ச்சரை இனரீதியாக விமர்சித்த ஹர்பஜன்; வெடித்த சர்ச்சை... சாடும் கிரிக்கெட் ரசிகர்கள்!

ஐபிஎல் 18 வது சீசனின் இரண்டாவது போட்டி ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே மார்ச் 23-ம் தேதி ஹைதராபாத்தில் மாலை 3.30 மணியளவில் நடைபெற்றது.இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங்... மேலும் பார்க்க

Tamim Iqbal: ஃபீல்டிங்கின்போது நெஞ்சு வலி; மருத்துவமனையில் சொல்வதென்ன?

வங்கதேச கிரிக்கெட் வரலாற்றில் தவிர்க்க முடியாத முன்னாள் வீரர் தமிம் இக்பாலுக்கு நேற்று மைதானத்தில் அவர் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தபோது ஹார்ட் அட்டாக் ஏற்பட்ட சம்பவம் கிரிக்கெட் உலகில் அதிர்ச்சி... மேலும் பார்க்க