செய்திகள் :

TCS: சிஇஓ முதல் நிர்வாக இயக்குநர் வரை - வைரலாகும் TCS நிறுவன அதிகாரிகளின் சம்பள பட்டியல்

post image

உலக அளவில் முன்னணியில் இருக்கும் இந்தியாவின் மிகப்பெரிய மென்பொருள் சேவை நிறுவனமான டாடாவின் டிசிஎஸ் (TCS) நிறுவனம், தனது உலகளாவிய ஊழியர்களில் 2 சதவீதத்தைக் குறைக்கப் போவதாக அறிவித்துள்ளது.

டிசிஎஸ் (TCS) நிறுவனம்
டிசிஎஸ் (TCS) நிறுவனம்

அதன்படி, நடப்பு நிதியாண்டில் சுமார் 12,000 பேர் வேலைகளை இழக்க நேரும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. திடீரென பல்லாயிரக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்வது மக்களிடையே அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. இதனிடையே டிசிஎஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் பிற உயர் அதிகாரிகளின் சம்பளம் குறித்தத் தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

* அதன்படி டிசிஎஸ் தலைமை நிர்வாக அதிகாரி கே.கிரிதிவாசனின் சம்பளம் 2025 நிதியாண்டில் 4 சதவீதத்திற்கும் மேலாக அதிகரித்திருக்கிறது. அவரின் சம்பளம், அலவன்ஸ் என எல்லாவற்றையும் சேர்த்துஆண்டுக்கு 26.52 கோடி ரூபாய் சம்பளமாகப் பெறுகிறார்.

தலைமை நிர்வாக அதிகாரி கே.கிருதிவாசன்
தலைமை நிர்வாக அதிகாரி கே.கிருதிவாசன்

* டிசிஎஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை இயக்க அதிகாரியும் நிர்வாக இயக்குநருமான என்.ஜி. சுப்பிரமணியம் கடந்த மே 2024 வரை 11.55 கோடி ரூபாயை சம்பளமாக பெற்றிருக்கிறார்.

* டாடா சன்ஸ் நிறுவனத்தின் நிர்வாகத் தலைவர் என். சந்திரசேகரன் இந்தியாவின் அதிக சம்பளம் வாங்கும் நிர்வாக தலைவர்களில் ஒருவராக இருக்கிறார். 2025 நிதியாண்டில் மட்டும் 15 சதவீத சம்பள உயர்வைப் பெற்றிருக்கிறார். அதன்படி 155.81 கோடி ரூபாயை அவர் சம்பளமாகப் பெறுகிறார்.

நிர்வாகத் தலைவர் என். சந்திரசேகரன்
நிர்வாகத் தலைவர் என். சந்திரசேகரன்

* Non-Executive இயக்குநர்களான ஹேன் சோரன்சென் மற்றும் பிரதீப் குமார் கோஸ்லா ஆகியோர் தலா 2.74 கோடி ரூபாய் சம்பளமாகப் பெறுகின்றனர். அதேபோல அதே பணியை செய்யும் கேகி மிஸ்திரி மொத்தம் 3.06 கோடி ரூபாயை ஊதியமாகப் பெறுகிறாராம்.

மகாராஷ்டிரா: சட்டமன்றத்தில் ரம்மி விளையாடிய அமைச்சர்; எழுந்த கண்டனங்கள்... பறிக்கப்பட்ட இலாகா!

மகாராஷ்டிரா சட்டமன்றத்தின் மழை காலக்கூட்டத்தொடர் கடந்த வாரம் மும்பையில் நடந்தது. இக்கூட்டத்தொடரின் போது தேசியவாத காங்கிரஸ்(அஜித்பவார்) கட்சியின் வேளாண்மை துறை அமைச்சர் மாணிக்ராவ் கோக்டே தனது மொபைல் போ... மேலும் பார்க்க

Top News: BJP கூட்டணியிலிருந்து OPS விலகல் டு ம.பி-யில் 23000 பெண்கள் மாயம் வரை |ஜூலை 31 ரவுண்ட்அப்

ஜூலை 31 - டாப் செய்திகள்!* திருநெல்வேலி கவின்குமார் ஆணவக்கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் அவரின் காதலி, தாங்கள் இருவரும் உண்மையாகக் காதலித்ததாகவும், தங்களின் ரிலேஷன்ஷிப் பற்றி யாரும் தவறாகப் பேச வேண்டாம்... மேலும் பார்க்க

சவுதி அரேபியா: ராட்சத ராட்டினம் இரண்டாக உடைந்து விபத்து: 26 பேர் படுகாயம் - பதறவைக்கும் வீடியோ!

சவுதி அரேபியாவின் தைஃப் நகரில் உள்ள கிரீன் மவுண்டன் பூங்காவில் இன்று கோர விபத்து நடந்துள்ளது. '360 டிகிரி' எனப்படும் ராட்சத ராட்டினத்தின் மையத் தூண் இயக்கத்தின்போது திடீரென உடைந்து விழுந்ததில் 26 பேர... மேலும் பார்க்க

Kerala: கல்லறைகளில் இடம்பெறும் QR கோடு - என்ன காரணம் தெரியுமா?

கேரளாவில் உள்ள கல்லறை ஒன்றில், உலோகத்தால் ஆன QR கோடு உருவாக்கப்பட்டு, பதிக்கப்பட்டுள்ளது. அந்த கோட்டை யாராவது தங்களது செல்போனில் ஸ்கேன் செய்தால், அந்தக் கல்லறையில் இருக்கும் நபரின் வாழ்க்கை, நினைவுகள்... மேலும் பார்க்க

’2 பேருமே தத்தெடுக்கப்பட்டவர்கள் தான்’ - தந்தை சொத்தில் பங்கு கேட்ட பிள்ளைகள் ஷாக்!

சீனாவின் தியான்ஜின் நகரில் ஒரு வினோதமான சம்பவம் நடந்துள்ளது. இறந்த தந்தையின் ரூ.3.6 கோடி (மூன்று மில்லியன் யுவான்) சொத்துக்காக அண்ணன், தங்கை இருவருமே சண்டையிட்டுக் கொண்ட நிலையில் இவர்கள் இருவரும் அவரத... மேலும் பார்க்க

இங்கிலாந்து: செல்லமாக நக்கிய வளர்ப்பு நாய்; ஒரு வாரத்தில் இறந்துபோன 83 வயது பெண்மணி; என்ன நடந்தது?

இங்கிலாந்தைச் சேர்ந்த 83 வயதான பெண்மணி ஒருவர் தனது வீட்டில் வளர்க்கப்பட்ட நாய் அவரின் காலை நாவினால் தீண்டியதை எடுத்து அவருக்குத் தொற்று ஏற்பட்டு மரணம் அடைந்துள்ளார். அந்தப் பெண்மணியின் காலில் ஏற்கனவே ... மேலும் பார்க்க