செய்திகள் :

UP: `பள்ளி மூடல்' குழந்தைகள் அழும் வீடியோ போலியா? நாடகமாடிய ஆசிரியர் சஸ்பெண்ட் - என்ன நடந்தது?

post image

மகாராஷ்டிரா உள்பட வடமாநிலங்களில் குறைவான குழந்தைகள் படிக்கும் பள்ளிகள் அருகில் உள்ள பள்ளிகளோடு இணைக்கப்பட்டு வருகிறது. இதனால் கிராமத்தில் உள்ள குழந்தைகள் பக்கத்து கிராமத்திற்கு பல கிலோமீட்டர் தூரத்திற்கு நடந்து சென்று படிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், உத்தரப்பிரதேச மாநிலம் மகாராஜ்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள ருத்ராபூர் என்ற கிராமத்தில் உள்ள பள்ளியில் அடிப்படை வசதிகள் குறைவாக இருப்பதாக கூறி அப்பள்ளியை அருகில் உள்ள கிராமத்தோடு இணைக்க மாநில அரசு முடிவு செய்துள்ளதாக தவறான தகவல் பரவியது.

மாணவர்கள் பள்ளிக்கு வந்தவுடன் இன்று முதல் இந்த பள்ளி நிரந்தமாக மூடப்படுகிறது என்று அவர்களிடம் கூற,

பள்ளிக்கு வந்த குழந்தைகள் அதிர்ச்சியடைந்தனர். குழந்தைகள் பள்ளியை மூடியிருப்பதை பார்த்து அழும் காட்சியும் பெற்றோர்கள் அதை பார்த்து அழும் காட்சியும் இணையத்தில் பரவி கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியது. அந்த வீடியோவை 55 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர்.

ஆனால், அந்த வீடியோ வெளியானவுடன் மாநில கல்வித்துறை இது குறித்து விசாரணை நடத்தியது. இதில் அந்த வீடியோக்கள் பள்ளி முதல்வரால் திட்டமிட்டு உருவாக்கப்பட்டது என்றும், மாணவர்களை பயன்படுத்தி இது போன்று போலி வீடியோ உருவாக்கப்பட்டு இருப்பதும் தெரிய வந்தது.

விசாரணையில் சம்பந்தப்பட்ட கிராமத்தில் உள்ள பள்ளியை அருகில் உள்ள கிராமத்தில் இருக்கும் பள்ளியோடு இணைப்பது தொடர்பாக எந்த வித உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என்று தெரிய வந்தது.

மாவட்ட நீதிபதி சந்தோஷ் குமாரும் பள்ளி எந்த வித பிரச்னையும் இல்லாமல் செயல்படுவதை உறுதிபடுத்தினார். மேலும், சம்பந்தப்பட்ட பள்ளி முதல்வர் குசும்லதா பாண்டேதான் இது போன்ற ஒரு நாடகத்தை அரங்கேற்றி இருப்பது தெரிய வந்தது.

பள்ளி முதல்வர் குசும்லதா பாண்டே சஸ்பெண்ட்

விசாரணையில், `மாநில அரசு 50 குழந்தைகளுக்கும் குறைவான பள்ளியை மூடுவதாக கூறியதற்கு, மக்களிடம் அனுதாபத்தை வரவழைக்க, நிர்வாகத்திற்கு நெருக்கடி கொடுக்க மாணவர்களை பயன்படுத்தி இது போன்ற ஒரு நாடகத்தை நடத்தியுள்ளனர்' என்று தெரிய வந்துள்ளது.

இதையடுத்து பள்ளி முதல்வர் குசும்லதா பாண்டே பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அதோடு சரியான நேரத்தில் பள்ளியை திறக்க நடவடிக்கை எடுக்காத பிளாக் கல்வி அதிகாரி மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

உத்தரப்பிரதேசத்தில் 50 குழந்தைகளுக்கும் குறைவான பள்ளிகளை மூட மாநில அரசு முடிவு செய்துள்ளது. அந்த வகையில் மொத்தம் 27 ஆயிரம் பள்ளிகளை மூடப்போவதாக மாநில அரசு கடந்த ஆண்டு அறிவித்தது. இதற்கு கிராமத்தினர் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. ஆனால் அந்த எதிர்ப்புகளையும் மீறி மாநில அரசு ஒவ்வொரு பள்ளியையும் மூடிக்கொண்டிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

"ரூ.5000 டு ரூ.46 லட்சம் சம்பளம்; என் அம்மாதான் எனக்கு ஹீரோ" - தாயின் தியாகம் குறித்து நெகிழும் மகன்

தொழில்நுட்ப வல்லுநர் ஒருவர், தான் மாதம் ரூ. 5,000 சம்பளத்துக்கு வேலைக்கு சேர்ந்ததிலிருந்து 10 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது ஆண்டுக்கு ரூ. 46 லட்சம் உயர்ந்திருப்பதாகவும், தன்னுடைய இந்த வளர்ச்சியில் தனது... மேலும் பார்க்க

`கையெழுத்துக்காக அறையில் பூட்டி கட்டாயப்படுத்தினர்!' - கரிஷ்மா கபூர் முன்னாள் கணவரின் தாயார் புகார்!

பாலிவுட் நடிகை கரிஷ்மா கபூரின் முன்னாள் கணவர் சஞ்சய் கபூர் கடந்த ஆண்டு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு லண்டனில் காலமானார். அவர் மறைவை தொடர்ந்து அவர் விட்டுச் சென்ற ரூ.30 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான கம்பெ... மேலும் பார்க்க

Zepto: மறைமுக கட்டணமா? - `COD டெலிவரியில் இதான் நடக்கிறது' - மார்க்கெட்டிங் நிபுணர் சொல்வதென்ன?

பிரபல விரைவு வர்த்தக தளமான ஜெப்டோ, கேஷ் ஆன் டெலிவரி (COD) ஆர்டர்களில் மறைமுகமாக கட்டணம் விதிப்பதாகவும், இதை வாடிக்கையாளர்களுக்கு தெளிவாக தெரிவிக்கவில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.பெங்களூருவைச... மேலும் பார்க்க

மும்பை: தொடர் ரயில் குண்டுவெடிப்பு; 12 குற்றவாளிகளை விடுவிக்கும் உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட் தடை!

மும்பையில் 2006-ம் ஆண்டு ஜூலை 11-ம் தேதி 7 புறநகர் ரயில்களில் அடுத்தடுத்து நடந்த தொடர் குண்டு வெடிப்பில் 180 பேர் வரை உயிரிழந்தனர். 700 பேர் காயம் அடைந்தனர். நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய... மேலும் பார்க்க

சிங்கப்பூர்: ஏர்போர்ட் கடைகளில் ரூ.3.5 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் திருட்டு - சிக்கிய இந்தியர்

சிங்கப்பூர் ஜூவல் சாங்கி விமான நிலையத்தில் உள்ள 14 கடைகளில் இருந்து பைகள், அழகு சாதனப் பொருட்கள் உள்ளிட்ட சுமார் 3.5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களை 38 வயது இந்தியர் ஒருவர் திருடியதாக அந்நாட்டு காவ... மேலும் பார்க்க

AI -பேச்சால் ஈர்க்கப்பட்டு, மனைவியிடம் விவாகரத்து கேட்ட 75 வயது முதியவர் - சீனாவில் நடந்த சம்பவம்

சீனாவில் 75 வயதான முதியவர் ஒருவர், ஆன்லைனில் பார்த்த ஒரு "பெண்ணின்" பேச்சால் ஈர்க்கப்பட்டு, தனது மனைவியிடம் விவாகரத்து கோரியுள்ளார்.அந்தப் "பெண்" ஒரு செயற்கை நுண்ணறிவு (AI) என்பது அவருக்கு தெரியவில்லை... மேலும் பார்க்க