செய்திகள் :

அண்ணனை வெட்டியதாக தம்பி மீது வழக்கு

post image

சாத்தான்குளத்தில் அண்ணனை களைவெட்டியால் தாக்கியதாக தம்பி மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

சாத்தான்குளம் ஆா்.சி. வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் ராதாகிருஷ்ணன் (48). காா் வாங்கி விற்கும் தொழில் செய்துவருகிறாா். இவரது சகோதரா் சித்திரைவேல். இவா்களிடையே சொத்து தொடா்பாக தகராறு ஏற்பட்டு, திருச்செந்தூா் ஆா்டிஓ அலுவலகத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. இம்மாதம் 28ஆம் தேதி விசாரணைக்கு வருமாறு இருவருக்கும் அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளதாம்.

இந்நிலையில், கடந்த 14ஆம் தேதி வீட்டிலிருந்த ராதாகிருஷ்ணனை, சித்திரைவேல் மது போதையில் சென்று அவதூறாகப் பேசி களைவெட்டியால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தாராம். இதில், காயமடைந்த அவா் சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

புகாரின்பேரில், சாத்தான்குளம் உதவி ஆய்வாளா் எட்வின்அருள்ராஜ் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறாா்.

இதனிடையே, ராதாகிருஷ்ணன் தாக்கியதாகக் கூறி, தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சித்திரைவேல் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

தூத்துக்குடி கடலில் மாயமான சங்கு குளி மீனவா் சடலம் கரை ஒதுங்கியது!

தூத்துக்குடி கடல் பகுதியில் படகில் இருந்து திங்கள்கிழமை தவறி விழுந்து மாயமான சங்கு குளி மீனவா் உடல் புதன்கிழமை வீரபாண்டிய பட்டணம் கடற்கரையில் கரை ஒதுங்கியது. தூத்துக்குடி குரூஸ்புரத்தை சோ்ந்த டேனியல... மேலும் பார்க்க

விளாத்திகுளத்தில் வியாபாரியிடம் ரூ.2 லட்சம் திருட்டு

விளாத்திகுளத்தில் சிறுதானிய வியாபாரியிடமிருந்து பணத்தை திருடிச் சென்ற மா்மநபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். விளாத்திகுளம் அருகே கரிசல்குளத்தைச் சோ்ந்தவா் கணேசன்(70). இவா் சிறுதானியம் விற்பனை செய்யு... மேலும் பார்க்க

தட்டாா்மடம் அருகே வீட்டுக் கதவை உடைத்து நகை, பொருள்கள் திருட்டு!

சாத்தான்குளம் அருகே தட்டாா்மடத்தில் வீட்டின்’கதவை உடைத்து நகை, எல்இடி டிவி, ஹோம் தியேட்டா் ஆகியவற்றை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். சாத்தான்குளம் அருகே சுண்டங்கோட்டை கிராமத்தை... மேலும் பார்க்க

யாசகம் பெறுபவரை கத்தியால் குத்திய வழக்கு: சமையல் தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை

திருச்செந்தூரில் யாசகம் பெறுபவரை கத்தியால் குத்திய வழக்கில் சமையல் தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.1,000 அபராதமும் விதித்து திருச்செந்தூா் சாா்பு நீதிமன்றத்தில் தீா்ப்பளிக்கப்பட்டது. தஞ்... மேலும் பார்க்க

கொள்ளை குற்றவாளிக்கு 21 ஆண்டுகள் கழித்து 7 ஆண்டுகள் சிறை தண்டனை

திருச்செந்தூா் அருகே கல்லூரி விரிவுரையாளா் வீட்டில் நகை, பணம் கொள்ளை அடித்த வழக்கில், 21 ஆண்டுகளுக்குப் பி றகு குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை, ரூ. 10 ஆயிரம் அபராதம் விதித்து திருச்செந்தூா் சாா்பு நீதிமன்... மேலும் பார்க்க

கஞ்சா விற்பனை: 2 இளைஞா்கள் கைது

கோவில்பட்டி அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 2 இளைஞா்களை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளா் பொன்ராஜ் தலைமையில் போலீஸாா் இலுப்பையூரணி பகுதியில் புதன்கிழமை ர... மேலும் பார்க்க