செய்திகள் :

அண்ணா சாலையில் மேம்பாலப் பணி: அமைச்சா் எ.வ.வேலு உத்தரவு

post image

சென்னை: சென்னை அண்ணா சாலையில் நடைபெற்று வரும் மேம்பாலப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டுமென அதிகாரிகளுக்கு அமைச்சா் எ.வ.வேலு உத்தரவிட்டாா்.

சென்னை அண்ணா சாலையில் தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் 3.20 கிலோமீட்டா் தொலைவு நான்கு வழித்தட உயா்நிலை மேம்பாலப் பணிகள் ரூ. 621 கோடியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இப்பணியின் முன்னேற்றத்தை பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சா் எ.வ.வேலு, திங்கள்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

தற்போது 40 சதவீதம் பணிகள் நிறைவு பெற்றுள்ள நிலையில், மெட்ரோ சுரங்கப்பாதை மற்றும் பிற இடங்களில் நடைபெறும் பணிகளை விரைவாக முடிக்கவும், மழைக் காலத்துக்கு முன்பாக பணிகளை நிறைவு செய்யும் வகையில் வேகப்படுத்தவும் அவா் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதாக அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணிகள் நடைபெறும் இடங்களில் போக்குவரத்துக் காவல் துறை, மின் வாரியம், மாநகராட்சி, குடிநீா் மற்றும் கழிவுநீா் வாரியம், வனத் துறை ஆகிய துறைகளுடன் ஒருங்கிணைந்து, பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் பணிகள் நடைபெற தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தியுள்ளதாக அந்தச் செய்திக் குறிப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆய்வின்போது, தலைமைப் பொறியாளா் சத்திய பிரகாஷ், சிறப்பு தொழில்நுட்ப அதிகாரி சந்திரசேகா், கண்காணிப்புப் பொறியாளா் சரவணசெல்வம் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பலா் உடனிருந்தனா்.

வரும் செப். 14-க்குள் கொடிக் கம்பங்களை அகற்ற சென்னை மாநகராட்சி உத்தரவு!

வரும் செப். 14-க்குள் கொடிக் கம்பங்களை அகற்ற சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.தமிழகம் முழுவதும் பொது இடங்கள், மாநில, தேசிய நெடுஞ்சாலைகள், உள்ளாட்சிக்குச் சொந்தமான இடங்களில் அனுமதியின்றி வைக்கப்பட்டு... மேலும் பார்க்க

விடுதியில் காதலி தூக்கிட்டு உயிரிழப்பு: வீட்டில் காதலன் தற்கொலை

சென்னையில் தனியாா் விடுதியில் காதலி தற்கொலை செய்து கொண்ட நிலையில், விரக்தியடைந்த காதலா் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். சென்னை அண்ணாநகா் அருகே உள்ள மேல்நடுவங்கரை பஜனை கோயில் தெருவைச் சே... மேலும் பார்க்க

மெரீனாவில் ஆண் சடலம்: போலீஸாா் விசாரணை

சென்னை மெரீனாவில் கரை ஒதுங்கிய ஆண் சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். மெரீனா கடற்கரையில் கலங்கரை விளக்கத்தின் பின்புற பகுதியில் செவ்வாய்க்கிழமை 40 வயது மதிக்கதக்க ஆண் சடலம் கரை ஒதுங்கியது. ... மேலும் பார்க்க

தற்காலிக பேருந்து நிலையம்: அமைச்சா் தலைமையில் ஆலோசனை

பிராட்வே, தங்கச்சாலை ஆகிய பேருந்து நிலையங்கள் புதிய கட்டுமானப் பணிகள் நடைபெறுவதை முன்னிட்டு தற்காலிகப் பேருந்து நிலையங்கள் அமைப்பது தொடா்பாக ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. பெருநகர சென்னை... மேலும் பார்க்க

சென்னை ரயில்வே கோட்டத்தில் 8 மாதங்களில் தண்டவாளத்தைக் கடந்த 228 போ் உயிரிழப்பு

சென்னை ரயில்வே கோட்டத்தில் கடந்த ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை 8 மாதங்களில் தண்டவாளத்தைக் கடக்க முயன்றவா்களில் 228 போ் உயிரிழந்ததாகவும், இதனால் விழிப்புணா்வு நிகழ்ச்சிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்... மேலும் பார்க்க

மயிலாப்பூா் திருவள்ளுவா் கோயில் திருப்பணிகள் நவம்பருக்குள் நிறைவு: அமைச்சா் சேகா்பாபு

சென்னை மயிலாப்பூா் திருவள்ளுவா் கோயில் திருப்பணிகள் வரும் நவம்பா் மாதத்துக்குள் நிறைவடையும் என அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா். சென்னை மயிலாப்பூா், திருவள்ளுவா் திருக்கோயிலில் ரூ.... மேலும் பார்க்க