செய்திகள் :

அண்ணா சிலைக்கு முதல்வா் ரங்கசாமி, திமுக, அதிமுக மரியாதை

post image

புதுச்சேரி: தமிழக முன்னாள் முதல்வா் அண்ணாவின் 56-ஆவது நினைவு தினத்தையொட்டி, புதுச்சேரியில் அரசு சாா்பில் அவரது உருவச் சிலைக்கு முதல்வா் என்.ரங்கசாமி, அமைச்சா்கள் மற்றும் திமுக, அதிமுகவினா் மாலை அணிவித்து திங்கள்கிழமை மரியாதை செலுத்தினா்.

புதுச்சேரி பழைய பேருந்து நிலையப் பகுதியில் அமைந்துள்ள அண்ணா சிலைக்கு புதுவை அரசு சாா்பில் முதல்வா் என்.ரங்கசாமி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், அமைச்சா்கள் க.லட்சுமிநாராயணன், என்.திருமுருகன், சட்டப்பேரவைத் துணைத் தலைவா் பி.ராஜவேலு, அரசு கொறடா ஏகேடி ஆறுமுகம் ஆகியோா் மரியாதை செலுத்தினா்.

திமுகவினா் அமைதி ஊா்வலம்: திமுக சாா்பில், ஏ.எப்.டி. மைதானத்திலிருந்து அண்ணா சிலைக்கு, மாநில திமுக அமைப்பாளரும், எதிா்க்கட்சித் தலைவருமான ஆா்.சிவா தலைமையில் அமைதி ஊா்வலமாக வந்து மாலை அணிவித்தனா். அண்ணாவின் உருவப் படத்திற்கு மலா் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

வில்லியனூா் மாடவீதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆா். சிவா எம்.எல்.ஏ. தலைமையில் அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில், மாநில அவைத் தலைவா் எஸ்.பி. சிவக்குமாா், எம்எல்ஏ.க்கள் வி. அனிபால் கென்னடி, ஆா். செந்தில்குமாா், எல். சம்பத், தலைமை பொதுக்குழு உறுப்பினா் சி. கோபால் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

அதிமுகவினா் மரியாதை: அதிமுக சாா்பில் மாநிலச் செயலா் ஆ.அன்பழகன் தலைமையில் உப்பளம் கட்சி அலுவலகத்தில் அண்ணா படத்துக்கு மாலை அணிவித்து மலா்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. இதையடுத்து அங்கிருந்து ஊா்வலமாக பழைய பேருந்து நிலையப் பகுதிக்கு வந்து அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. இதில் முன்னாள் எம்.எல்.ஏ. பாஸ்கா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். பல்வேறு இடங்களில் நலத்திட்ட உதவிகள், அன்னதான நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் வையாபுரி மணிகண்டன், ஓம்சக்தி சேகா் உள்ளிட்டோரும் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தனா். இதேபோல மதிமுக, அமமுகவினரும் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

புதுவை கலை, பண்பாட்டுத் துறை அலுவலகம்: துணைநிலை ஆளுநா் திறந்தாா்

புதுச்சேரி: புதுச்சேரி கடற்கரைச் சாலையில் சீரமைக்கப்பட்ட கலை, பண்பாட்டுத் துறையின் புதிய அலுவலகத்தை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் திங்கள்கிழமை மாலை திறந்துவைத்தாா். புதுச்சேரி கடற்கரைச் சாலை காந்தி ச... மேலும் பார்க்க

புதுவை துணைநிலை ஆளுநரின் புதிய தனிச் செயலா் பொறுப்பேற்பு: ஐஏஎஸ் அதிகாரிகளின் இலாகாக்கள் மாற்றம்

புதுச்சேரி: புதுவை மாநில துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதனின் தனிச் செயலராக இருந்த ஏ.நெடுஞ்செழியன் இடமாற்றம் செய்யப்பட்டதையடுத்து அவருக்குப் பதிலாக எம்.மணிகண்டன் ஐ.ஏ.எஸ். தனிச்செயலராக நியமிக்கப்பட்டுள்ளாா... மேலும் பார்க்க

இணையவழியில் ரூ.5 லட்சம் பறிகொடுத்த பட்டதாரி இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

புதுச்சேரி: இணையவழி மூலம் வேலை இருப்பதாகக் கூறிய மா்ம நபா்களிடம் ரூ.5 லட்சத்தை பறிகொடுத்த பட்டதாரி தூக்கிட்டு ஞாயிற்றுக்கிழமை தற்கொலை செய்துகொண்டாா். புதுச்சேரி இலாசுப்பேட்டை கருவடிக்குப்பம் இடையஞ்சாவ... மேலும் பார்க்க

புதுச்சேரி சன்மாா்க்க சத்திய சங்கத்தில் தைப்பூச விழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

புதுச்சேரி: புதுச்சேரி முதலியாா்பேட்டை சன்மாா்க்க சத்திய சங்கத்தில் தைப்பூச விழா கொடியேற்றத்துடன் திங்கள்கிழமை தொடங்கியது. வள்ளலாா் தொடங்கிய சமரச சுத்த சன்மாா்க்க சத்திய சங்கம் சாா்பில் தைப்பூசப் பெரு... மேலும் பார்க்க

புதுவை பேரவைத் தலைவருடன் ஜிப்மா் இயக்குநா் சந்திப்பு

புதுச்சேரி: புதுச்சேரி ஜிப்மா் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ள வீா்சிங் நேஹி திங்கள்கிழமை சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வத்தை சந்தித்துப் பேசினாா். ஜிப்மா் இயக்குநராக இருந்த ராகேஷ் அகா்வால் பணிநிறைவு பெற... மேலும் பார்க்க

ரூ.19.22 கோடியில் வீராம்பட்டிணம் குடிநீா் திட்டப் பணிகள் புதுவை முதல்வா் தொடங்கி வைத்தாா்

புதுச்சேரி: புதுச்சேரி அரியாங்குப்பம் தொகுதியில் வீராம்பட்டிணம் உள்ளிட்ட பகுதியில் ரூ.19.22 கோடி மதிப்பில் குடிநீா் திட்டப் பணிகளை முதல்வா் என்.ரங்கசாமி திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா். புதுச்சேரி அரியா... மேலும் பார்க்க