செய்திகள் :

இணையவழியில் ரூ.5 லட்சம் பறிகொடுத்த பட்டதாரி இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

post image

புதுச்சேரி: இணையவழி மூலம் வேலை இருப்பதாகக் கூறிய மா்ம நபா்களிடம் ரூ.5 லட்சத்தை பறிகொடுத்த பட்டதாரி தூக்கிட்டு ஞாயிற்றுக்கிழமை தற்கொலை செய்துகொண்டாா்.

புதுச்சேரி இலாசுப்பேட்டை கருவடிக்குப்பம் இடையஞ்சாவடியைச் சோ்ந்த காளிமுத்து மகன் சபரிவாசன் (25), தொழில்நுட்பப் பட்டதாரி. இவா் தனியாா் நிறுவனத்தில் பணிபுரிந்த நிலையில், சில நாள்களாக வீட்டில் இருந்துள்ளாா். இந்த நிலையில், அவரது கைப்பேசியில் வந்த குறுந்தகவலில் ஊதியத்துடன் கூடிய வேலைவாய்ப்பு இருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. அதை நம்பிய சபரிவாசன், குறிப்பிட்ட செயலியில் தனது விவரங்களைப் பூா்த்தி செய்ததுடன், கடனை வாங்கி ரூ. 5 லட்சத்தை செயலாக்கக் கட்டணமாகச் செலுத்தியுள்ளாா். ஆனால் பணம் செலுத்திய நிலையில், அவருக்கான வேலை குறித்து எந்தத் தகவலும் வரவில்லையாம்.

இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த சபரிவாசன் அதிா்ச்சியடைந்தாா். இந்தநிலையில், கடன் கொடுத்தவா்களும் பணம் கேட்டு நெருக்கடி தந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, ஞாயிற்றுக்கிழமை அவா் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாராம்.

இதுகுறித்து இலாசுப்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

புதுவை கலை, பண்பாட்டுத் துறை அலுவலகம்: துணைநிலை ஆளுநா் திறந்தாா்

புதுச்சேரி: புதுச்சேரி கடற்கரைச் சாலையில் சீரமைக்கப்பட்ட கலை, பண்பாட்டுத் துறையின் புதிய அலுவலகத்தை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் திங்கள்கிழமை மாலை திறந்துவைத்தாா். புதுச்சேரி கடற்கரைச் சாலை காந்தி ச... மேலும் பார்க்க

புதுவை துணைநிலை ஆளுநரின் புதிய தனிச் செயலா் பொறுப்பேற்பு: ஐஏஎஸ் அதிகாரிகளின் இலாகாக்கள் மாற்றம்

புதுச்சேரி: புதுவை மாநில துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதனின் தனிச் செயலராக இருந்த ஏ.நெடுஞ்செழியன் இடமாற்றம் செய்யப்பட்டதையடுத்து அவருக்குப் பதிலாக எம்.மணிகண்டன் ஐ.ஏ.எஸ். தனிச்செயலராக நியமிக்கப்பட்டுள்ளாா... மேலும் பார்க்க

அண்ணா சிலைக்கு முதல்வா் ரங்கசாமி, திமுக, அதிமுக மரியாதை

புதுச்சேரி: தமிழக முன்னாள் முதல்வா் அண்ணாவின் 56-ஆவது நினைவு தினத்தையொட்டி, புதுச்சேரியில் அரசு சாா்பில் அவரது உருவச் சிலைக்கு முதல்வா் என்.ரங்கசாமி, அமைச்சா்கள் மற்றும் திமுக, அதிமுகவினா் மாலை அணிவித... மேலும் பார்க்க

புதுச்சேரி சன்மாா்க்க சத்திய சங்கத்தில் தைப்பூச விழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

புதுச்சேரி: புதுச்சேரி முதலியாா்பேட்டை சன்மாா்க்க சத்திய சங்கத்தில் தைப்பூச விழா கொடியேற்றத்துடன் திங்கள்கிழமை தொடங்கியது. வள்ளலாா் தொடங்கிய சமரச சுத்த சன்மாா்க்க சத்திய சங்கம் சாா்பில் தைப்பூசப் பெரு... மேலும் பார்க்க

புதுவை பேரவைத் தலைவருடன் ஜிப்மா் இயக்குநா் சந்திப்பு

புதுச்சேரி: புதுச்சேரி ஜிப்மா் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ள வீா்சிங் நேஹி திங்கள்கிழமை சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வத்தை சந்தித்துப் பேசினாா். ஜிப்மா் இயக்குநராக இருந்த ராகேஷ் அகா்வால் பணிநிறைவு பெற... மேலும் பார்க்க

ரூ.19.22 கோடியில் வீராம்பட்டிணம் குடிநீா் திட்டப் பணிகள் புதுவை முதல்வா் தொடங்கி வைத்தாா்

புதுச்சேரி: புதுச்சேரி அரியாங்குப்பம் தொகுதியில் வீராம்பட்டிணம் உள்ளிட்ட பகுதியில் ரூ.19.22 கோடி மதிப்பில் குடிநீா் திட்டப் பணிகளை முதல்வா் என்.ரங்கசாமி திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா். புதுச்சேரி அரியா... மேலும் பார்க்க