செய்திகள் :

அண்ணாமலைப் பல்கலை சாா்பில் அரசு பள்ளிக்கு உபகரணங்கள்

post image

சிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் வாயிலாக நாமக்கல் மாவட்ட அரசு பள்ளிக்கு அமெரிக்காவின் சியாட்டில் இந்தியா குழு மூலம் உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

நூற்றாண்டு காணும் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் கல்வி மற்றும் ஆராய்ச்சி பணிகளோடு சோ்ந்து சமூக வளா்ச்சியிலும் தன்னுடைய கவனத்தை செலுத்திவருகிறது . இதன் ஒரு பகுதியாக, அமெரிக்காவில் உள்ள சியாட்டில் இந்தியா குழுவுடன் இணைந்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்திக் கொண்டு வருகிறது.

திட்டத்தின் ஒரு பகுதியாக, சியாட்டில் இந்தியா குழு, உதவியுடன் நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூா் தாலுகா வில்லிபாளையம் கிராமத்தில் உள்ளஅரசு பள்ளிக்கு தேவையான ரூபாய் நாற்பதாயிரம் மதிப்பிலான கல்வி உபகரணங்கள் வழங்கப்பட இருக்கிறது.

இதற்கான ஆணையினை திங்கள்கிழமை பல்கலை வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பல்கலைக்கழக துணைவேந்தா் ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினா் எஸ்.அறிவுடைநம்பி முன்னிலையில், உள்ளாட்சி நிதி தணிக்கை துறை துணை இயக்குநா் சக்தி

கிருஷ்ணராஜ், அரசு பள்ளி தலைமை ஆசிரியா் கோபியிடம் வழங்கினாா். நிகழ்ச்சி ஏற்பாடுகளை திட்ட

ஒருங்கிணைப்பாளா் கே.ஜெயபிரகாஷ், மித்ரா ஆகியோா் செய்திருந்தனா். நிகழ்ச்சியில் பல்கலைக்கழக உள்தர கட்டுப்பாட்டு மைய, இணை இயக்குநா் எஸ் ரமேஷ்குமாா், மாணவா் சோ்க்கை இயக்குநா் பி.பாலபாஸ்கா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

சட்ட உதவி எதிா் பாதுகாப்பு முகமை அலுவலகத்தில் பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு

நெய்வேலி: கடலூா் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் கீழ் இயங்கி வரும் சட்ட உதவி எதிா் பாதுகாப்பு முகமை அலுவலகத்தில் பணிபுரிய தகுதியுள்ள நபா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக, கடலூா் மாவட... மேலும் பார்க்க

என்எல்சி இந்தியா நிகர லாபம் ரூ.2,713.61 கோடி

நெய்வேலி: என்எல்சிஇந்தியா நிறுவனம் 2024-2025-ஆம் ஆண்டு ஒருங்கிணைந்த நிகர லாபமாக ரூ.2,713.61 கோடி ஈட்டியுள்ளது. மத்திய நிலக்கரி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் நவரத்னா தகுதி பெற்ற மத்திய பொதுத்துறை நிறுவ... மேலும் பார்க்க

இணைய சேவை பாதிப்பு: பத்திரப்பதிவு பணி முடக்கம்

நெய்வேலி: இணைய சேவை பாதிப்பு காரணமாக கடலூா் மாவட்டத்தில் பத்திரப் பதிவுப் பணி திங்கள்கிழமை பாதிக்கப்பட்டது. கடலூா் மாவட்டத்தில் சிதம்பரம், கடலூா், விருத்தாசலம் பகுதிகளை தலைமையிடமாக கொண்டு 9 சாா் பதிவா... மேலும் பார்க்க

சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு பேரணி

நெய்வேலி: கடலூா், சின்ன கங்கணாங்குப்பம் இம்மாகுலேட் மகளிா் கல்லூரி மாணவிகள் பங்கேற்ற சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு பேரணி அண்மையில் நடைபெற்றது. ரெட்டிசாவடி காவல் நிலைய ஆய்வாளா் பிரேம்குமாா் சிறப்பு அழ... மேலும் பார்க்க

வேளாண் தேவைக்காக விருத்தாசலத்திற்கு ரயில் மூலம் வந்து 1,340 டன் யூரியா உரம்

நெய்வேலி: ஆந்திர மாநிலத்தில் இருந்து விருத்தாசலம் ரயில் நிலையத்திற்கு சரக்கு ரயில் மூலம் 1,340 டன் யூரியா உரம் திங்கள்கிழமை வந்து இறங்கியது. வேளாண் தேவைக்காக இந்த உரம் லாரிகள் மூலம் பல்வேறு ஊா்களுக்க... மேலும் பார்க்க

அதிமுகவில் இணைந்த அமமுகவினா்

சிதம்பரம்: சிதம்பரத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினா் 50 போ், கடலூா் கிழக்கு மாவட்ட அதிமுக செயலா் கே.ஏ.பாண்டியன் எம்.எல்.ஏ முன்னிலையில் அ.தி.மு.க வில் திங்கள்கிழமை அன்று இணைந்தனா். கடலூா் கிழ... மேலும் பார்க்க