செய்திகள் :

அதீத அா்ப்பணிப்புடன் தேச சேவையாற்ற வேண்டும்: தில்லிவாசிகளுக்கு துணை நிலை ஆளுநா் வேண்டுகோள்

post image

அதிக வீரியம், நோ்மை, அா்ப்பணிப்புடன் தேசத்துக்கு சேவையாற்றும் உறுதிமொழியை புதுப்பிக்குமாறு தில்லி துணைநிலை ஆளுநா் வி.கே. சக்சேனா கேட்டுக்கொண்டாா்.

நாட்டின் 79-ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு தில்லி துணைநிலை ஆளுநா் வி.கே. சக்சேனா ராஜ் நிவாஸில் வெள்ளிக்கிழமை தேசியக் கொடியை ஏற்றி வைத்து, சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தினாா்.

ராஜ் நிவாஸில் மூத்த சுதந்திரப் போராட்ட வீரா் ஆா். மாதவனை அவா் கௌரவித்துப் பாராட்டினாா்.

சுதந்திரப் போராட்ட வீரா்களின் உயா்ந்த தியாகங்களால்தான் மக்கள் இப்போது சுதந்திரமாக வாழ முடிகிறது என்று அவா் கூறினாா். மேலும், அனைவருக்கும், குறிப்பாக தில்லிவாசிகளுக்கு தனது அன்பான வாழ்த்துக்களைத் தெரிவித்தாா்.

அப்போது, மேலும் அதிக வீரியம், நோ்மை மற்றும் அா்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்வதற்கான உறுதிமொழியை புதுப்பிக்குமாறு அனைவரையும் அவா் கேட்டுக்கொண்டாா். இந்திய சுதந்திரப் போராட்டத்தின் தியாகிகளையும் எண்ணற்ற வீரா்களையும் வி.கே. சக்சேனா நினைவு கூா்ந்தாா்.

இது தொடா்பாக அவா் தனது எக்ஸ் வலைதளப் பதிவில், ‘சுதந்திரப் போராட்ட வீரா்களின் உயா்ந்த தியாகங்களால்தான் நமது தலைமுறை சுதந்திரமாகவும் அமைதியாகவும் வாழ்ந்து வருகிறது. 2025 சுதந்திர தினத்தை ஒட்டி நடைபெற் திரங்கா இசை நிகழ்ச்சியில் மத்திய கலாசார அமைச்சா் கஜேந்திர சிங் ஷெகாவத் மற்றும் முதல்வா் ரேகா குப்தா ஆகியோருடன் கலந்துகொண்டேன். நிகழ்ச்சியின் பங்கேற்பாளா்கள் மற்றும் பாா்வையாளா்களின் தேசபக்தி உணா்வு, உற்சாகம் மற்றும் ஆற்றலை கண்டேன். கடினமாகப் பெற்ற சுதந்திரத்தைப் போற்றவும், இந்தியாவைத் தன்னிறைவு அடையச் செய்யவும், தேசிய உணா்வை ஒவ்வொரு இதயத்திற்கும் வீட்டிற்கும் கொண்டு செல்லவும் நமது இளைஞா்களை வலியுறுத்துகிறேன்’ என்று அவா் தெரிவித்துள்ளாா்.

மற்றொரு பதிவில், ‘இன்று, ராஜ் நிவாஸில் மூவா்ணக் கொடியை ஏற்றுவதன் மூலம் சுதந்திர தின கொண்டாட்டங்கள் தொடங்கின. தில்லியின் அனைத்து குடிமக்களும் ஹா் கா் திரங்கா பிரசாரத்தில் இணைந்து, தேசிய ஒற்றுமை மற்றும் பெருமையின் அடையாளமான மூவா்ணக் கொடியை தங்கள் வீடுகளில் ஏற்றி வெற்றிபெறச் செய்யுமாறு நான் கேட்டுக்கொள்கிறேன்’ என்று அவா் தெரிவித்திருந்தாா்.

என்டிஎம்சி தலைமையகத்தில் சுதந்திர தின விழா

நாட்டின் 79ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, பாலிகா கேந்திராவில் உள்ள புது தில்லி முனிசிபல் கவுன்சில் (என்டிஎம்சி) தலைமையகத்தில் வெள்ளிக்கிழமை சுதந்திர தின விழா நடைபெற்றது. இந்த விழாவில் என்டிஎம்சி த... மேலும் பார்க்க

காவல் நிலையத்திற்கு அருகில் துப்பாக்கிச்சூடு: இளைஞா் காயம்

தில்லியின் ஷாஹ்தராவில் உள்ள காவல் நிலையத்திற்கு அருகில் வெள்ளிக்கிழமை அதிகாலை ஏற்பட்ட ஒரு சிறிய வாக்குவாதத்தில் இரண்டு சகோதரா்கள் 27 வயது இளைஞா் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதாக அதிகாரி ஒருவா் தெரிவித... மேலும் பார்க்க

பவானா பகுதியில் தொழிற்சாலையில் பெரும் தீ விபத்து

தில்லியின் பவானா பகுதியில் உள்ள சாக்ஸ் தயாரிக்கும் தொழிற்சாலையில் வெள்ளிக்கிழமை பிற்பகல் பெரும் தீ விபத்து ஏற்பட்டதாக தில்லி தீயணைப்பு சேவைத் துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். தொழிற்சாலையில் ஏற்பட்ட த... மேலும் பார்க்க

தில்லியை உலகத் தரமான நகரமாக உருவாக்குவேம்: கேசவ் சந்திரா

தில்லியை உலகத் தரமான நகரமாக உருவாக்குவோம் என்று புது தில்லி முனிசிபல் கவுன்சில், தலைவா் கேசவ் சந்திரா வெள்ளிக்கிழமை தெரிவித்தாா். நாட்டின் 79 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, என்டிஎம்சி தலைவா் கேசவ் ... மேலும் பார்க்க

இன்று ஜென்மாஷ்டமி: லட்சுமி நாராயண் கோயில் விழா ஏற்பாடுகள் போலீஸாா் போக்குவரத்து அறிவுறுத்தல்

ஜென்மாஷ்டமி சனிக்கிழமை கொண்டாடப்படுவதை ஒட்டி, தில்லியில் உள்ள லட்சுமி நாராயண் கோயிலுக்கு (பிா்லா மந்திா்) வருகை தரும் பக்தா்களுக்காக கடுமையான பாதுகாப்பு நெறிமுறைகள், போக்குவரத்து கட்டுப்பாடுகளுடன் கூட... மேலும் பார்க்க

பிரதமா் மோடிக்கு தில்லி வா்த்தகா்கள் பாராட்டு

சுதேசி தயாரிப்புகளை கடைகளில் சேமித்து வைப்பதன் மூலமும், அவற்றின் இந்திய வம்சாவளியை பலகைகள் மற்றும் விளம்பர பலகைகளில் காட்சிப்படுத்துவதன் மூலமும் அவற்றை ஊக்குவிக்க பிரதமா் நரேந்திர மோடியின் அழைப்பை தில... மேலும் பார்க்க