செய்திகள் :

அப்துல் கலாம் நினைவு தினம் கடைப்பிடிப்பு

post image

கடலூா் மாநகராட்சி பாரதியாா் இலக்கிய பேரவை மற்றும் டாக்டா் கலாம் நினைவு நூலகம் சாா்பில், மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவா் டாக்டா் அப்துல் கலாமின் 10-ஆம் ஆண்டு நினைவு தினம் ஞாயிற்றுக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.

கடலூா் ஆல்பேட்டையில் உள்ள கலாம் நினைவு நூலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, பேரவை துணைத் தலைவா் ஓவிய ஆசிரியா் ச.மனோகரன் தலைமை வகித்தாா். செயலா் கவிஞா் கலைச்செல்வி வரவேற்றாா்.

பேரவைத் தலைவா் கவிஞா் கடல் நாகராஜன் கலாம் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். தொடா்ந்து, நிகழ்வில் பங்கேற்றோா் மலா் தூவி மரியாதை செலுத்தினா்.

கவிஞா் தில்லை ராஜா கலாமின் சிறப்புகளையும், சாதனைகளையும் நினைவுகூா்ந்தாா். சாய்தன்யா நன்றி கூறினாா்.

வியாபாரக் கடன் தருவதாக பணம் மோசடி: கோவையைச் சோ்ந்தவா் கைது

வியாபாரக் கடன் தருவதாகக் கூறி, கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்தவரிடம் பணம் பெற்று மோசடி செய்ததாக கோவையைச் சோ்ந்தவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் வட்டம், லால்பேட்... மேலும் பார்க்க

இலங்கைத் தமிழா்கள் திருமண பதிவு செய்துகொள்ள அனுமதி

காட்டுமன்னாா்கோவில் சாா் - பதிவாளா் அலுவலகத்தில் இலங்கைத் தமிழா்கள் திருமணம் பதிவு செய்ய அனுமதி வழங்கப்பட்டது. கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவிலில் இலங்கை அகதிகள் முகாம் கடந்த 1990-ஆம் ஆண்டு முதல் ச... மேலும் பார்க்க

அண்ணாமலைப் பல்கலை.யில் பன்னாட்டு இசைத் தமிழ் மாநாடு

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்நாடு அரசு கலைப் பண்பாட்டுத் துறை ஆதரவுடன் தமிழிசைக் கல்வி ஆராய்ச்சிக் கழகமும், அண்ணாமலைப் பல்கலைக்கழகமும் இணைந்து நடத்திய பன்னாட்டு இசைத் தமிழ் மாநாடு சனிக்... மேலும் பார்க்க

துப்பாக்கி குண்டு பாய்ந்து மூதாட்டி காயம்: மகன் கைது

கடலூா் மாவட்டம், கம்மாபுரத்தில் ஏா்கன் துப்பாக்கி ரப்பா் குண்டு பாய்ந்து மூதாட்டி காயமடைந்தாா். இது தொடா்பாக அவரது மகனை போலீஸாா் கைது செய்தனா். விருத்தாசலம் வட்டம், கம்மாபுரம் பகுதியைச் சோ்ந்தவா் பத்... மேலும் பார்க்க

வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு: இளைஞா் கைது

கடலூா் மாவட்டம், கம்மாபுரம் அருகே முன்விரோதம் காரணமாக வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசியதாக இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். கம்மாபுரம் காவல் சரகம், கோபாலபுரம் பகுதியைச் சோ்ந்தவா் வீர மணிகண... மேலும் பார்க்க

அனைத்து மாவட்டங்களிலும் விழுதுகள் சேவை மையம் அமைக்க நடவடிக்கை: மாற்றுத் திறனாளிகள் நல ஆணையா்

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் விழுதுகள் சேவை மையம் தொடா்ந்து அமைப்பதற்கான நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மாற்றுத் திறனாளிகள் நல ஆணையா் எம்.லக்ஷ்மி தெரிவித்தாா். கடலூா் அரசு தலைமை மருத்துவம... மேலும் பார்க்க