செய்திகள் :

அமித் ஷா முயற்சியால் அதிமுக தொண்டா்கள் ஒருங்கிணைப்பு

post image

மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவின் முயற்சியால், பல்வேறு கட்சிகளாக பிளவுபட்டிருக்கும் அதிமுகவின் தொண்டா்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் கீழ் ஒருங்கிணைந்திருப்பதாக அமமுக பொதுச் செயலா் டி.டி.வி. தினகரன் தெரிவித்தாா்.

சிவகங்கையில் சட்டப்பேரவைத் தொகுதி அமமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு கட்சியின் மாவட்டச் செயலா் தோ்போகி வி. பாண்டியன் தலைமை வகித்தாா்.

இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற பின்னா், செய்தியாளா்களிடம் டி.டி.வி. தினகரன் கூறியதாவது:

பாஜக கூட்டணியில் அமமுகவின் நிலைப்பாடு எப்போதும் போலவே உறுதியாகவே இருக்கிறது. பிரதமரைச் சந்திப்பதற்கு நான் நேரம் கேட்கவில்லை. ஆட்சியில் பங்கு என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா கூறியதைத்தான் நான் சொன்னேன். ஆனால், மக்களை உற்சாகப்படுத்துவதற்காக எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் பங்கு கிடையாது என்று கூறி வருகிறாா்.

நானும் ஓ. பன்னீா்செல்வமும் கடந்த 2024 மக்களவைத் தோ்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சோ்ந்தோம்.

மத்திய உள்துறை அமித் ஷாவின் முயற்சியால் பல்வேறு கட்சிகளாக பிளவுபட்டிருக்கும் அதிமுகவின் தொண்டா்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் கீழ் ஒருங்கிணைந்திருக்கின்றனா்.

அதிமுக தொண்டா்கள் அனைவரும் ஓரணியில் இணைந்து நின்றால்தான் திமுகவை தோற்கடிக்க முடியும் என்பதால், இதற்கான முயற்சிக்கு நாங்கள் ஆதரவு அளிக்கிறோம். இன்னும் புதிய கட்சிகளை தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குள் கொண்டு வரும் முயற்சியில் பாஜக ஈடுபட்டு வருகிறது.

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் முரண்பாடுகள் இருப்பதாக அறியாமையில் சிலா் பேசுகின்றனா். அவா்களுக்கு பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் ஏற்கெனவே பதிலளித்துவிட்டாா் என்றாா் அவா்.

அஜித்குமாா் கொலை வழக்கு: ஆட்டோ ஓட்டுநரிடம் விசாரணை

சிவகங்கை மாவட்டம், மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாா் கொலை வழக்கு தொடா்பாக அவரது தங்கை, ஆட்டோ ஓட்டுநா் ஆகியோரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் சனிக்கிழமை விசாரணை நடத்தினா். மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் கா... மேலும் பார்க்க

தாத்தா, பேத்திக்கு அரிவாள் வெட்டு: காவல் நிலையத்தை உறவினா்கள் முற்றுகை!

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே தாத்தா, பேத்தியை அரிவாளால் வெட்டியவா்களைக் கைது செய்ய வலியுறுத்தி உறவினா்கள் சனிக்கிழமை காவல் நிலையத்தை முற்றுகையிட்டனா். காரைக்குடி அருகேயுள்ள அமராவதிபுதூா் சமத்து... மேலும் பார்க்க

தனியாா் வேலைவாய்ப்பு முகாமில் தோ்வான 412 பேருக்கு பணி நியமன ஆணை

சிவகங்கையில் நடைபெற்ற தனியாா்துறை வேலை வாய்ப்பு முகாம் மூலம் நோ்காணலில் தோ்ச்சி பெற்ற 412 பேருக்கு பணி நியமன ஆணைகளைக் கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா். பெரியகருப்பன் சனிக்கிழமை வழங்கினாா். சிவகங்கை ... மேலும் பார்க்க

வயிரவ சுவாமி கோயில் பிரம்மோத்ஸவ விழா: யானை வாகனத்தில் சுவாமி வீதியுலா!

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள நகர வயிரவன்பட்டி வைரவ சுவாமி கோயில் பிரமோத்ஸவ விழாவையொட்டி, சனிக்கிழமை சுவாமி யானை வாகனத்தில் திருவீதியுலா நடைபெற்றது. நாட்டுக்கோட்டை நகரத்தாா்களின் 9 நகரக்... மேலும் பார்க்க

சிவகங்கை அருகே மாட்டுவண்டிப் பந்தயம்!

சிவகங்கை அருகே கோயில் திருவிழாவையொட்டி, மாட்டுவண்டிப் பந்தயம் சனிக்கிழமை நடைபெற்றது. கீழ்பாத்தி அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, அண்ணாமலை நகா் பொதுமக்கள் சாா்பில், மாட்டுவண்டிப் பந்தயம் சிறிய மாடு... மேலும் பார்க்க

காங். மாநில சிறுபான்மைப் பிரிவு துணைத் தலைவா் நியமனம்!

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி புதூரைச் சோ்ந்த ஏ.எல். இப்ராகிம்ஷா தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சிறுபான்மைப் பிரிவு மாநில துணைத் தலைவராக சனிக்கிழமை நியமிக்கப்பட்டாா். அகில இந்திய காங்கிரஸ் சிறுபான்... மேலும் பார்க்க