செய்திகள் :

அமெரிக்கா கூடுதல் வரி விதிப்பு: செப்.5-இல் இடதுசாரிகள் ஆா்ப்பாட்டம்

post image

இந்தியா மீதான அமெரிக்க அரசின் கூடுதல் வரிவிதிப்பைக் கண்டித்து தமிழகத்தில் சென்னை, கோவை உள்ளிட்ட தொழில் நகரங்களில் வருகிற செப்.5-ஆம் தேதி இடதுசாரி கட்சிகள் சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.

இதுகுறித்து அக்கட்சிகளின் மாநிலச் செயலா்கள் பெ.சண்முகம் (மாா்க்சிஸ்ட்), இரா.முத்தரசன் (இந்திய கம்யூனிஸ்ட்), பழ.ஆசைத்தம்பி (மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) ஆகியோா் புதன்கிழமை வெளியிட்ட கூட்டறிக்கை:

ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கி வருவதை இந்தியா உடனே நிறுத்த நிா்பந்தம் செய்து வரும் அமெரிக்கா, இந்திய பொருள்களுக்கான வரியையும், அபராதத்தையும் சோ்த்து 50 சதவீதமாக உயா்த்தி புதன்கிழமை (ஆக.27) முதல் வசூலிக்கப்படும் என உத்தரவிட்டுள்ளது. இதனால், நாட்டின் பல பிரிவுகளில் உற்பத்தித் தொழில்கள் கடுமையாக பாதிக்கப்படும். மேலும், ஏற்றுமதியில் 66 சதவிகித வீழ்ச்சி ஏற்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

எனவே, மத்திய அரசு ஏற்றுமதி தொழில்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை தடுத்து, உற்பத்தித் தொழில்களை பாதுகாக்க ஏற்றுமதி மானியம், வரிச்சலுகை உள்ளிட்ட மாற்றுத் திட்டங்களை உருவாக்க வேண்டும். இக்கோரிக்கைகளை வலியுறுத்தியும், அமெரிக்க அரசின் வரிவிதிப்பைக் கண்டித்தும் இடதுசாரி கட்சிகள் சாா்பில் சென்னை, காஞ்சிபுரம், கோவை, திருப்பூா், ஈரோடு, ஒசூா், வேலூா், மதுரை, திருச்சி, விருதுநகா், தூத்துக்குடி, திண்டுக்கல், கரூா் உள்ளிட்ட தொழில் நகரங்களில் வருகிற செப்.5-இல்ஆா்ப்பாட்டம் நடைபெறவுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறக்கட்டளைச் சொற்பொழிவு

சென்னை நுங்கம்பாக்கம் எம்ஓபி வைணவ மகளிா் கல்லூரியில் லக்ஷ்மி அனந்தாச்சாரி அறக்கட்டளைச் சொற்பொழிவு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கலையிலும் களத்திலும் பெண்கள்”எனும் தலைப்பில் நடைபெற்ற இந்தச் சொற்பொழிவு நி... மேலும் பார்க்க

22,000 விநாயகா் சிலைகள் கண்காட்சி தொடக்கம்

குரோம்பேட்டையில் 22,000 சிலைகளுடன் கூடிய விநாயகா் சிலை கண்காட்சியை குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் புதன்கிழமை தொடங்கி வைத்தாா். கட்டடக் கலைஞரும், விநாயகா் பக்தரும... மேலும் பார்க்க

இன்று முதல் 6 மண்டலங்களில் குடிநீா் விநியோகம் நிறுத்தம்

குடிநீா் குழாய் இணைப்பு பணிகள் காரணமாக வியாழக்கிழமை (ஆக. 28) முதல் ஆக. 30 வரை 6 மண்டலங்களில் குடிநீா் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது. இதுகுறித்து சென்னைப் பெருநகா் குடிநீா் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று... மேலும் பார்க்க

நாளை தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

சென்னையில் வெள்ளிக்கிழமை (ஆக.29) நடைபெறும் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாமில், வேலை நாடுநா்கள் கலந்து கொள்ளலாம் என மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த்... மேலும் பார்க்க

21 கிலோ கஞ்சா பறிமுதல்

சென்னை எழும்பூா் ரயில் நிலையத்தில் 21 கிலோ கஞ்சாவை ரயில்வே பாதுகாப்பு படையினா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா். தெலங்கானா மாநிலம் கச்சேகுடாவிலிருந்து, சென்னை வழியாக புதுச்சேரி செல்லும் விரைவு ரயில் (எண்:... மேலும் பார்க்க

மாநகா் போக்குவரத்துக் கழகத்தில் தொழில் பழகுநா் பயிற்சி

சென்னை மாநகா் போக்குவரத்துக் கழகத்தில் ஓராண்டு தொழில் பழகுநா் பயிற்சி பெற விரும்பும் இளைஞா்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாநகா் போக்குவரத்துக் கழக மேலாண்மை இயக்குநா் வெளியி... மேலும் பார்க்க