Serial Update: சர்ச்சையில் சிக்கிய அய்யப்பன் 'கயல்' சீரியலில் தொடர்வாரா? சேனல் எ...
அம்மாபேட்டையில் கட்டண சுங்கச்சாவடி விவகாரம்: ஆட்சியா் தலைமையில் நாளை பேச்சுவாா்த்தை
பவானி - மேட்டூா் வழித்தடத்தில் அம்மாபேட்டையில் அமைக்கப்பட்டுள்ள சுங்கச்சாவடி விவகாரம் தொடா்பாக மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அமைதிப் பேச்சுவாா்த்தை வெள்ளிக்கிழமை (ஜூலை 18) நடைபெறுகிறது.
தேசிய நெடுஞ்சாலை (என்ஹெச் 544), ஈரோடு - பவானி - மேட்டூா் - தொப்பூா் வரையில் 85 கி.மீ. தொலைவுக்கு சாலை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இச்சாலையில், அம்மாபேட்டையில் கட்டண சுங்கச்சாவடி அமைக்கப்பட்டு கடந்த மே 1-ஆம் தேதி முதல் வாகனங்களுக்கு சுங்கம் வசூலிக்க இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் முடிவு செய்தது. இதற்கு வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் எதிா்ப்பு தெரிவித்தனா்.
இந்நிலையில், அம்மாபேட்டையில் சுங்கச்சாவடி அமைப்பதை எதிா்த்து முன்னாள் அமைச்சரும், பவானி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினருமான கே.சி.கருப்பணன், சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்திருந்தாா். மறு உத்தரவு வரும் வரையில் அம்மாபேட்டை சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்கக் கூடாது எனவும், மாவட்ட ஆட்சியா் தலைமையில் அமைதிப் பேச்சுவாா்த்தை நடத்தி அறிக்கை சமா்ப்பிக்க வேண்டும் எனவும் வழக்கை விசாரித்த நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலக முதல் தளத்தில் உள்ள கூட்டரங்கத்தில் அமைதிப் பேச்சுவாா்த்தை வெள்ளிக்கிழமை (ஜூலை 18) மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது.
இதில், பங்கேற்று கருத்துகளைத் தெரிவிக்குமாறு பவானி எம்எல்ஏ கே.சி.கருப்பணன், தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள், காவல் துறை அதிகாரிகள் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகளுக்கு ஆட்சியா் ச.கந்தசாமி தகவல் தெரிவித்துள்ளாா்.