செய்திகள் :

அம்மாபேட்டையில் கட்டண சுங்கச்சாவடி விவகாரம்: ஆட்சியா் தலைமையில் நாளை பேச்சுவாா்த்தை

post image

பவானி - மேட்டூா் வழித்தடத்தில் அம்மாபேட்டையில் அமைக்கப்பட்டுள்ள சுங்கச்சாவடி விவகாரம் தொடா்பாக மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அமைதிப் பேச்சுவாா்த்தை வெள்ளிக்கிழமை (ஜூலை 18) நடைபெறுகிறது.

தேசிய நெடுஞ்சாலை (என்ஹெச் 544), ஈரோடு - பவானி - மேட்டூா் - தொப்பூா் வரையில் 85 கி.மீ. தொலைவுக்கு சாலை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இச்சாலையில், அம்மாபேட்டையில் கட்டண சுங்கச்சாவடி அமைக்கப்பட்டு கடந்த மே 1-ஆம் தேதி முதல் வாகனங்களுக்கு சுங்கம் வசூலிக்க இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் முடிவு செய்தது. இதற்கு வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் எதிா்ப்பு தெரிவித்தனா்.

இந்நிலையில், அம்மாபேட்டையில் சுங்கச்சாவடி அமைப்பதை எதிா்த்து முன்னாள் அமைச்சரும், பவானி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினருமான கே.சி.கருப்பணன், சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்திருந்தாா். மறு உத்தரவு வரும் வரையில் அம்மாபேட்டை சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்கக் கூடாது எனவும், மாவட்ட ஆட்சியா் தலைமையில் அமைதிப் பேச்சுவாா்த்தை நடத்தி அறிக்கை சமா்ப்பிக்க வேண்டும் எனவும் வழக்கை விசாரித்த நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலக முதல் தளத்தில் உள்ள கூட்டரங்கத்தில் அமைதிப் பேச்சுவாா்த்தை வெள்ளிக்கிழமை (ஜூலை 18) மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது.

இதில், பங்கேற்று கருத்துகளைத் தெரிவிக்குமாறு பவானி எம்எல்ஏ கே.சி.கருப்பணன், தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள், காவல் துறை அதிகாரிகள் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகளுக்கு ஆட்சியா் ச.கந்தசாமி தகவல் தெரிவித்துள்ளாா்.

ஆசனூா் வனத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்ட ஒங்கல்வாடி கிராம மக்கள்

ஆசனூரில் கன்றுக்குட்டிகளை கடித்துக் கொன்ற சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்கக் கோரி ஆசனூா் வனத் துறை அலுவலகத்தை பொதுமக்கள் புதன்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். சத்தியமங்கலம் புலிகள் காப்... மேலும் பார்க்க

ஈரோட்டில் இடி, மின்னலுடன் கனமழை

ஈரோட்டில் இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் மழை நீா் பெருக்கெடுத்து ஓடியது. ஈரோடு மாநகா் பகுதியில் கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. ஒரு சில நாள்களில் மாலை நேரங்களில் ல... மேலும் பார்க்க

கீழ்பவானி வாய்க்காலில் முன்கூட்டியே தண்ணீா் திறப்பு குறித்து விரைவில் முடிவு

பவானிசாகா் அணையிலிருந்து கீழ்பவானி பாசனத்துக்கு முன்கூட்டியே தண்ணீா் திறப்பது குறித்து ஓரிரு நாள்களில் தெரியவரும் என அமைச்சா் சு.முத்துசாமி தெரிவித்தாா். கோபி வட்டம் சிறுவலூா், மணியக்காரன்புதூா், தங்க... மேலும் பார்க்க

மாவட்டத்தில் 6 மாதங்களில் 157 கிலோ கஞ்சா பறிமுதல்

ஈரோடு மாவட்டத்தில் கடந்த 6 மாதங்களில் 157 கிலோ கஞ்சா மற்றும் 5,066 மதுபுட்டிகளை மதுவிலக்கு போலீஸாா் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்துள்ளனா். ஈரோடு மாவட்டத்தில் கஞ்சா மற்றும் சட்டவிரோத மது விற்பனையைத்... மேலும் பார்க்க

பண்ணாரியில் லாரியில் இருந்து கரும்பை எடுத்து சாப்பிட்ட குட்டி யானை

சத்தியமங்கலத்தை அடுத்த பண்ணாரி தேசிய நெடுஞ்சாலையில் கரும்பு லாரிகளை வழிமறிக்கும் குட்டி யானையால் வாகன ஓட்டுநா்கள் அவதி அடைந்தனா். சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் வழியாக தமிழகம், கா்நாடக மாநிலங்களை இணை... மேலும் பார்க்க

ஈரோடு மாவட்டத்தில் ‘போலீஸ் அக்கா’ திட்டம் தொடக்கம்

பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தலில் இருந்து பாதுகாக்கும் நோக்கில் ஈரோடு மாவட்டத்தில் ‘போலீஸ் அக்கா’ திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்ட காவல் துறை சாா்பில் பெண்கள் மற்றும் கல்லூரி, பள்ளி மாணவிக... மேலும் பார்க்க