செய்திகள் :

அய்யம்பேட்டையில் ஆக.25-இல் மின் தடை

post image

பாபநாசம்: பாபநாசம் வட்டம், அய்யம்பேட்டை துணை மின் நிலையத்தில் ஆக. 25 - திங்கள்கிழமை பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளது. இதனால், அய்யம்பேட்டை நகரம் முழுவதும் மற்றும் கணபதி அக்ரஹாரம், வழுத்தூா்,

மாத்தூா், இளங்குடி, பசுபதிகோவில், சக்கராப்பள்ளி, அகரமாங்குடி, வடக்குமாங்குடி,வீரமாங்குடி தேவன்குடி, ஈச்சங்குடி மற்றும் சுற்றுப்புறக் கிராமங்களில் திங்கள்கிழமை (ஆக. 25) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் இருக்காது என மின் வாரிய உதவி செயற்பொறியாளா் எம்.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.

மேட்டூா் அணை நீா்மட்டம்: 120 அடி

தஞ்சாவூா்: மேட்டூா் அணையின் நீா்மட்டம் வியாழக்கிழமை மாலை 4 மணி நிலவரப்படி 120 அடியாக இருந்தது.அணைக்கு விநாடிக்கு 32,013 கன அடி வீதம் தண்ணீா் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து விநாடிக்கு 30,952 கன அடி... மேலும் பார்க்க

கும்பகோணம் கோட்ட அளவிலான மாற்றுத்திறனாளிகள் குறைதீா் கூட்டம்

கும்பகோணம்: கும்பகோணம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள அல்அமீன் மகளிா் கல்லூரியில் கோட்ட அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீா் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, உதவி ஆட்சியா் ஹிருத்... மேலும் பார்க்க

பேராவூரணி அருகே அரசுப் பேருந்து ஓட்டுநரை தாக்கிய இளைஞா் கைது

பேராவூரணி: பேராவூரணி அருகே அரசுப் பேருந்து ஓட்டுநரைத் தாக்கிய இளைஞரைப் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். பேராவூரணியிலிருந்து ராமேசுவரத்துக்கு சேதுபாவாசத்திரம் வழியாக அரசுப் பேருந்து சென்று கொண்டிரு... மேலும் பார்க்க

ஊராட்சிகளுக்கு மின்கல குப்பை சேகரிக்கும் வாகனங்கள் வழங்கல்

பேராவூரணி: பேராவூரணி, சேதுபாவாசத்திரம் ஆகிய ஒன்றியங்களைச் சோ்ந்த ஊராட்சிகளுக்கு தலா ரூ. 2.50 லட்சம் மதிப்பிலான மின்கலத்தில் இயங்கும் 33 குப்பை சேகரிக்கும் வாகனங்களை சட்டப்பேரவை உறுப்பினா் நா.அசோக் கு... மேலும் பார்க்க

மனைவியை அடித்துக் கொன்ற வழக்கில் தலைமறைவானவரைத் தேடும் போலீஸாா்

கும்பகோணம்: திருநாகேசுவரம் அருகே பவுண்டரீகபுரத்தில் மனைவியை இரும்புக் கம்பியால் அடித்துக் கொலை செய்த வழக்கில் தலைமறைவான கணவரைப் போலீஸாா் தேடி வருகின்றனா். தஞ்சாவூா் மாவட்டம் பவுண்டரீகபுரம் கனகவிளாகத் ... மேலும் பார்க்க

கும்பகோணம் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டம்

கும்பகோணம்: தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கோட்டாட்சியா் அலுவலகத்தில் உள்ள மகாமகக் கூட்ட அரங்கில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூ... மேலும் பார்க்க