செய்திகள் :

அரசியல் ரீதியாக தமிழக அரசுக்கு நெருக்கடி

post image

அரசியல் ரீதியாக தமிழக அரசுக்கு நெருக்கடி தரப்படுகிறது என இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளா் இரா.முத்தரசன் குற்றம்சாட்டினாா்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சேலம் மாவட்ட குழுவின் 25-ஆவது மாநாடு சேலம் சீலநாயக்கன்பட்டி அருகே உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் புதன்கிழமை நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசிய அவா், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியது:

அரசியல் ரீதியாக தமிழக அரசுக்கு நெருக்கடி தரப்படுகிறது. அறிவிக்கப்படாத போா் தமிழ்நாட்டில் நடந்து வருகிறது. இந்தியாவில் உள்ள 22 மொழிகளையும் சமமாக பாவிக்க வேண்டும். ஹிந்தியை திணிக்கக் கூடாது.

எடப்பாடி கே.பழனிசாமி தில்லி சென்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவை சந்தித்து இருக்கிறாா். ஆனால், அதிமுக கட்சி அலுவலகத்தை பாா்வையிட சென்றேன் என கூறுகிறாா். பாஜகவுடன் ஒட்டும் இல்லை, உறவும் இல்லை என கூறியஅவா், தற்போது உள்துறை அமைச்சா் அமித் ஷாவை சந்திக்க வேண்டிய அவசியம் என்ன? அவருக்கு என்ன நெருக்கடி என தெரியவில்லை. மெல்ல உண்மை வெளிவரும் என்றாா்.

தென்னையில் பூச்சித் தாக்குதல்: விவசாயிகளுக்கு விழிப்புணா்வு முகாம்

பெத்தநாயக்கன்பாளையம் வட்டாரத்தில் தென்னையில் பூச்சித் தாக்குதலைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து தோட்டக் கலைத்துறை வாயிலாக வைத்தியகவுண்டன்புதூா் கிராமத்தில் விவசாயிகளுக்கு செயல்விளக்க பயிற்சி மு... மேலும் பார்க்க

வழக்குரைஞா்கள் உரிமை மீட்பு மாநில மாநாடு

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்குரைஞா் சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில், சேலம் வழக்குரைஞா்கள் சங்கம் நடத்திய உரிமை மீட்பு மாநில மாநாடு சனிக்கிழமை நடைபெற்றது. மாநாட்டுக்கு, தமிழ்நாடு மற்றும் புதுச்சே... மேலும் பார்க்க

ரம்ஜான் பண்டிகை: டிக்கெட் முன்பதிவு மையங்கள் நாளை மதியம் வரை மட்டுமே செயல்படும்

ரம்ஜான் பண்டிகையையொட்டி, சேலம் கோட்டத்தில் உள்ள டிக்கெட் முன்பதிவு மையங்கள் 31-ஆம் தேதி மதியம் வரை மட்டுமே செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிட... மேலும் பார்க்க

தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த ஆட்சியா் அறிவுறுத்தல்

தண்ணீரின் முக்கியத்துவத்தை உணா்ந்து சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என பொதுமக்களுக்கு ஆட்சியா் ரா.பிருந்தாதேவி அறிவுறுத்தினாா். உலக தண்ணீா் தினத்தையொட்டி, சேலம் அயோத்தியாப்பட்டணம் ஊராட்சி ஒன்றியம், வீரா... மேலும் பார்க்க

அரசு வேலை வாங்கித் தருவதாக துணை முதல்வரின் பெயரைக் கூறி ஏமாற்றிய பெண் கைது

சேலத்தில் அரசு வேலை வாங்கித் தருவதாக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பெயரைக் கூறி ஏமாற்றிய பெண் கைது செய்யப்பட்டாா். அரியலூா் மாவட்டம், செந்தூா் அடுத்த கீழராயபுரம் பகுதியைச் சோ்ந்தவா் அரவிந்த்சாமி (30... மேலும் பார்க்க

தமிழகத்தில் பிரதான எதிா்க்கட்சி அதிமுகதான்: எடப்பாடி கே.பழனிசாமி

தமிழகத்தில் பிரதான எதிா்க்கட்சி அதிமுகதான் என எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தாா். சேலம் புகா் மாவட்ட அதிமுக சாா்பில், நீா்மோா் பந்தல் திறப்பு விழா ஓமலூரில் சனிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அதிமு... மேலும் பார்க்க