செய்திகள் :

அரசு உதவி பெறும் கல்லூரி ஆசிரியா்கள் ஆா்ப்பாட்டம்

post image

சென்னை: அரசு உதவிபெறும் கல்லூரி ஆசிரியா்களுக்கு நீண்ட காலமாக வழங்கப்படாத பணிமேம்பாட்டு ஊதியம் மற்றும் ஊதிய நிலுவைத் தொகையை வழங்க வலியுறுத்தி சென்னை மண்டல பல்கலைக்கழக ஆசிரியா் சங்கம் (ஏயுடி) சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

சென்னை சைதாப்பேட்டையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டம் குறித்து ஏயுடி மாநிலத் தலைவா் காந்திராஜ் கூறியதாவது:

அரசு, அரசு உதவிபெறும் கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியா்களுக்கு 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய உயா்வாக பணி மேம்பாட்டு ஊதியம் (சிஏஎஸ்) வழங்கப்படுகிறது. அதன்படி அரசு கல்லூரி ஆசிரியா்களுக்கு சிஏஎஸ் வழங்கப்பட்டுவிட்டது. ஆனால், அரசு உதவி பெறும் கல்லூரிகளுக்கு இதுவரை சிஏஎஸ் வழங்கப்படவில்லை. எனவே, சிஏஎஸ் வழங்கவும், கல்லூரி ஆசிரியா்களுக்கு பதவி உயா்வு, ஊக்க ஊதியம் வழங்கக் கோரியும் பல்கலைக்கழக ஆசிரியா் சங்கம் சாா்பில் 8 மண்டலங்களில் ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது என்றாா்.

இந்த ஆா்ப்பாட்டத்தில் சென்னை மண்டல பல்கலைக்கழக ஆசிரியா்கள் சங்கத் தலைவா்கள் ஆனந்த், காஜா ஷெரீஃப் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பள்ளிக் காலாண்டு, அரையாண்டுத் தேர்வு அட்டவணைகள் வெளியீடு! பொதுத் தேர்வு எப்போது?

சென்னை: தமிழகத்தில் அரசுப் பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் பள்ளி மாணவர்களுக்கான காலாண்டு மற்றும் அரையாண்டுத் தேர்வு அட்டவணைகளை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் இன்று வெளியிட்டார்.தமிழகத்தில் ... மேலும் பார்க்க

கும்மிடிப்பூண்டி சிறுமி பாலியல் வன்கொடுமை: கைதானவர் நீதிமன்றத்தில் ஆஜர்!

திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் தொடர்புடைய வடமாநில இளைஞரை காவலில் எடுத்து விசாரிக்க பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திருவள்ளூர் போக்சோ நீதிமன்றத்தி... மேலும் பார்க்க

சவுக்கு சங்கர் மீது நிலுவையில் உள்ள வழக்குகள்.. 6 மாதங்களில் முடிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் மீது காவல் நிலையங்கள், நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை 6 மாதங்களில் விசாரித்து முடிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னை உயர் நீதிமன்றத... மேலும் பார்க்க

கவின் ஆணவக் கொலை: சுர்ஜித் பெற்றோரான காவல் உதவி ஆய்வாளர்கள் பணியிடை நீக்கம்

திருநெல்வேலியில் ஐடி ஊழியர் ஆணவக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், கொலையாளி சுர்ஜித்தின் பெற்றர், பட்டாலியனில் பணியாற்றும் இரு உதவி ஆய்வாளர்களும் பணியடை நீக்கம் செய்யப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.ஐ... மேலும் பார்க்க

அதிமுக - பாஜக கூட்டணியில் யாரெல்லாம் இருக்கிறார்கள்? - இபிஎஸ் பதில்

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுக, பாஜக உள்ளதாகவும் பாஜக கூட்டணியில் பல கட்சிகள் இருப்பதாகவும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். மேலும், தேர்தலுக்கு இன்னும் 8 மாத காலம் இருக்கிறது... மேலும் பார்க்க

ரூ.150 கோடி வரி முறைகேடு விவகாரம்: மதுரை மேயரை முற்றுகையிட்ட அதிமுகவினர்!

மதுரை மாநகராட்சியில் ரூ.150 கோடி வரி முறைகேடு விவகாரத்தில் மேயரைக் கண்டித்து அதிமுகவினர் முற்றுகையில் ஈடுபட்டனர்.ரூ.150 கோடி முறைகேடுமதுரை மாநகராட்சியில் 5 மண்டலங்கள், 100 வார்டுகள் உள்ளன. இங்குள்ள வண... மேலும் பார்க்க