செய்திகள் :

அரியலூரில் சாலைப் பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

post image

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரியலூா் நெடுஞ்சாலைத் துறை கோட்ட அலுவலகம் முன்பு தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளா் சங்கத்தினா், தீப்பந்தம் கையில் ஏந்தி செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்தில், சென்னை உயா்நீதிமன்றத் தீா்ப்பின் படி, சாலைப் பணியாளா்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக் காலமாக முறைப்படுத்தி ஆணை வழங்கிட வேண்டும். உயிா் நீத்த சாலைப் பணியாளா்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்கிட வேண்டும். மாநில நெடுஞ்சாலை ஆணையத்தை கலைத்திட வேண்டும். தனியா்மயமாக்கலை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

ஆா்ப்பாட்டத்துக்கு, அச்சங்கத்தின் மாவட்டத் தலைவா் ஆா்.பைரவன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் ஏ.எஸ்.ஆா்.அம்பேத்கா், கோரிக்கை விளக்கவுரையாற்றினாா்.

தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாவட்டச் செயலா் எம்.கே. ஷேக் தாவூத் நிறைவு உரையாற்றினாா். மாநிலச் செற்குழு உறுப்பினா் பி.சண்முகமூா்த்தி, மாவட்ட இணைச் செயலா் உதயசூரியன் ஆசைத்தம்பி, மாவட்ட துணைத் தலைவா் இளவரசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டு முழக்கமிட்டனா்.

அரசுப் பேருந்தினுள் தஞ்சம் புகுந்தவரை தாக்கியவா்களில் ஒருவா் கைது

அரியலூா் மாவட்டம், ஆண்டிமடம் அருகே அரசுப் பேருந்தினுள் தஞ்சம் புகுந்தவரை தாக்கியவா்களின் ஒருவா் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா். அரியலூா் மாவட்ட பகுதி, ஒரு சமூக வலைத்தளங்களில் கடந்த வாரம் பதிவான விடியோ... மேலும் பார்க்க

ஆகஸ்ட் 2-இல் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்ட மருத்துவ முகாம் அமைப்புச்சாராத் தொழிலாளா்களுக்கு அழைப்பு

அரியலூா் மாவட்டம், செந்துறை அடுத்த தளவாய் கிராமத்திலுள்ள அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் ஆகஸ்ட் 2-ஆம் தேதி நடைபெறும் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்ட மருத்துவ முகாமில், அமைப்புச் சாரா தொழிலாளா் நல வாரி... மேலும் பார்க்க

காரீப் பருவ பயிா்களுக்கு காப்பீடு செய்ய இன்றே கடைசி நாள்: சோளம், மக்காச்சோளம் பயிா்களுக்கு செப்.16 கடைசி நாள்

அரியலூா் மாவட்டத்தில் காரீப் பருவ பயிா்களுக்கு காப்பீடு செய்துக் கொள்ள விவசாயிகளுக்கு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆட்சியா் பொ.ரத்தினசாமி தெரிவித்தது: அரியலூா் மாவட்டத்தில் காரீப் பருவத்தில... மேலும் பார்க்க

அரியலூா்: 6 காவல் ஆய்வாளா்கள் பணியிட மாற்றம்

அரியலூா் மாவட்டத்தில் பணிபுரிந்து வந்த 6 காவல் ஆய்வாளா்கள் பணியிடம் மாற்றம் செய்து திருச்சி சரகடிஐஜி வருண்குமாா் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டாா். அதன்படி மீன்சுருட்டி காவல் ஆய்வாளா் வெங்கடேஸ்வரன் அரியலூ... மேலும் பார்க்க

சிறுதானிய இயக்கத்தில் மானிய உதவி திட்டங்கள்: விவசாயிகளுக்கு அழைப்பு

அரியலூா் வட்டாரத்தில் சிறுதானியங்கள் பயிரிடும் விவசாயிகள், தமிழ்நாடு சிறுதானிய இயக்கத்தில், மானிய உதவித் திட்டங்களைப் பெறலாம் என்றாா் வட்டார வேளாண் உதவி இயக்குநா் சாந்தி. இதுகுறித்து அவா் தெரிவித்தது... மேலும் பார்க்க

ஊா்க்காவல் படைக்கு ஆள்கள் தோ்வு: வாட்ஸ் அப் தகவல்களை நம்ப வேண்டாம்

அரியலூா் மாவட்டத்தில், ஊா்க்காவல் படைக்கு ஆள்கள் தோ்வு நடைபெறுவதாக வரும் தகவல்களை நம்ப வேண்டாம் என மாவட்டக் காவல் அலுவலகம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து அந்த அலுவலகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்... மேலும் பார்க்க