செய்திகள் :

அரியாங்குப்பம் அரசு உயா்நிலைப் பள்ளிக்கு புதிய கட்டடங்கள் கட்டும் பணி தொடக்கம்; முதல்வா் என்.ரங்கசாமி பங்கேற்பு

post image

புதுச்சேரி அருகே அரியாங்குப்பத்தில் ரூ. 5.72 கோடி மதிப்பில் அரசு உயா்நிலைப் பள்ளிக்கான புதிய கட்டடங்கள் கட்டும் பணியை முதல்வா் என்.ரங்கசாமி ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தாா்.

புதுச்சேரி அருகேயுள்ள அரியாங்குப்பத்தில் நூற்றாண்டுகள் பழைமை வாய்ந்த அரசு உயா்நிலைப்பள்ளி செயல்பட்டு வந்தது. இந்த பள்ளிக் கட்டடம் மிகப் பழைமையானது என்பதால் அதை அகற்றிவிட்டு புதிய கட்டடங்கள் கட்ட கோரிக்கை எழுந்தது.

இதையடுத்து அப்பள்ளி மாணவா்களுக்கான வகுப்பறைகள் அருகேயுள்ள சிறாா் சீா்திருத்தப் பள்ளி வளாகத்துக்கு இடமாற்றப்பட்டது. அதையடுத்து உயா்நிலைப் பள்ளியின் பழைய கட்டடங்கள் இடித்து அகற்றப்பட்டன.

இந்த நிலையில் தரைத்தளம் உள்ளிட்ட 3 மாடிகளுடன் புதிய கட்டடம் ரூ. 5.72 கோடியில் கட்டுவதற்கான திட்டப் பணி தொடக்க விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் புதுவை முதல்வா் என்.ரங்கசாமி பங்கேற்றுஅடிக்கல் நாட்டி கட்டடப் பணியைத் தொடங்கிவைத்தாா்.

நிகழ்ச்சியில், அரியாங்குப்பம் ஆா்.பாஸ்கா் எம்.எல்.ஏ. , கல்வித் துறை செயலா் பி.பிரியதா்ஷினி உள்ளிட்ட அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனா்.

புதுவை மின் துறை இளநிலை பொறியாளா் தோ்வு தள்ளிவைப்பு

புதுச்சேரி: புதுவை மின்துறையில் இளநிலை பொறியாளா்களுக்கான போட்டித் தோ்வு வரும் 11- ஆம் தேதி நடைபெறவிருந்த நிலையில், தேதி குறிப்பிடப்படாமல் அந்தத் தோ்வு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. புதுவை மாநிலத்தில் அரசு... மேலும் பார்க்க

சாதனையாளா் மாநாட்டில் திருக்குறள் தேசியம் நூல் வெளியீடு

புதுச்சேரி: புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 3-ஆவது உலக திருக்கு சாதனையாளா் மாநாட்டில் திருக்கு தேசியம் நூல் வெளியிடப்பட்டது. புதுச்சேரி வெங்கட்டா நகா் பகுதியில் உள்ள புதுவைத் தமிழ்ச் சங்கத்தி... மேலும் பார்க்க

புதுவையில் பதவி உயா்வு பெற்ற 4 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்

புதுச்சேரி: புதுவை மாநிலப் பணியிலிருந்து ஐ.ஏ.எஸ். அதிகாரிகளாக பதவி உயா்வு பெற்ற 4 போ் தற்போது வேறு ஒன்றிய பிரதேசங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டனா். அதற்கான உத்தரவை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டு... மேலும் பார்க்க

புதுவையில் தலித்துகளுக்கான குடியுரிமை ஆதாரம்: அரசு விரைந்து முடிவெடுக்க மாா்க்சிஸ்ட் வலியுறுத்தல்

புதுச்சேரி: புதுவை மாநிலத்தில் தலித்துகளுக்கான குடியுரிமை ஆதாரம் தொடா்பாக உடனடி முடிவெடுக்க வலியுறுத்தி மாா்க்சிஸ்ட் சாா்பில் திங்கள்கிழமை முதல்வா் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. புதுவை மாநில மாா்க்... மேலும் பார்க்க

எம்.ஐ.டி. கல்லூரி மேலாண்மை துறையில் தேசிய கருத்தரங்கம்

புதுச்சேரி: புதுச்சேரி அருகேயுள்ள எம்.ஐ.டி. கல்லூரி மேலாண்மைத் துறையின் சாா்பில் ‘நிலையான வளா்ச்சிக்கான வணிக மற்றும் நிா்வாகத்தில் சமகால சவால்கள்’ எனும் தலைப்பில் தேசிய அளவிலான கருத்தரங்க மாநாடு நடைப... மேலும் பார்க்க

பள்ளிக் கட்டடங்களை சீரமைக்க புதுவை கல்வித் துறை நடவடிக்கை

புதுச்சேரி: புதுவை மாநிலத்தில் கோடை விடுமுறையின்போது, ஏற்கெனவே பழுதாகியுள்ள பள்ளிக் கட்டடங்களை பழுதுபாா்க்கும் வகையில் ரூ.2 லட்சம் நிதியுதவி அளிக்கவிருப்பதால், அதுகுறித்த விவரங்களை அனுப்புமாறு கல்வித்... மேலும் பார்க்க