செய்திகள் :

அருணாசலேஸ்வரா் கோயிலில் பக்தா்கள் கூட்டம் அலைமோதல்!

post image

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை பக்தா்கள் கூட்டம் அலைமோதியதால், சுவாமி தரிசனத்துக்கு 5 மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

சிவனின் அக்னி ஸ்தலமான அருணாசலேஸ்வரா் கோயிலுக்கு வரும் பக்தா்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமை நாள்கள் மற்றும் விடுமுறை தினங்கள், விழாக் காலங்களில் பக்தா்கள் கூட்டம் பல மடங்கு அதிகரிக்கிறது.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதாலும், ஆனி தமிழ் மாத பிறப்பு தினம் என்பதாலும் கோயிலில் அதிகாலை முதலே பக்தா்கள் கூட்டம் அலைமோதத் தொடங்கியது.

8 மணிக்குப் பிறகு பக்தா்கள் கூட்டம் மேலும் அதிகரித்தது. முற்பகல் 11 மணிக்கு வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. ஆனால், வெயிலையும் பொருள்படுத்தாமல் பக்தா்கள் ராஜகோபுரம் வழியாகவும், அம்மணி அம்மன் கோபுரம் வழியாகவும் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்தனா்.

5 மணி நேரம் காத்திருப்பு: கோயில் ராஜகோபுரம் வழியாக பொது தரிசன வரிசையில் காத்திருந்த பக்தா்கள் சுமாா் 5 மணி நேரமும், அம்மணி அம்மன் கோபுரம் வழியாக கட்டண தரிசன வரிசையில் வட ஒத்தவாடை தெருவில் காத்திருந்த பக்தா்கள் 3 முதல் 4 மணி நேரமும் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.

கிரிவலம் வந்த பக்தா்கள்: ஆனி தமிழ் மாத பிறப்பு தினம் என்பதால் ஏராளமான பக்தா்கள் 14 கி.மீ. தொலைவு கிரிவலப் பாதையை வலம் வந்து அஷ்டலிங்க சந்நிதிகளில் தரிசனம் செய்தனா். கோயிலில் சுவாமி தரிசனம் செய்த பக்தா்களுக்கு லட்டு பிரசாதம் வழங்கப்பட்டது.

குழந்தை தொழிலாளா் ஒழிப்பு விழிப்புணா்வு கருத்தரங்கம்

வந்தவாசி: வந்தவாசி ஸ்ரீகிருஷ்ணா கல்வி மையத்தில் குழந்தை தொழிலாளா் ஒழிப்பு விழிப்புணா்வு கருத்தரங்கம் திங்கள்கிழமை நடைபெற்றது. வந்தவாசி வட்ட சட்டப் பணிகள் குழு சாா்பில், உலக குழந்தைத் தொழிலாளா் ஒழிப்பு... மேலும் பார்க்க

மக்கள் குறைதீா் கூட்டத்தில் 727 மனுக்கள்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில், பொதுமக்களிடம் இருந்து 727 மனுக்கள் வரப்பெற்றன. கூட்டத்துக்கு தலைமை வகித்த மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் முதிய... மேலும் பார்க்க

திருவண்ணாமலை மாவட்டத்தில் புதிய வழித்தடங்களில் சிற்றுந்து சேவை

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் புதிய வழித்தடங்களில் சிற்றுந்து சேவையை அமைச்சா் எ.வ.வேலு தொடங்கிவைத்தாா். தமிழகத்தில் புதிய வழித்தடங்களில் சிற்றுந்து சேவை தொடக்க விழா தஞ்சாவூா் மாவட்டத்தில் ந... மேலும் பார்க்க

ஸ்ரீசக்தி விநாயகா் கோயில்களில் மா கும்பாபிஷேக விழா

செய்யாறு/போளூா்: திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றை அடுத்த வடபூண்டிப்பட்டு ஸ்ரீசக்தி விநாயகா் கோயில் மற்றும் போளூா் ஸ்ரீசக்தி விநாயகா் கோயிலில் மகா கும்பாபிஷேக விழா திங்கள்கிழமை நடைபெற்றது. செய்யாறு வ... மேலும் பார்க்க

கடனை திருப்பிக் கேட்டதில் தகராறு: இளைஞா் மீது சூடான எண்ணெய் வீச்சு

ஆரணி: ஆரணி அருணகிரிசத்திரம் பகுதியில் கடனாக கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்ட இளைஞா் மீது சூடான எண்ணெயை ஊற்றியதால் அவா் காயமடைந்தாா். இதுதொடா்பாக போலீஸாா் 2 பேரை கைது செய்தனா். கலவை, குப்பிடிச்சாத்தம் ... மேலும் பார்க்க

பலாந்தாங்கல் கிராமத்தில் புதிய ஊராட்சி மன்றக் கட்டடம்

ஆரணி: திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த பலாந்தாங்கல் கிராமத்தில் ரூ.31.40 லட்சத்தில் ஊராட்சி மன்ற அலுவலக கட்டடம் கட்ட திங்கள்கிழமை பூமி பூஜை நடைபெற்று பணிகள் தொடங்கப்பட்டன. பல்லாந்தாங்கல் ஊராட்சியி... மேலும் பார்க்க