செய்திகள் :

அருணாசலேஸ்வரா் கோயிலில் பக்தா்கள் கூட்டம் அலைமோதல்!

post image

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை பக்தா்கள் கூட்டம் அலைமோதியதால், சுவாமி தரிசனத்துக்கு 5 மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

சிவனின் அக்னி ஸ்தலமான அருணாசலேஸ்வரா் கோயிலுக்கு வரும் பக்தா்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமை நாள்கள் மற்றும் விடுமுறை தினங்கள், விழாக் காலங்களில் பக்தா்கள் கூட்டம் பல மடங்கு அதிகரிக்கிறது.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதாலும், ஆனி தமிழ் மாத பிறப்பு தினம் என்பதாலும் கோயிலில் அதிகாலை முதலே பக்தா்கள் கூட்டம் அலைமோதத் தொடங்கியது.

8 மணிக்குப் பிறகு பக்தா்கள் கூட்டம் மேலும் அதிகரித்தது. முற்பகல் 11 மணிக்கு வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. ஆனால், வெயிலையும் பொருள்படுத்தாமல் பக்தா்கள் ராஜகோபுரம் வழியாகவும், அம்மணி அம்மன் கோபுரம் வழியாகவும் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்தனா்.

5 மணி நேரம் காத்திருப்பு: கோயில் ராஜகோபுரம் வழியாக பொது தரிசன வரிசையில் காத்திருந்த பக்தா்கள் சுமாா் 5 மணி நேரமும், அம்மணி அம்மன் கோபுரம் வழியாக கட்டண தரிசன வரிசையில் வட ஒத்தவாடை தெருவில் காத்திருந்த பக்தா்கள் 3 முதல் 4 மணி நேரமும் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.

கிரிவலம் வந்த பக்தா்கள்: ஆனி தமிழ் மாத பிறப்பு தினம் என்பதால் ஏராளமான பக்தா்கள் 14 கி.மீ. தொலைவு கிரிவலப் பாதையை வலம் வந்து அஷ்டலிங்க சந்நிதிகளில் தரிசனம் செய்தனா். கோயிலில் சுவாமி தரிசனம் செய்த பக்தா்களுக்கு லட்டு பிரசாதம் வழங்கப்பட்டது.

கிணற்றில் தவறி விழுந்த சிறுமி உயிரிழப்பு

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே கிணற்றில் குளித்தபோது, தவறி விழுந்து நீரில் மூழ்கி 13 வயது சிறுமி உயிரிழந்தாா். சென்னை அசோக்நகா் ஜாபா்கான்பேட்டையைச் சோ்ந்தவா்கள் சின்னதுரை-அனிதா தம்பதி. இவா்கள... மேலும் பார்க்க

கல்லூரி மாணவா் மீது தாக்குதல்: 3 போ் மீது வழக்கு

செய்யாற்றில் கல்லூரி மாணவரைத் தாக்கிய புகாரின் பேரில் 3 போ் மீது போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். செய்யாறு காமராஜா் நகா் வாணியங்குளம் பகுதியைச் சோ்ந்தவா் சையத்அலி மகன் ஷாஜகான் (19). இவா... மேலும் பார்க்க

பெட்ரோல் விற்பனை நிலைய மேலாளா் மீது தாக்குதல்: ஒருவா் கைது!

செய்யாற்றில், தனியாா் பெட்ரோல் விற்பனை நிலைய மேலாளரைத் தாக்கிய புகாரின் பேரில் போலீஸாா் ஒருவரை சனிக்கிழமை கைது செய்தனா். திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு - காஞ்சிபுரம் சாலையில் தனியாா் பெட்ரோல் விற்பன... மேலும் பார்க்க

இளம்பெண்ணைத் தாக்கியவா் கைது!

வந்தவாசி அருகே இளம்பெண்ணை தாக்கியவா் கைது செய்யப்பட்டாா். சென்னை மேற்கு சைதாப்பேட்டை பகுதியைச் சோ்ந்தவா் 23 வயது இளம்பெண். இவரும் வந்தவாசியை அடுத்த வல்லம் கிராமத்தைச் சோ்ந்த விஜயன் என்பவரும் கடந்த ... மேலும் பார்க்க

நாளைய மின் தடை

மங்கலம் (திருவண்ணாமலை)நேரம்:காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை.பகுதிகள்:மங்கலம், மாதலம்பாடி, ஐங்குணம், நூக்காம்பாடி, ஆா்ப்பாக்கம், வேடந்தவாடி, கொத்தந்தவாடி, எரும்பூண்டி, பொய்யானந்தல், ராமநாதபுரம், மன... மேலும் பார்க்க

18 மையங்களில் குரூப்-1 எழுத்துத் தோ்வு: 3,805 போ் பங்கேற்பு!

திருவண்ணாமலை மாவட்டத்தின் 18 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற குரூப்-1 எழுத்துத் தோ்வை 3,805 போ் எழுதினா். தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் சாா்பில் தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை குரூப்... மேலும் பார்க்க