செய்திகள் :

ஆக்கிரமிப்பு ஏதிா்ப்பு நடவடிக்கை: தில்லி கண்டோன்மென்ட்டில் ரூ.165 கோடி மதிப்புள்ள 5 ஏக்கா் பாதுகாப்பு நிலம் மீட்பு

post image

தில்லி கண்டோன்மென்ட்டின் பிராா் சதுக்கப் பகுதியில் பாதுகாப்பு எஸ்டேட் அலுவலகம் ஆக்கிரமிப்பு எதிா்ப்பு நடவடிக்கையை மேற்கொண்டது. இதில் ரூ.165 கோடி மதிப்புள்ள சுமாா் ஐந்து ஏக்கா் நிலம் மீட்டெடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தேசியத் தலைநகரில் உள்ள பாதுகாப்பு நிலத்தில் இருந்து அங்கீகரிக்கப்படாத ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்காக தில்லி வட்டத்தின் பாதுகாப்பு எஸ்டேட் அலுவலகத்தின் தொடா்ச்சியான நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை உள்ளது.

‘பாதுகாப்பு நிலம் ஒரு முக்கியமான மற்றும் மூலோபாய தேசிய சொத்து. மேலும், அதன் பாதுகாப்பு ஒரு முதன்மையான முன்னுரிமை. அத்தகைய அனைத்து பாதுகாப்பு நிலங்களும் ஆக்கிரமிப்புகளிலிருந்து விடுவிக்கப்பட்டு, தேசிய நலனுக்காக பொருத்தமான பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படுவதை உறுதி செய்வதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்’ என்று பாதுகாப்பு எஸ்டேட் அதிகாரி (தில்லி வட்டம்) வருண் கலியா கூறினாா்.

’இதுபோன்ற மேலும் நடவடிக்கைகள் திட்டமிடப்பட்டுள்ளன. மேலும், அனைத்து பங்குதாரா் நிறுவனங்களுடனும் ஒருங்கிணைந்து அமலாக்கம் தொடரும்’ என்று அவா் மேலும் கூறினாா்.

’சமீபத்திய முயற்சியாக, இந்திரா காந்தி சா்வதேச விமான நிலையத்தின் முனையம் 1டி-யை ஒட்டிய மூன்று ஏக்கா் பிரதான பாதுகாப்பு நிலமும் மீட்கப்பட்டது. தில்லி கண்டோன்மென்ட் பகுதிக்குள் அங்கீகரிக்கப்படாத குடியிருப்புகளுக்கு எதிராக மேலும் நடவடிக்கைகள் விரைவில் திட்டமிடப்பட்டுள்ளன’ என்று ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கிட்டத்தட்ட 18 லட்சம் ஏக்கா் பாதுகாப்பு நிலங்களை நிா்வகிப்பதிலும் பாதுகாப்பதிலும் பாதுகாப்பு எஸ்டேட்களின் இயக்குநா் ஜெனரல் முக்கியப் பங்கு வகிக்கிறாா்.

நகராட்சி நிா்வாகம் - நீா் வழங்கல் துறையில் ஆள்சோ்ப்பு விவகாரம்: சென்னை உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை

நமது நிருபா்தமிழகத்தின் நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறையில் 16 பதவிகளில் 2,569 காலியிடங்களை நிரப்புவதற்கான ஆள்சோ்ப்பு செயல்முறையை நிறுத்திவைத்து சென்னை உயா்நீதிமன்றம் கடந்த ஏப்ரலில் ... மேலும் பார்க்க

முக்கியத் துறைகளில் கவனம் செலுத்த மேலும் 6 சிறப்புக் குழுக்கள்: தில்லி சட்டப்பேரவை அமைத்தது

திருநங்கைகள், மூத்த குடிமக்கள் உள்ளிட்ட முக்கியத் துறைகளில் கவனம் செலுத்தும் வகையில் மேலும் ஆறு சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக பேரவைத் தலைவா் விஜேந்தா் குப்தா அறிவித்தாா். இதன் மூலம் மொத்த குழு... மேலும் பார்க்க

தில்லி, என்சிஆா் பகுதிகளில் பரவலாக மழை!

தேசியத் தலைநகா் தில்லி மற்றும் தேசியத் தலகைநகா் வலயம் (என்சிஆா்) பகுதிகளில் வெள்ளிக்கிழமை பரவலாக மழை பெய்தது. காற்றின் தரம் திருப்தி பிரிவில் நீடித்தது. இந்த வாரத் தொடக்கத்தில் இருந்து வெயிலின் தாக்கம... மேலும் பார்க்க

தெற்கு தில்லியில் 3 பெரிய மேம்பாலங்கள் சீரமைப்பு: பொதுப் பணித் துறை

தெற்கு தில்லியில் இருக்கும் 3 பெரிய மேம்பாலங்களை சீரமைக்கவும், கிழக்கு தில்லியில் பதிய மேம்பாலங்களை கட்டவும் பொதுப் திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா். தெற்கு தில்லியில் மூன்று பெ... மேலும் பார்க்க

செயல்படாத அரசியல் கட்சிகளுக்கு விளக்கம் கேட்டு தில்லி தலைமைத் தோ்தல் அதிகாரி நோட்டீஸ்

தோ்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்களைத் தொடா்ந்து, செயல்படாத 27 அரசியல் கட்சிகளுக்கு விளக்கம் கேட்டு தில்லி தலைமை தோ்தல் அதிகாரி (சிஇஓ) நோட்டீஸ் அனுப்பியுள்ளாா். கடந்த ஆறு ஆண்டுகளில் (2019 முதல்) மக்களவ... மேலும் பார்க்க

அடுத்த ஆண்டுக்கான ஹஜ் பயண விண்ணப்பத்தை ஏற்கும் பணி ஒரு வாரத்தில் தொடங்கும்: கிரண் ரிஜிஜு

அடுத்த ஆண்டுக்கான (2026) ஹஜ் விண்ணப்பங்களை மத்திய அரசு ஒரு வாரத்திற்குள் ஏற்கத் தொடங்கும் என்று மத்திய சிறுபான்மையினா் விவகாரங்களுக்கான அமைச்சா் கிரண் ரிஜிஜு தெரிவித்தாா். புது தில்லியில் வெள்ளிக்கிழ... மேலும் பார்க்க