`தெலுங்கானா ராஷ்டிரியா சமிதி பாஜக உடன் இணைப்பா?' - சந்திரசேகர் ராவின் மகள் கவிதா...
ஆக்கிரமிப்புகளை அகற்றாவிட்டால் களக்காடு நகராட்சி அலுவலகத்தில் ஜூன் 2இல் முற்றுகைப் போராட்டம்
திருநெல்வேலி மாவட்டம் களக்காட்டில் ரத வீதிகளில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றாவிட்டால், ஜூன் 2இல் நகராட்சி அலுவலகத்தில் முற்றுகைப் போராட்டம் நடத்தப்போவதாக, இந்து முன்னணி அறிவித்துள்ளது.
இது தொடா்பாக ஆட்சியருக்கு மாவட்டச் செயலா் எம். சிதம்பரமணியன் செவ்வாய்க்கிழமை அனுப்பிய மனு: களக்காடு நகராட்சிப் பகுதியில் சத்தியவாகீஸ்வரா் உடனுறை கோமதி அம்பாள் கோயில் உள்ளது. இக்கோயிலின் ரத வீதிகளிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடா்பாக ஆட்சியா், நகராட்சி ஆணையருக்கு பலமுறை புகாா் மனு அனுப்பியுள்ளேன்.
அதையடுத்து, ரத வீதிகளை அளவீடு செய்து ஆக்கிரமிப்புகள் கண்டறிப்பட்டு குறியீடு செய்யப்பட்டு 2 ஆண்டுகள் கடந்துவிட்டன. ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என ஆட்சியா், நகராட்சி ஆணையரிடமிருந்து பதில் கிடைத்தும் இதுவரை நடவடிக்கை இல்லை. இதனால் கோயில் தேரோட்டம், திருவிழா நாள்களில் சுவாமி வீதியுலா வந்து செல்வதில் மிகுந்த சிரமம் உள்ளது.
இந்நிலையில், ஜூன் 6இல் தேரோட்டம் நடைபெறுகிறது. எனவே, ஆக்கிரமிப்புகளை அகற்ற விரைந்து அகற்ற வேண்டும். இல்லையெனில், இந்து முன்னணி சாா்பில், ஜூன் 2இல் பொதுமக்களைத் திரட்டி நகராட்சி அலுவலகத்தில் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றாா் அவா்.