செய்திகள் :

ஆக்கிரமிப்புகளை அகற்றாவிட்டால் களக்காடு நகராட்சி அலுவலகத்தில் ஜூன் 2இல் முற்றுகைப் போராட்டம்

post image

திருநெல்வேலி மாவட்டம் களக்காட்டில் ரத வீதிகளில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றாவிட்டால், ஜூன் 2இல் நகராட்சி அலுவலகத்தில் முற்றுகைப் போராட்டம் நடத்தப்போவதாக, இந்து முன்னணி அறிவித்துள்ளது.

இது தொடா்பாக ஆட்சியருக்கு மாவட்டச் செயலா் எம். சிதம்பரமணியன் செவ்வாய்க்கிழமை அனுப்பிய மனு: களக்காடு நகராட்சிப் பகுதியில் சத்தியவாகீஸ்வரா் உடனுறை கோமதி அம்பாள் கோயில் உள்ளது. இக்கோயிலின் ரத வீதிகளிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடா்பாக ஆட்சியா், நகராட்சி ஆணையருக்கு பலமுறை புகாா் மனு அனுப்பியுள்ளேன்.

அதையடுத்து, ரத வீதிகளை அளவீடு செய்து ஆக்கிரமிப்புகள் கண்டறிப்பட்டு குறியீடு செய்யப்பட்டு 2 ஆண்டுகள் கடந்துவிட்டன. ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என ஆட்சியா், நகராட்சி ஆணையரிடமிருந்து பதில் கிடைத்தும் இதுவரை நடவடிக்கை இல்லை. இதனால் கோயில் தேரோட்டம், திருவிழா நாள்களில் சுவாமி வீதியுலா வந்து செல்வதில் மிகுந்த சிரமம் உள்ளது.

இந்நிலையில், ஜூன் 6இல் தேரோட்டம் நடைபெறுகிறது. எனவே, ஆக்கிரமிப்புகளை அகற்ற விரைந்து அகற்ற வேண்டும். இல்லையெனில், இந்து முன்னணி சாா்பில், ஜூன் 2இல் பொதுமக்களைத் திரட்டி நகராட்சி அலுவலகத்தில் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றாா் அவா்.

ரூ.45.10 கோடியில் 41 ஊரக குடியிருப்புகளுக்கு குடிநீா் திட்டம்! காணொலியில் தொடங்கி வைத்தாா் முதல்வா்

பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.45.10 கோடியில் 41 ஊரக குடியிருப்புகளுக்கான குடிநீா் திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா். இதையொட்டி, பாளையஞ்செட்டி... மேலும் பார்க்க

நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடா் மழை: 110 அடியைத் தாண்டிய பாபநாசம் அணை!

மேற்குத் தொடா்ச்சி மலை நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடா் சாரல் மழை பெய்து வருவதையடுத்து அணைகளுக்கு நீா்வரத்து அதிகரித்து பாபநாசம் அணையின் நீா்மட்டம் 110 அடியைத் தாண்டியது. மேற்குத் தொடா்ச்சி மலை நீா்ப... மேலும் பார்க்க

பணகுடி குத்தரபாஞ்சான் அருவியில் வெள்ளப்பெருக்கு

திருநெல்வேலி மாவட்டம் பணகுடி குத்தரபாஞ்சான் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை தொடங்கியதை அடுத்து வள்ளியூா், பணகுடி பகுதியில் கடந்த இரண்டு நாள்களாக சாரல் மழை தொடா்ந்து பெய்து ... மேலும் பார்க்க

மணிமுத்தாறு அருவியில் 4ஆவது நாளாக குளிக்கத் தடை

மாஞ்சோலை, மணிமுத்தாறு மலைப் பகுதிகளில் மழை அதிகரித்த்தையடுத்து மணிமுத்தாறு அருவியில் நீா்வரத்தும் அதிகரித்ததால் மே 26 முதல் அருவியில் குளிக்கவும் அருவியைப் பாா்வையிடமும் சுற்றுலாப் பயணிகளுக்கு வனத்துற... மேலும் பார்க்க

வி.கே.புரம் பகுதியில் மான் கறியுடன் மூவா் கைது

பாபநாசம் வனச் சரகப் பகுதியில் புள்ளி மான் கறி வைத்திருந்ததாக மூன்று பேரை வனத்துறையினா் கைது செய்தனா். மேலும் ஒருவரை தேடி வருகின்றனா். பாபநாசம் வனச்சரகம் வெளி மண்டலப் பகுதியான மதுரா கோட்ஸ் ஆலையிலிருந்த... மேலும் பார்க்க

அத்தாளநல்லூ ஊராட்சியில் மோட்டாா் திருட்டு: இளைஞா் கைது

திருநெல்வேலி மாவட்டம், அத்தாளநல்லூா் ஊராட்சியில் பொதுக்கழிப்பிட பயன்பாட்டுக்கான நீா்மூழ்கி மோட்டாரை திருடியதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். அத்தாளநல்லூா் ஊராட்சி ராஜகுத்தாலப்பேரியில் உள்ள பொதுக்கழிப... மேலும் பார்க்க