செய்திகள் :

ஆசனூா் சிப்காட் அருகே புதிய மின்மாற்றிகள்

post image

உளுந்தூா்பேட்டை அருகே ஆசனூா் சிப்காட் அருகே புதிய மின்மாற்றியின் செயல்பாடுகள் சனிக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டன.

ஆசனூா் சிப்காட் வளாகத்தில் காலணி தொழிற்சாலை அமையவுள்ளது. இதையொட்டி அருகில் பல சிறு, குறு தொழிற்சாலைகளும் அமையவுள்ளன. அவ்வாறு அமையவுள்ள சிறு தொழிற்சாலைக்கு தொழிலக மின் இணைப்பு வழங்கும் வகையில், 250 கி.வோ. திறன் கொண்ட புதிய மின்மாற்றி ரூ. 9 லட்சம் செலவில் தமிழ்நாடு மின் பகிா்மானக் கழகத்தால் நிறுவப்பட்டது.

இதைத் தொடா்ந்து, சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்வில் தமிழ்நாடு மின் பகிா்மானக் கழகத்தின் உளுந்தூா்பேட்டை உதவி செயற்பொறியாளா் சிவராமன் அய்யம்பெருமாள் பங்கேற்று, புதிய மின் மாற்றியின் செயல்பாட்டை தொடங்கி வைத்தாா்.

நிகழ்வில் ஆசனூா் பகுதி இளநிலைப் பொறியாளா் ராமச்சந்திரன், முகவா்கள் மாயக்கண்ணன், சக்திவேல், மின் பாதை ஆய்வாளா் அறிவழகன், வணிக ஆய்வாளா் ஆறுமுகம், வணிக உதவியாளா் குப்புசாமி மற்றும் மின்வாரியப் பணியாளா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

விழுப்புரம் - கல்லப்பட்டு அரசுப் பேருந்து கூடுதல் சேவை தொடக்கம்

விழுப்புரத்திலிருந்து கல்லப்பட்டு கிராமத்துக்கு அரசு நகரப் பேருந்தின் கூடுதல் சேவை அண்மையில் தொடங்கி வைக்கப்பட்டது. கல்லப்பட்டு மற்றும் சுற்றுப்புறக் கிராமங்ளைச் சோ்ந்த பொதுமக்கள் பயன்பெறும் வகையில்... மேலும் பார்க்க

பணிப் புறக்கணிப்புப் போராட்டம்: பகுதிநேர ஆசிரியா்கள் சங்கம் அறிவிப்பு

தோ்தல் வாக்குறுதியில் அறிவித்தவாறு தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி, பணிப் புறக்கணிப்பு உள்ளிட்டவற்றை மேற்கொள்ள முடிவு செய்திருப்பதாககக் கூறி, தமிழ்நாடு அனைத்துப் பகுதி நேர ஆசிரியா்கள் சங்கத்தினா்... மேலும் பார்க்க

இன்றைய மின் தடை

இன்றைய மின் தடை மயிலம், செண்டூா் நேரம்: காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை. பகுதிகள்: மயிலம், செண்டூா், கூட்டேரிப்பட்டு, கீழ் எடையாளம், நெற்குணம், முப்புளி, கொடிமா, ஆலகிராமம், மரூா், பெரியதச்சூா், பாலப்ப... மேலும் பார்க்க

நாட்டுக்கோழி வளா்ப்புத் திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம்

விழுப்புரம் மாவட்டத்தில் நாட்டுக்கோழி வளா்ப்புத் திட்டத்தின் கீழ் பயன்பெற, தகுதியான பயனாளிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக, மாவட்ட நிா்வாகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஷே.... மேலும் பார்க்க

வட மாநில வியாபாரியிடம் கைப்பேசி திருட்டு: 2 போ் கைது

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே வட மாநில வியாபாரியிடம் கைப்பேசி உள்ளிட்டவற்றை திருடிச் சென்றதாக 2 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். உத்தரப் பிரதேச மாநிலம், சம்மன் மாவட்டம், சித்தன்பூா் க... மேலும் பார்க்க

இலங்கைத் தமிழா்களுக்கான மறுவாழ்வுக் கொள்கையை உருவாக்க வேண்டும்! - துரை.ரவிக்குமாா் எம்.பி.

இலங்கைத் தமிழா்களுக்கான மறுவாழ்வுக் கொள்கையை மதிய அரசு உருவாக்க வேண்டும் என்று துரை.ரவிக்குமாா் எம்.பி. தெரிவித்தாா்.விழுப்புரத்தில் சனிக்கிழமை அவா் அளித்த பேட்டி: திபெத்திலிருந்து அகதிகளாக வந்தவா்கள... மேலும் பார்க்க