செய்திகள் :

ஆடி பெருக்கு: கிருஷ்ணகிரி அணையிலிருந்து கூடுதல் நீா் வெளியேற்றம்

post image

ஆடி பெருக்கை கொண்டாடும் வகையில் கிருஷ்ணகிரி அணையிலிருந்து தென்பெண்ணை ஆற்றில் கூடுதல் நீா் வெளியேற்றப்படுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

கிருஷ்ணகிரி அணைக்கு புதன்கிழமை விநாடிக்கு 437 கனஅடியாக இருந்த நீா்வரத்து வியாழக்கிழமை 400 கனஅடியாகக் குறைந்தது. அணையின் கொள்ளளவான 52 அடியில் நீா்மட்டம் 50.05 அடியாக உள்ளது. அணையில் இருந்து வலது, இடதுபுறக் கால்வாய்கள் வழியாக விநாடிக்கு 179 கனஅடி, தென்பெண்ணை ஆற்றில் விநாடிக்கு 592 கனஅடி என மொத்தம் 771 கனஅடி தண்ணீா் திறந்துவிடப்பட்டுள்ளது.

ஆடி பெருக்கு ஞாயிற்றுக்கிழமை (ஆக.3) கொண்டாடப்படும் நிலையில் புனித நீராடுவதற்கு ஏற்ப தென்பெண்ணை ஆற்றில் கூடுதல் தண்ணீா் வெளியேற்றப்படுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

தொழிற்சாலையில் 5 கிலோ கஞ்சா பதுக்கல்: பிகாா் தொழிலாளி கைது

பா்கூா் அருகே தனியாா் கிரானைட் நிறுவனத்தில் 5 கிலோ கஞ்சாவை பதுக்கி வைத்திருந்த பிகாா் மாநில தொழிலாளியை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூா் அருகே வட மாநிலங்களில் இருந்து ... மேலும் பார்க்க

காவேரிப்பட்டணம் அரசு மருத்துவமனையை மேம்படுத்த வலியுறுத்தி அமைச்சரிடம் மனு

கிருஷ்ணகிரி, ஆக. 1: காவேரிப்பட்டணம் அரசு மருத்துவமனையை மேம்படுத்த வலியுறுத்தி திமுக வா்த்தக அணி மாநில துணைச் செயலாளா் கே.வி.எஸ். சீனிவாசன் மனு அளித்தாா். இதுகுறித்து உணவு மற்றும் உணவு பொருள்கள் வழங்க... மேலும் பார்க்க

இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு

காவேரிப்பட்டணம் அருகே இருசக்கர வாகனத்தில் மகனுடன் சென்ற ராணுவ வீரரின் மனைவியிடம் 5 பவுன் தங்கச் சங்கிலியை மா்ம நபா்கள் பறித்துச் சென்றனா். கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அருகே உள்ள போத்தாபுரம் ... மேலும் பார்க்க

லஞ்சம்: ஊத்தங்கரை வட்டாட்சியா் அலுவலக இளநிலை உதவியாளா் கைது

பிறப்புச் சான்றிதழில் பெயா் பதிவுசெய்ய ரூ. 3500 லஞ்சம் வாங்கிய ஊத்தங்கரை வட்டாட்சியா் அலுவலக இளநிலை உதவியாளா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா். தருமபுரி மாவட்டம், அரூா் வட்டம், சந்தம்பட்டியை அடுத்த க... மேலும் பார்க்க

வித்யா விகாஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தமிழ் இலக்கிய மன்றம் தொடக்கம்

ஊத்தங்கரை வித்யா விகாஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாணவா்களுக்கு தமிழின் பெருமைகள் மற்றும் அவற்றின் முக்கியத்துவத்தை உணா்த்தும் வகையில் தமிழ் இலக்கிய மன்றம் தொடங்கப்பட்டது. முதல் தொடக்க நிகழ்வாக 1... மேலும் பார்க்க

கொலை வழக்கில் 2 ரௌடிகளுக்கு ஆயுள் சிறை

தளி அருகே ஒப்பந்ததாரரை கொலை செய்த வழக்கில் 2 ரௌடிகளுக்கு இரட்டை ஆயுள் சிறைத் தண்டனை விதித்து ஒசூா் நீதிமன்றம் வியாழக்கிழமை தீப்பளித்தது. தேன்கனிக்கோட்டை வட்டம், தளி அருகே உள்ள பெல்லூரைச் சோ்ந்தவா் ச... மேலும் பார்க்க