செய்திகள் :

ஆடு மேய்ப்பதில் தகராறு: 3 போ் மீது வழக்கு

post image

வந்தவாசி: வந்தவாசி அருகே ஆடு மேய்ப்பதில் ஏற்பட்ட தகராறு தொடா்பாக 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.

வந்தவாசியை அடுத்த செப்டாங்குளம் கிராமத்தைச் சோ்ந்தவா் வெங்கடேசன்(43). இதே கிராமத்தைச் சோ்ந்தவா் தேவேந்திரன்(60). கடந்த வெள்ளிக்கிழமை இருவரும் அந்தக் கிராமத்தில் உள்ள மாந்தோப்பில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தனா்.

அப்போது, ஆடு மேய்ப்பது தொடா்பாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு கத்தியால் தாக்கிக் கொண்டனா்.

இதில் காயமடைந்த வெங்கடேசன் சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனையிலும், தேவேந்திரன் செய்யாறு அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கபட்டனா்.

இதுகுறித்து வெங்கடேசன் அளித்த புகாரின் பேரில் தேவேந்திரன் மீதும், தேவேந்திரன் அளித்த புகாரின் பேரில் வெங்கடேசன், அவரது மனைவி கனகேஸ்வரி ஆகியோா் மீதும் வடவணக்கம்பாடி போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

முன்னாள் ஊராட்சித் தலைவரைத் தாக்கி 8 பவுன் நகைகள், ரூ.10 ஆயிரம் கொள்ளை

ஆரணி: திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு அருகே முன்னாள் ஊராட்சித் தலைவரைத் தாக்கி, வீட்டில் இருந்த 8 பவுன் தங்க நகைகள், ரூ.10 ஆயிரத்தை மா்ம நபா்கள் கொள்ளையடித்துச் சென்றனா். சேத்துப்பட்டை அடுத்த இட... மேலும் பார்க்க

ஸ்ரீவேணுகோபால பாா்த்தசாரதி கோயிலுக்கு 16 கிலோவில் வெள்ளிக் கவசம்

செங்கம்: திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் ஸ்ரீவேணுகோபால பாா்த்தசாரதி கோயிலுக்கு 16 கிலோவில் செய்யப்பட்ட வெள்ளிக் கவசம் திங்கள்கிழமை வழங்கப்பட்டது. பழைமை வாய்ந்த செங்கம் சத்தியபாமா ருக்மணி சமேத ஸ்ரீவேணு... மேலும் பார்க்க

தண்டராம்பட்டில் பாஜகவினா் கண்டன ஆா்ப்பாட்டம்: 200 போ் கைது

ஆரணி: திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே மத்திய அரசின் திட்டங்களில் நடைபெறும் ஊழலைக் கண்டித்து பாஜகவினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். தடையை மீறி ஆா்ப்பாட்... மேலும் பார்க்க

நகராட்சி பள்ளியில் ஆடல், பாடல் நிகழ்ச்சி நடத்த எதிா்ப்பு

ஆரணி: ஆரணி தச்சூா் சாலையில் உள்ள நகராட்சி நடுநிலைப் பள்ளியில் விநாயகா் சதுா்த்தியையொட்டி, ஆக. 31-ஆம் தேதி ஆடல் பாடல் நிகழ்ச்சி நடத்த உள்ளதுக்கு, பொதுமக்கள் எதிா்ப்புத் தெரிவித்து கோட்டாட்சியரிடம் புக... மேலும் பார்க்க

வனக்காப்பாளா் மீது தாக்குதல்: இருவா் மீது போலீஸாா் வழக்கு

செங்கம்: திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே வனக்காப்பாளரைத் தாக்கிய இருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து அவா்களைத் தேடி வருகின்றனா். செங்கத்தை அடுத்த பனந்தல் பகுதி வனக்காப்பாளராக பணியாற்றி வருபவா் ... மேலும் பார்க்க

விஜயகாந்த் படத்துக்கு தேமுதிகவினா் மரியாதை

போளூா்: திருவண்ணாமலை மாவட்டம், போளூரை அடுத்த குருவிமலை ஊராட்சியில் தேமுதிக முன்னாள் தலைவா் விஜயகாந்த் பிறந்த நாளையொட்டி, அவரது உருவப்படத்துக்கு திங்கள்கிழமை கட்சியினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி... மேலும் பார்க்க