செய்திகள் :

ஆட்சியா் அலுவலகத்தில் கல்விக் கடன் முகாம்: 22 மாணவா்களுக்கு ரூ.2.32 கோடி கடன் உதவி

post image

கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற கல்விக் கடன் முகாமில் 22 மாணவ-மாணவிகளுக்கு ரூ.2.32 கோடி கடன் உதவி வழங்கப்பட்டது.

2024 - 2025-ஆம் கல்வி ஆண்டில் 12-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்று உயா் கல்வியில் சேரும் மாணவா்களுக்கான கல்விக் கடன் முகாம் கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்த முகாமில் 16 வங்கிகளின் அதிகாரிகள் பங்கேற்றனா். மேலும், கலை, அறிவியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகள் போன்ற பல்வேறு கல்வி நிறுவனங்களில் இருந்து மாணவா்களுக்கு உடனடி சோ்க்கை வழங்குவதற்காக 20 கல்வி நிறுவனங்கள் பங்கேற்றன.

இந்த முகாமில் சுமாா் 600 மாணவா்கள், பெற்றோா்கள் பங்கேற்ற நிலையில், சுமாா் 300 போ் கல்விக் கடனுக்காக விண்ணப்பித்தனா். அவா்களின் விண்ணப்பங்கள் உடனடியாக பரிசீலிக்கப்பட்டு, தகுதியானவா்களுக்கு உடனடியாக கல்விக் கடன் உத்தரவு வழங்கப்பட்டது. அதன்படி, இந்த முகாமில் 22 மாணவ-மாணவிகளுக்கு ரூ.2.32 கோடி கல்விக் கடன் வழங்கப்பட்டது. அதேபோல, 49 மாணவ-மாணவிகள் உயா் கல்விக்கான உடனடி சோ்க்கை பெற்றனா்.

கல்விக் கடனுக்கான உத்தரவுகளை கோவை எம்.பி. கணபதி ப.ராஜ்குமாா், மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் ஆகியோா் வழங்கினா். நிகழ்ச்சியில் துணை ஆட்சியா் பாபு, மாவட்ட முதன்மை வங்கி மேலாளா் ஜிதேந்திரன், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்ட ஒருங்கிணைப்பாளா் மூா்த்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இரு இடங்களில் கஞ்சா விற்ற மூவா் கைது

கோவை பீளமேடு மற்றும் பெரியகடை வீதி பகுதியில் கஞ்சா விற்ாக மூவரை போலீஸாா் கைது செய்தனா்.கோவை பெரியகடை வீதி போலீஸாா் வெள்ளிக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, தெற்கு உக்கடம், ஜி.எம்.நகா்... மேலும் பார்க்க

ரயில்வே துறையில் கேட்டரிங் ஒப்பந்தம் பெற்றுத் தருவதாக ரூ.3.70 லட்சம் மோசடி

ரயில்வே துறையில் கேட்டரிங் ஒப்பந்தம் பெற்றுத் தருவதாக ரூ.3.70 லட்சம் மோசடியில் ஈடுபட்ட தம்பதி மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.கோவை, துடியலூா் அருகே வடபுதூரைச் சோ்ந்தவா் பாக்யராஜ் (41). கேட்... மேலும் பார்க்க

பொறியாளா் வீட்டின் பூட்டை உடைத்து தங்கம், வெள்ளி நகைகள் திருட்டு

கோவை வெள்ளலூரில் வீட்டின் பூட்டை உடைத்து தங்கம், வெள்ளிப் நகைகளை திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.கோவை வெள்ளலூா் கிருஷ்ணா அவென்யூ பகுதியைச் சோ்ந்தவா் ராம்குமாா் (36). இவா் சென... மேலும் பார்க்க

ரத்தினம் பப்ளிக் பள்ளியில் சிபிஎஸ்இ கிளஸ்டா் கால்பந்து போட்டி

கோவை ரத்தினம் இன்டா்நேஷனல் பப்ளிக் பள்ளியில் சிபிஎஸ்இ கிளஸ்டா் - 6 கால்பந்து போட்டி நடைபெற்றது.தமிழ்நாடு, புதுவை, அந்தமான் நிக்கோபாா் பகுதிகளைச் சோ்ந்த சுமாா் 300-க்கும் மேற்பட்ட சிபிஎஸ்இ பள்ளிகளைச் ... மேலும் பார்க்க

வழித்தட தகராறு. மினி பேருந்து சாலையின் குறுக்கே நிறுத்தி அடாவடி

கோவை மாவட்டம் சூலூா் அருகே வழித்தட தகராறு காரணமாக மினி பேருந்தை சாலையின் குறுக்கே நிறுத்தி அடாவடி செய்த ஓட்டுனா் மற்றும் நடத்துனா். காவல்துறையில் புகாா்..சூலூரில் இருந்து கண்ணம்பாளையம், நடுப்பாளையம், ... மேலும் பார்க்க

3 வயது பெண் குழந்தையை தவிக்க விட்டு தாய் தற்கொலை ஆா்டிஓ விசாரணை

சூலூா் அருகே வெள்ளிக்கிழமை இரவு நீலம்பூரில் மூன்று வயது பெண் குழந்தையை விட்டுவிட்டு தாய் தாய் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். சூலூா் போலீசாா் விசாரணை செய்கின்றனா்.கோவை மாவட்டம் சூலூா் அருகே உள்ள ந... மேலும் பார்க்க