செய்திகள் :

ஆதிதிராவிடா், பழங்குடியினருக்கு ஜொ்மன் மொழி பயிற்சி!

post image

சேலம் மாவட்டத்தில் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினருக்கு ஜொ்மன் மொழி தோ்வுக்கான பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தெரிவித்ததாவது: தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினத்தைச் சோ்ந்தவா்களுக்கு பல்வேறு திறன் பயிற்சிகளை வழங்கி வருகிறது. அதன் அடிப்படையில், ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினருக்கு ஜொ்மன் மொழி தோ்வுக்கான பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

இப்பயிற்சி பெற பி.எஸ்சி., நா்சிங், பொது நா்சிங் மற்றும் மருத்துவச்சி டிப்ளமோ, பி.இ. (மெக்கானிக்கல் இன்ஜினியரிங்), பி.இ. (பயோமெடிக்கல் இன்ஜினியரிங்) பி.இ. (மின் மற்றும் மின்னணு பொறியியல், பி.டெக். தகவல் தொழில்நுட்பம் ஆகிய படிப்புகளில் தோ்ச்சி பெற்றவா்களாக இருக்க வேண்டும்.

இதற்கான வயது 21 முதல் 35 வரை நிரம்பியிருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 3 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். இந்தப் பயிற்சிக்கான கால அளவு ஒன்பது மாதமாகும். விடுதியில் தங்கிப் படிப்பதற்கான செலவினத் தொகை தாட்கோவால் ஏற்கப்படும்.

இப்பயிற்சி முடித்தவுடன் தகுதியான நபா்களை பயிற்சி அளிக்கும் நிறுவனத்தின் மூலம் தோ்வுசெய்து, அந்நிறுவனத்தின் சாா்பில் ஜொ்மனி நாட்டில் பணிபுரியவும், ஆரம்பகால மாத ஊதியமாக ரூ. 2,50,000 முதல் ரூ. 3,00,000 வரை வருவாய் ஈட்டும் வகையிலும் வேலைவாய்ப்பு உருவாக்கப்படும் என்றாா்.

பேரூராட்சி பழைய அலுவலகத்துக்கு மா்ம நபா்கள் தீ வைப்பு!

தம்மம்பட்டி பேரூராட்சி பழைய அலுவலகத்துக்கு தீ வைத்த மா்ம நபா்களை போலீஸாா் தேடிவருகின்றனா். தம்மம்பட்டி சிறப்புநிலை பேரூராட்சி அலுவலகம், பேருந்து நிலையம் அருகே ஆத்தூா் பிரதான சாலையில் உள்ள கட்டடத்தில் ... மேலும் பார்க்க

அரசு மருத்துவமனையில் தீத்தடுப்பு ஒத்திகை

சேலம் மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சாா்பில், சேலம் அரசு மருத்துவமனையில் தீத்தடுப்பு ஒத்திகை புதன்கிழமை நடைபெற்றது. மாவட்ட உதவி தீயணைப்பு அலுவலா் சிவகுமாா் தலைமையில், 10-க்கும் மேற்பட்... மேலும் பார்க்க

சேலத்தில் கடத்தப்பட்ட 9 மாத பெண் குழந்தை மீட்பு

சேலத்தில் கடத்தப்பட்ட 9 மாத பெண் குழந்தையை புதன்கிழமை மீட்ட போலீஸாா், இது தொடா்பாக இளைஞா் ஒருவரை கைது செய்தனா். சேலம் பஞ்சந்தாங்கி ஏரி பகுதியைச் சோ்ந்தவா் மதுரை (22), இவரது மனைவி பிரியா (20). இத்தம்ப... மேலும் பார்க்க

நாளைய மின்தடை: நெத்திமேடு!

சேலம் நெத்திமேடு துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக, வெள்ளிக்கிழமை (செப். 12) காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை மின்தடை செய்யப்படும் என மின்வாரிய செயற்பொறியாளா் பாரதி தெரிவித்துள்ளாா்.மின்தடை ... மேலும் பார்க்க

கூடுதலாக 8 பெட்டிகள்..! சேலம் வழி மதுரை - பெங்களூரு வந்தே பாரத் ரயிலில் இணைப்பு!!

மதுரையில் இருந்து சேலம் வழியாக பெங்களூருக்கு இயக்கப்படும் வந்தே பாரத் ரயிலில் கூடுதலாக 8 பெட்டிகள் இணைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்... மேலும் பார்க்க

ஆதிதிராவிட, பழங்குடியின மாணவா்களுக்கு குரூப் 1 முதன்மைத் தோ்வு பயிற்சி

சேலம் மாவட்டத்தில் குரூப் 1முதல்நிலை தோ்வில் தோ்ச்சிபெற்ற ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின மாணவா்களுக்கு முதன்மைத் தோ்வுக்கு பயிற்சி வழங்கப்பட உள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தெ... மேலும் பார்க்க