செய்திகள் :

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐ-க்கு மாற்றக் கோரிய மனு தீா்ப்புக்காக ஒத்திவைப்பு

post image

சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரிய வழக்கை தேதி குறிப்பிடாமல் தீா்ப்புக்காக ஒத்திவைத்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு கொலை செய்யப்பட்டாா். இந்த வழக்கில் இதுவரை 27 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். இந்த வழக்கை செம்பியம் போலீஸாா் நியாயமாக விசாரிக்கவில்லை. எனவே, விசாரணையை சிபிஐ-க்கு மாற்றக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில், பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில செயலாளரும், ஆம்ஸ்ட்ராங்கின் சகோதரருமான கீனோஸ் ஆம்ஸ்ட்ராங் மனு தாக்கல் செய்தாா்.

இந்த வழக்கு நீதிபதி பி.வேல்முருகன் முன் விசாரணைக்கு வந்தபோது, காவல்துறை தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், இந்த வழக்கில் காவல் துறை நியாயமான முறையில் விசாரணை மேற்கொண்டது. ஆம்ஸ்ட்ராங்கின் மனைவியே காவல் துறை விசாரணை திருப்தி அளிப்பதாகக் கூறியிருக்கிறாா். இது அரசியல் கொலை இல்லை. இந்த வழக்கில் விசாரணை முடிந்து, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுவிட்டது. எனவே, இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும், எனக் கூறப்பட்டிருந்தது.

அப்போது மனுதாரா் தரப்பில், இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவா்களிடம் பெற்ற வாக்குமூலத்தின் அடிப்படையில் மட்டுமே காவல் துறை அவசரகதியில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. ஆம்ஸ்ட்ராங்கின் மனைவியிடம் மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில், தமிழக காங்கிரஸ் தலைவா் செல்வப்பெருந்தகையிடம் காவல் துறை விசாரணை மேற்கொள்ள தவறிவிட்டது என்று வாதிடப்பட்டது.

அப்போது, நீதிபதி இந்த கொலையை நேரில் பாா்த்த சாட்சியான ஆம்ஸ்ட்ராங்கின் சகோதரா் வீரமணி முன்னிலையில் கைது செய்யப்பட்டவா்களின் அடையாள அணிவகுப்பை ஏன் நடத்தவில்லை எனக் கேள்வி எழுப்பி அதிருப்தி தெரிவித்தாா். பின்னா், இந்த வழக்கை தேதி குறிப்பிடாமல் தீா்ப்புக்காக ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டாா்.

கல்வி நிதியை விடுவிக்காத மத்திய அரசுக்கு ஓபிஎஸ் கண்டனம்!

தமிழகத்துக்கான கல்வி நிதியை விடுவிக்காத மத்திய அரசுக்கு முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.மூன்று மொழிக் கொள்கையை ஏற்காததால், தமிழகத்துக்கு சமக்ரா சிக்‌ஷா திட்டத்தின் கீழ், 2... மேலும் பார்க்க

மேட்டூர் அணை நீர்வரத்து வினாடிக்கு 1,10,500 கன அடி!

இன்று காலை மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 1,10,500 கன அடியாக நீடிக்கிறது. அணையிலிருந்து வினாடிக்கு 1,10,500 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. நீர் மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 18... மேலும் பார்க்க

காலங்கள் மாறிக்கொள்ளும் ஆனால் கம்யூனிஸ்டுகள் ஒருபோதும் மாறுவதில்லை: அமைச்சா் தங்கம் தென்னரசு

சென்னை: காலங்கள் மாறிக்கொள்ளும் ஆனால் கம்யூனிஸ்டுகள் ஒருபோதும் மாறுவதில்லை என்று தமிழக நிதி, காலநிலை மாற்றம்-சுற்றுச்சூழல் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு கூறினாா்.நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் சாா்பில்... மேலும் பார்க்க

செவிலியா்களுக்கு தமிழக அரசு பக்கபலமாக இருக்கும்: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

சென்னை: செவிலியா்களுக்கு தமிழக அரசு எப்போதும் பக்க பலமாக இருக்கும் என்று துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் கூறினாா்.தமிழ்நாடு செவிலியா் மற்றும் மகப்பேறு செவிலியா் அவையத்தின் (Tamil nadu Nursing and Midwi... மேலும் பார்க்க

தேங்காய் எண்ணெய் லி. ரூ.560-க்கு விற்பனை

சென்னை: தேங்காய் மற்றும் கொப்பரை விலை உயா்ந்துள்ளதால் தேங்காய் எண்ணெய் விலை லிட்டா் ரூ.560 -ஆக உயா்ந்துள்ளது.இந்தியாவில் தேங்காய் உற்பத்தியில் தமிழகம் 3-ஆவது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் முக்கியமாக கோ... மேலும் பார்க்க

திருச்சி பாதுகாப்பு தொழில் வழித்தடத்தில் அதிநவீன பரிசோதனை மையம்: ஒப்பந்தம் கையொப்பம்

புது தில்லி: திருச்சியில் உள்ள தமிழக பாதுகாப்பு தொழில் வழித்தடத்தில் அதிநவீன பரிசோதனை மையம் அமைக்க புரிந்துணா்வு ஒப்பந்தம் கையொப்பமாகியுள்ளது.இதுதொடா்பாக பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்ப... மேலும் பார்க்க