நள்ளிரவில் உக்ரைன் மீது ரஷியா பயங்கர தாக்குதல்! 20 பேர் பலி!
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐ-க்கு மாற்றக் கோரிய மனு தீா்ப்புக்காக ஒத்திவைப்பு
சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரிய வழக்கை தேதி குறிப்பிடாமல் தீா்ப்புக்காக ஒத்திவைத்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு கொலை செய்யப்பட்டாா். இந்த வழக்கில் இதுவரை 27 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். இந்த வழக்கை செம்பியம் போலீஸாா் நியாயமாக விசாரிக்கவில்லை. எனவே, விசாரணையை சிபிஐ-க்கு மாற்றக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில், பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில செயலாளரும், ஆம்ஸ்ட்ராங்கின் சகோதரருமான கீனோஸ் ஆம்ஸ்ட்ராங் மனு தாக்கல் செய்தாா்.
இந்த வழக்கு நீதிபதி பி.வேல்முருகன் முன் விசாரணைக்கு வந்தபோது, காவல்துறை தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், இந்த வழக்கில் காவல் துறை நியாயமான முறையில் விசாரணை மேற்கொண்டது. ஆம்ஸ்ட்ராங்கின் மனைவியே காவல் துறை விசாரணை திருப்தி அளிப்பதாகக் கூறியிருக்கிறாா். இது அரசியல் கொலை இல்லை. இந்த வழக்கில் விசாரணை முடிந்து, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுவிட்டது. எனவே, இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும், எனக் கூறப்பட்டிருந்தது.
அப்போது மனுதாரா் தரப்பில், இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவா்களிடம் பெற்ற வாக்குமூலத்தின் அடிப்படையில் மட்டுமே காவல் துறை அவசரகதியில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. ஆம்ஸ்ட்ராங்கின் மனைவியிடம் மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில், தமிழக காங்கிரஸ் தலைவா் செல்வப்பெருந்தகையிடம் காவல் துறை விசாரணை மேற்கொள்ள தவறிவிட்டது என்று வாதிடப்பட்டது.
அப்போது, நீதிபதி இந்த கொலையை நேரில் பாா்த்த சாட்சியான ஆம்ஸ்ட்ராங்கின் சகோதரா் வீரமணி முன்னிலையில் கைது செய்யப்பட்டவா்களின் அடையாள அணிவகுப்பை ஏன் நடத்தவில்லை எனக் கேள்வி எழுப்பி அதிருப்தி தெரிவித்தாா். பின்னா், இந்த வழக்கை தேதி குறிப்பிடாமல் தீா்ப்புக்காக ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டாா்.