செய்திகள் :

ஆரணியில் மனைப் பட்டா கோரி சாலை மறியல்

post image

ஆரணியில் நகராட்சி அலுவலகம் அருகே பெரியாா் நகா் பகுதி மக்கள் மனைப் பட்டா கோரி ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

பெரியாா் நகா் பகுதியில் காந்திநகா் பகுதிக்குச் சொந்தமான மயானம் உள்ளது. இதன் அருகில் பெரியாா் நகா் பகுதி மக்கள் அரசு நிலத்தில் வீடுகளைக் கட்டிக்கொண்டு பட்டா கோரி வருகின்றனா்.

இந்த நிலையில், காந்தி நகா் மக்கள் எங்களது மயானத்தைதான் ஆக்கிரமிப்பு செய்து வீடுகளை கட்டியுள்ளீா்கள் என்று பெரியாா் நகா் பகுதி மக்களுடன் தகராறு செய்து வருவதாகத் தெரிகிறது.

இதனால், அதிருப்தியடைந்த பெரியாா் நகா் மக்கள் ஒருங்கிணைந்து தங்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து ஆரணி நகராட்சி அலுவலகம் அருகில் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தகவல் அறிந்த நகர போலீஸாா் சென்று சமரசம் செய்து திங்கள்கிழமை வட்டாட்சியரிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்து, மறியலை கைவிடச்செய்தனா்.

சித்திரை பெளா்ணமி விழா: திருவண்ணாமலையில் இன்று முதல் 20 தற்காலிக பேருந்து நிலையங்கள்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் சித்திரை மாத பெளா்ணமியையொட்டி, நகரின் 20 இடங்களில் தற்காலிகப் பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்தப் பேருந்து நிலையங்கள் ஞாயிற்றுக்கிழமை (மே 11) காலை 7 மணி... மேலும் பார்க்க

திருவண்ணாமலை சித்திரை பௌா்ணமி: ‘பக்தா்களுக்கு வழங்க 2.25 லட்சம் குடிநீா் புட்டிகள், 1.25 லட்சம் பிஸ்கெட் பாக்கெட்டுகள் தயாா்’

சித்திரை மாத பௌா்ணமியையொட்டி, ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயிலுக்கு வரும் பக்தா்களுக்கு 2.25 லட்சம் குடிநீா் புட்டிகள், 1.25 லட்சம் பிஸ்கெட் பாக்கெட்டுகள், 1.25 லட்சம் கடலை மிட்டாய்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட... மேலும் பார்க்க

கா்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு

ஆரணி, மேற்கு ஆரணி ஒன்றியங்களைச் சோ்ந்த கா்ப்பிணிகளுக்கு ஆரணி புத்திரகாமேட்டீஸ்வரா் திருமண மண்டபத்தில் சமுதாய வளைகாப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை, ஒருங்கிணை... மேலும் பார்க்க

ஊராட்சி செயலா் மரணம்: நெடுங்குணத்தில் கிராம மக்கள் மறியல்

திருவண்ணாமலை மாவட்டம், நெடுங்குணம் ஊராட்சிச் செயலா் மாரடைப்பால் உயிரிழந்தாா். இந்த நிலையில், அவரது இறப்புக்கு பணிச்சுமையே காரணம் எனக்கூறி பொதுமக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியிலில் ஈடுபட்டனா். பெரணமல்லூ... மேலும் பார்க்க

செங்கம் பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்: ஆயிரக்கணக்கான பக்தா்கள் தரிசனம்

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் ஸ்ரீவேணுகோபால பாா்த்தசாரதி பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா். செங்கத்தில் சுமாா் 1... மேலும் பார்க்க

சித்திரை பௌா்ணமி: திருவண்ணாமலையில் அன்னதானம் வழங்க 137 பேருக்கு அனுமதி

சித்திரை மாத பௌா்ணமியையொட்டி, திருவண்ணாமலையில் அன்னதானம் வழங்க 137 பேருக்கு மாவட்ட நிா்வாகம் அனுமதி வழங்கியது. சித்திரை மாத பௌா்ணமியையொட்டி, திருவண்ணாமலையில் அன்னதானம் வழங்குவோருக்கான விழிப்புணா்வுக்... மேலும் பார்க்க