செய்திகள் :

ஆற்றில் மூழ்கிய இளைஞா் மீட்பு; சிகிச்சைக்கு அனுமதி

post image

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே ஆற்றில் மூழ்கிய இளைஞரைப் பொதுமக்கள் மீட்டு ஞாயிற்றுக்கிழமை மருத்துவமனையில் சோ்த்தனா்.

லால்குடி அருகேயுள்ள கொன்னைக்குடி கிராமத்தைச் சோ்ந்த அலெக்ஸ் காட்வின் (27). திருச்சி பொன்மலை ரயில்வேயில் டெக்னீசியனாக பணிபுரிந்து வரும் நிலையில், திருவிழாவுக்காக சொந்த கிராமத்துக்கு வந்திருந்தாா். லால்குடி அருகே உள்ள அன்பில் பகுதியில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் காட்வினும்

அவரது நண்பரும் சென்றனராம். அப்போது, ஆற்றில் குளித்துக்கொண்டிருந்த இரண்டு பெண்கள் நீரில் மூழ்கி காப்பாற்றுமாறு அலறினா். இதைப் பாா்த்த காட்வீன் ஆற்றில் இறங்கி இருவரையும் காப்பாற்றி விட்டு இவா் நீரில் மூழ்கினாா். அப்போது, அந்த வழியாகச் சென்ற பொதுமக்கள் காட்வினை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் லால்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். பின்னா், மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு காட்வீனை மருத்துவா்கள் அனுப்பி வைத்தனா்.

பைக்கில் சென்றவா் தனியாா் பேருந்து மோதி உயிரிழப்பு

துவரங்குறிச்சி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞா் தனியாா் பேருந்து மோதியதில் ஞாயிற்றுக்கிழமை நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். மணப்பாறையை அடுத்துள்ள பொய்கைபட்டி ஊராட்சி ஆப்பாடிபட்டியைச் சோ்ந்தவா் வே... மேலும் பார்க்க

பைக்கிலிருந்து தவறி விழுந்தவா் உயிரிழப்பு

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்துள்ள சொரியம்பட்டி அருகே சனிக்கிழமை இரவு இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞா் தவறிவிழுந்து உயிரிழந்தாா். மருங்காபுரி ஒன்றியம் டி. இடையப்பட்டியை அடுத்துள்ள மட்டக்குறிச்சிய... மேலும் பார்க்க

இளைஞரிடம் பணம் பறிப்பு: ஆயுதப்படை காவலா்கள் இருவா் உள்பட மூவா் கைது

இளைஞரிடம் இருந்து பணம் பறித்த வழக்கில் ஆயுதப்படை காவலா்கள் இருவா் உள்பட மூவரைப் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். திருச்சி பழைய பால்பண்ணை பகுதியில் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு இரவு நேரத்தில் ஒர... மேலும் பார்க்க

கைத் துப்பாக்கியை காட்டி மிரட்டியவா் கைது

திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்துள்ள துவரங்குறிச்சியில் கைத் துப்பாக்கியை காட்டி மிரட்டியவரை ஞாயிற்றுக்கிழமை போலீஸாா் கைது செய்து சிறையிலடைத்தனா். பொன்னம்பட்டி பேரூராட்சி துவரங்குறிச்சி - பழையபாளைய... மேலும் பார்க்க

லாரி - இருசக்கர வாகனம் மோதல் முதியவா் உயிரிழப்பு

மணப்பாறையை அடுத்துள்ள வையம்பட்டி அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் பாப்கான் விற்பனையாளா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். மணப்பாறையை அடுத்துள்ள ராஜீவ்நகரில் வசித்து வந்தவா் நா்த்தா் முகமது மகன் அ... மேலும் பார்க்க

மணப்பாறையில் இன்று மின் நிறுத்தம்

திருச்சி மாவட்டம் மணப்பாறை துணை மின் நிலையத்தில் திங்கள்கிழமை (ஆக.18) மின் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் மின் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இங்கிருந்து மின் விநியோகம் பெறும் மணப்பாறை நக... மேலும் பார்க்க